This entry is part 10 of 12 in the series 1 ஜனவரி 2023
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத்தோட்டம் வழக்கமாக வருடா வருடம் வழங்கும் இயல்விருது கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022 இல் இரண்டு இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம் கனடா ரொறொன்ரோவில் வழங்கப்படும். இம்முறை இலங்கையை பூர்வீகமாகக்கொண்டவரும் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுள்ளவருமான எழுத்தாளர் லெட்சுமணன் முருகபூபதிக்கும், இந்திய எழுத்தாளரான பெங்களுரில் வதியும் பாவண்ணனுக்கும் இயல் விருது வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட இயல்விருது தொடர்பான செய்தியறிக்கை பின்வருமாறு: லெட்சுமணன் முருகபூபதி […]
அழகியசிங்கர் அக்டோபர் 1986 ஆம் ஆண்டு என்னுடைய குறுநாவல் ‘போராட்டம்’ தி.ஜானகிராமன் பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டு கணையாழியில் பிரசுரம் ஆனது. ஒவ்வொரு ஆண்டும் என் குறுநாவல்களைப் போட்டியில் தேர்ந்தெடுத்தவர் அசோகமித்திரன், ஓராண்டு மட்டும் இந்திரா பார்த்தசாரதி. அனால் . இப்போது எந்தப் போட்டிக்கும் என் குறுநாவலாகட்டும், நாவலாகட்டும், சிறுகதை ஆகட்டும், கவிதை ஆகட்டும் அனுப்ப வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கிறேன். ஏன்? இப்போது நான் எதை எழுதினாலும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். சமீபத்தில் ஒரு சிறுகதைப் போட்டிக்கு ஒரு சிறுகதை எழுதி அனுப்பினேன். அந்தக் […]
வணக்கம்,காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு தொடங்கியாயிற்று. மாசி மாத இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.இதழுக்காக சிற்றிதழ் சார்ந்த ஆய்வுகளுடன் கூடிய கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.கட்டுரைகள் இதழின் 4 பக்கங்களுக்கு அதிகமாகாமல் இருத்தல் அவசியம்.உலகின் எந்தவொரு பாகத்திலும் பல இதழ்கள் வந்தன.அவை பற்றிய தேடலுக்கு உதவும்முகமாக கட்டுரைகளை எழுதுங்கள்.ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்.சிற்றிதழ்களின் இதழாளர்கள்(அமரத்துமான) பற்றியும் எழுதுங்கள்.கட்டுரைகள் லதா எழுத்துருவில் அனுப்புங்கள்.நட்புடன்,முல்லைஅமுதன்mahendran54@hotmail.com
வணக்கம் இலக்கிய ஆர்வலர்களிடையே வாசிப்பு பழக்கத்தையும், எழுத்தாற்றலையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, சிறுகதை விமர்சனப் போட்டி ஒன்றை ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினர்’ நடத்த இருக்கிறார்கள். இந்த அறிவித்தலைத் தங்கள் பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். தங்கள் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி. …………………………………………… ……………………………. உங்கள் திறமைக்கு அதிஷ்டம் காத்திருக்கிறது வெல்லுங்கள் 150,000 ரூபாய்கள்! எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் உலகளாவிய திறனாய்வுப் போட்டி – 2023 தமிழ் இலக்கிய உலகில் […]