கு. அழகர்சாமி (1) சொற்காட்டில் அர்த்தங்களின் பறவை இரைச்சல். இரைச்சலின் புழுதியில் வானுயரும் ஒலிக் கோபுரம். மொழியின் செங்கற்கள் உருவி சொற்கள் சரிகின்றன ஒலிகளில். அலற பிரபஞ்சம் எப்படி கேட்டது ஒருவனுக்கு மட்டும் அது- அவன் ஓவியத்தில் நிறங்களும் அலற?* ஒரு பூவைப் பறிக்கும் போது உலகு குலுங்குவது யாருக்கு கேட்கிறது? நிலத்தினுள் விதைக்கப்பட்ட பிணங்களெல்லாம் முளைக்க அன்றிரவைப் பொடிப்பொடியாக்கி இடித்த இடி என்ன கூறிற்று?**- பிறந்த சிசுவின் முதல் அலறலிடம் கேட்க வேண்டும் அதை. *குறிப்பு: […]
சசிகலா விஸ்வநாதன் சொல்லிய சொல்லுக்கும், சொல்லப் போகும் அடுத்த சொல்லுக்கும் இடையே, நெருடலாக; அது.. ஒரு நொடியா? ஒரு யுகமா? இடைவெளி கடினம். சொல்லும் நேரம் தவற, சொல் தடுமாற, சொல்லும் பொருளும் மாற்றம் அடைய, சொல் மாறி வரும் நாவில். சந்தியில், மனம் பொருந்தா சந்தியில் சந்தி சிரிக்க; சொற்கள் தனித்தனியாக; சந்தியின் சந்தியில் என் சொற்கள். சசிகலா விஸ்வநாதன் சசிகலா விஸ்வநாதன்
சசிகலா விஸ்வநாதன் நட்சத்திர உணவு விடுதியில், குதிக்கும் மெழுகுவர்த்தியின் மங்கின ஒளியில், இருள் கவிந்த குளிரூட்டப்பட்ட உணவு கூடத்தில், மெத்தென்ற நுரையிருக்கையில் நான் அமர; பனி வெள்ளை கையுறையுடன், வெண் சீருடையில் பணிவுடன் பணியாள் ஒருவன்; பிழிந்து வைத்த பழைய சோறு; அலங்கார பளிங்கு வட்டிலில் வகுந்து வைத்த பச்சை மிளகாய்; சிறு குத்து குச்சிகளுடன்; திருத்தின பச்சை வெங்காய சிதறல் சிறு தாமரையென அலங்காரமாய், பங்குனி வெயிலில், பசித்த வயிற்றில் இறங்கும் நேரம் நினைவில் வரும் […]
ஆர் வத்ஸலா அவன் அழகாய் இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லை ஆனால் அவன் தோற்றம் எனக்குப் பிடித்திருந்தது அவனுடைய சில குணங்கள் எனக்குப் பிடிக்கவில்லை ஆனால் அவற்றை வேறொருவர் விமர்சித்தால் எனக்கு கோபம் வரும் சுய மதிப்பு மிகுந்தவள் நான் ஆனால் சில சமயம் அவனுடைய காரணமற்ற கோபங்களை சிறுபிள்ளைத்தனம் என பொறுத்துப் போவேன் அவன் போன பிறகு ஒரு சந்தேகம் எழுகிறது நான் அவனை காதலித்தேனோ?
கைத்தவறி விழுந்த காலத்தை தேடுகின்றேன். உங்களின் லாந்தரில் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் தெரிகின்றது வீடோ காடோ எனக்கு வேண்டியது கவிதை எழுத கொஞ்சம் வெளிச்சம் ஒரு துண்டு நிலம். நான் மில்டன் இல்லை, இழந்த சுவர்க்கத்தை மீட்க. என்னிடம் கண்களில் இன்னமும் பார்வை இருக்கின்றது உதிக்கும் சூரியனைப்பார்க்க மேகத்தோடு மோகம் கொள்ளும் நிலவைப்பார்க்க. நுனிப்புல்லில் மிளிரும் பனித்துளிப்பார்க்க வசந்தக்காலத்தின் பரவசத்தைப்பார்க்க உங்களின் ஓலைச்சுவடி கவிதையும் வாசிக்க. ஜெயானந்தன்.
