ஆர் வத்ஸலா மறுபடியும் அவன் மௌனம் நீளுகிறது காத்திருந்து கோபித்துக் கொண்டு அவனை சபித்து பின் நாக்கை கடித்து கன்னத்தில் போட்டுக் கொண்டு அவன் தரப்பு சாக்குகளை- அவன் அம்மாவுக்கு உடம்பு சுகமில்லை அவன் நண்பனுக்கு பெரிய பிரச்சினை அவனுக்கு மனச் சோர்வு- இப்படி ஏதாவது கற்பித்துக் கொண்டு பின் சலித்து அழுது சூளுரைக்கிறேன் ‘இன்றோடு அவன் உறவை துண்டித்துக் கொள்கிறேன் நிரந்தரமாக’ என்று தயவு செய்து கேட்காதீர்கள் யாரும் எத்தனையாவது முறையாக என்று
ஆர் வத்ஸலா தெரியும் என்னை சந்திக்க வர மாட்டாய் நீ என்று தெரியும் பணியில் மூழ்கி இருக்கும் உன்னை சந்திக்க நான் வருவதை விரும்ப மாட்டாய் நீ என்று தெரியும் என்னை கைபேசியில் அழைக்க மாட்டாய் நீ என்று தெரியும் பணியில் மூழ்கி இருக்கும் உன்னை நான் கைபேசியில் அழைப்பதை விரும்ப மாட்டாய் நீ என்று தெரியும் எனக்கு நீ குறுஞ்செய்தி அனுப்ப மாட்டாய் என்று தெரியும் பணியில் மூழ்கி இருக்கும் உனக்கு நான் குறுஞ்செய்தி அனுப்புவதை […]
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா, சென்னை @ பாண்டவர் கூத்தில் தருமர் மகிழுந்தில் சென்ற பாட்டி வீட்டிற்கு நடந்து வந்தார் வாக்குச்சாவடி @ விடாமுயற்சியே வெற்றி பேச வந்தவரின் ஒலிவாங்கியில் தொடர் சிக்கல் @ பிள்ளையார் சிலை மறைத்தபடி பேசிக்கொண்டிருக்கிறார் கைபேசியில் பூசாரி @ வீட்டைப் பூட்டிய பின் இழுத்து உறுதி செய்தார் பணிக்குச் செல்லும் திருடன் @ பசிக்கும் வயிறு அவசரமாய் சாப்பிட்டான் ஆகாரத்துக்கு முன் மாத்திரை @ குத்துச்சண்டை வீரர் கதறி கதறி அழுகிறார் சொத்தைப் […]
கு. அழகர்சாமி (1) சொற்காட்டில் அர்த்தங்களின் பறவை இரைச்சல். இரைச்சலின் புழுதியில் வானுயரும் ஒலிக் கோபுரம். மொழியின் செங்கற்கள் உருவி சொற்கள் சரிகின்றன ஒலிகளில். அலற பிரபஞ்சம் எப்படி கேட்டது ஒருவனுக்கு மட்டும் அது- அவன் ஓவியத்தில் நிறங்களும் அலற?* ஒரு பூவைப் பறிக்கும் போது உலகு குலுங்குவது யாருக்கு கேட்கிறது? நிலத்தினுள் விதைக்கப்பட்ட பிணங்களெல்லாம் முளைக்க அன்றிரவைப் பொடிப்பொடியாக்கி இடித்த இடி என்ன கூறிற்று?**- பிறந்த சிசுவின் முதல் அலறலிடம் கேட்க வேண்டும் அதை. *குறிப்பு: […]
சசிகலா விஸ்வநாதன் சொல்லிய சொல்லுக்கும், சொல்லப் போகும் அடுத்த சொல்லுக்கும் இடையே, நெருடலாக; அது.. ஒரு நொடியா? ஒரு யுகமா? இடைவெளி கடினம். சொல்லும் நேரம் தவற, சொல் தடுமாற, சொல்லும் பொருளும் மாற்றம் அடைய, சொல் மாறி வரும் நாவில். சந்தியில், மனம் பொருந்தா சந்தியில் சந்தி சிரிக்க; சொற்கள் தனித்தனியாக; சந்தியின் சந்தியில் என் சொற்கள். சசிகலா விஸ்வநாதன் சசிகலா விஸ்வநாதன்