ரவி அல்லது மிடறுகளின் சுவையில் மிதந்து கிடக்கிறது வெளி. வெற்றுக் கோப்பையின் இறுதிப் பருகலில்தான் உயிர்த்திருக்கிறது தருணம் அழைத்துவிட்ட ஏதோவொன்றுக்காக கவனம் கொடுத்து. யாவற்றுக்குமான இந்த அனுசரணையில் இச்சொற்களுக்கு மட்டும் தேவையாக இருக்கிறது கதகதப்பூட்டும் மௌனம் இத்தனிமையின் ஓய்வைப்போல. *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
குரு அரவிந்தன் இருண்ட கண்டம் என்று முன்பு அழைக்கப்பட்ட ஆபிரிக்காவின் கெனியா நாடு, சுமார் 224,081 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. சுமார் 245 மைல் நீளமான மாறா என்றதொரு நதி தெற்கு நோக்கிச் சென்று, விக்ரோறியா ஏரியில் சங்கமிக்கின்றது. இந்த ஆற்றை ‘மரண ஆறு’ என்று உள்ளுர் மக்கள் அழைக்கிறார்கள். இதற்குக் காரணம் இந்த ஆற்றில் உயிர்ப்பலி எடுக்கும் முதலைகளும், நீர்யானைகளும் நிறைந்திருப்பதுதான். இந்த ஆற்றின் கரைகளில்தான் மாசிமாறா தேசியப் பூங்கா அமைந்திருக்கிறது. இங்கே உள்ள […]
வசந்ததீபன் ஞானஸ்தானம் பெறுகிறார்கள் தண்ணீரில் மூழ்கி எழுந்தால் பரலோகராஜ்யம் தரித்திரம் வாசற்படியில் படுத்துக் கிடக்கிறது நொய்யல் அரிசியை கஞ்சி வைக்கிறாள் கிழவி நீண்ட நாள் பட்டினி முடிவாகும் நாயுக்கு கொஞ்சம் ஊற்ற நினைத்தாள் பூசணிக்கூடால் ஆன தம்பூரா மீட்டி வருகிறான் குறி சொல்லி பண்டாரம் தெருக்களில் இரந்து பாடுகிறான் தோளில் ஊசலிடும் துணித்தொங்கலில் காற்றுதான்நிரம்புகிறது ஆட்டை உரிக்கிறார்கள் தூரத்தில் கொட்டுச்சத்தம் கேட்கிறது ஜனங்கள் சாப்பிட பறக்கிறார்கள் பக்குவமற்ற அவனால் பிரச்சனை பக்குவமான இவனால் குழப்பம் அலைகள் ஓய்வதில்லை […]
நவநீத கிருஷ்ணன் லட்சம் கோடி காதல் கண்ட கரை கொண்டவள் நீ காதலர் கொஞ்சும் காட்சியின் சாட்சி நீ நுரை தள்ள திரும்பத் திரும்பக் கரை வந்து நோகிறாய் நீ பேர் ஆழம் பெரு அகலம் கொண்டு பேரன்பு என்ன என்று புத்தி சொல்கிறாய், அதை கத்தி சொல்கிறாய் கேளா காதும் பாரா கண்ணும் கொண்ட மானுடர் நாங்கள் என்றறியாத நீ
இரா. ஜெயானந்தன் அவள் அவனின் இருட்டை சுமந்து சென்றாள் பண்ணிரண்டு வயதில் . சொல்ல முடியா வலி இதயம் முழுதும் ஊர்ந்து செல்ல நான்கு கால்கள் மிருகத்தை விட கேவலமாக பார்க்கப்பட்டாள் சமூகப்பார்வையில். இருட்டில் மறைந்த ஆணை பார்க்க மீண்டும் அவள் முயலவில்லை. ஏனோ எல்லா ஆண்களின் முகங்களிலும் காம விலாசம் பார்த்து பயந்தாள் சிறுமி. இருட்டைக்கண்டு அலறினாள் அலறினாள். மசூதிக்கு சென்றார்கள். மாரியம்மன் கோயில் பேச்சி அம்மனிடம் வேண்டினார்கள் பெண்ணை பெற்றவர்கள். சிறுமியின் கண்கள் இருட்டைக்கண்டால் […]