சசிகலா விஸ்வநாதன் நட்சத்திர உணவு விடுதியில், குதிக்கும் மெழுகுவர்த்தியின் மங்கின ஒளியில், இருள் கவிந்த குளிரூட்டப்பட்ட உணவு கூடத்தில், மெத்தென்ற நுரையிருக்கையில் நான் அமர; பனி வெள்ளை கையுறையுடன், வெண் சீருடையில் பணிவுடன் பணியாள் ஒருவன்; பிழிந்து வைத்த பழைய சோறு; அலங்கார பளிங்கு வட்டிலில் வகுந்து வைத்த பச்சை மிளகாய்; சிறு குத்து குச்சிகளுடன்; திருத்தின பச்சை வெங்காய சிதறல் சிறு தாமரையென அலங்காரமாய், பங்குனி வெயிலில், பசித்த வயிற்றில் இறங்கும் நேரம் நினைவில் வரும் […]
ஆர் வத்ஸலா அவன் அழகாய் இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லை ஆனால் அவன் தோற்றம் எனக்குப் பிடித்திருந்தது அவனுடைய சில குணங்கள் எனக்குப் பிடிக்கவில்லை ஆனால் அவற்றை வேறொருவர் விமர்சித்தால் எனக்கு கோபம் வரும் சுய மதிப்பு மிகுந்தவள் நான் ஆனால் சில சமயம் அவனுடைய காரணமற்ற கோபங்களை சிறுபிள்ளைத்தனம் என பொறுத்துப் போவேன் அவன் போன பிறகு ஒரு சந்தேகம் எழுகிறது நான் அவனை காதலித்தேனோ?
கைத்தவறி விழுந்த காலத்தை தேடுகின்றேன். உங்களின் லாந்தரில் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் தெரிகின்றது வீடோ காடோ எனக்கு வேண்டியது கவிதை எழுத கொஞ்சம் வெளிச்சம் ஒரு துண்டு நிலம். நான் மில்டன் இல்லை, இழந்த சுவர்க்கத்தை மீட்க. என்னிடம் கண்களில் இன்னமும் பார்வை இருக்கின்றது உதிக்கும் சூரியனைப்பார்க்க மேகத்தோடு மோகம் கொள்ளும் நிலவைப்பார்க்க. நுனிப்புல்லில் மிளிரும் பனித்துளிப்பார்க்க வசந்தக்காலத்தின் பரவசத்தைப்பார்க்க உங்களின் ஓலைச்சுவடி கவிதையும் வாசிக்க. ஜெயானந்தன்.
ரவி அல்லது மிடறுகளின் சுவையில் மிதந்து கிடக்கிறது வெளி. வெற்றுக் கோப்பையின் இறுதிப் பருகலில்தான் உயிர்த்திருக்கிறது தருணம் அழைத்துவிட்ட ஏதோவொன்றுக்காக கவனம் கொடுத்து. யாவற்றுக்குமான இந்த அனுசரணையில் இச்சொற்களுக்கு மட்டும் தேவையாக இருக்கிறது கதகதப்பூட்டும் மௌனம் இத்தனிமையின் ஓய்வைப்போல. *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
குரு அரவிந்தன் இருண்ட கண்டம் என்று முன்பு அழைக்கப்பட்ட ஆபிரிக்காவின் கெனியா நாடு, சுமார் 224,081 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. சுமார் 245 மைல் நீளமான மாறா என்றதொரு நதி தெற்கு நோக்கிச் சென்று, விக்ரோறியா ஏரியில் சங்கமிக்கின்றது. இந்த ஆற்றை ‘மரண ஆறு’ என்று உள்ளுர் மக்கள் அழைக்கிறார்கள். இதற்குக் காரணம் இந்த ஆற்றில் உயிர்ப்பலி எடுக்கும் முதலைகளும், நீர்யானைகளும் நிறைந்திருப்பதுதான். இந்த ஆற்றின் கரைகளில்தான் மாசிமாறா தேசியப் பூங்கா அமைந்திருக்கிறது. இங்கே உள்ள […]