(Song of Myself) என் மீது எனக்குப் பித்து (1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா என் மீது எனக்குப் பித்து என் மீதுள்ள பித்து மிகையானது களிப்புணர்வு எழுவது என்மேல் தான் எல்லாக் கணமும், எது நடந்தாலும் புல்லரிக்க வைத்திடும் பூரிப்பில் என்னை ! கணுக்கால் எனக் கெப்படி நெளிந்துள்ள தென என்னால் கூற முடியாது ! பிறரோடு நான் சேர்ந்துலாவும் […]
வினைகளின் சருகுகளைத் தீண்டிடவென புதிதாக விழுந்திருக்கிறது ஐங்கூர் பழுத்த இலை சிவப்புக் கலந்த நிறமதற்கு உடைசல்களின் சிதிலங்களுக்கிடையில் சிக்கியிருக்கிறது புதுத் தளிரொன்றும் எப்படிப் பூத்ததுவோ பசுமையெரிந்த செடிகளுக்கிடையில் எதற்கும் வாடிடா மலரொன்று அன்றியும் எந்தக் கனிக்குள் இருக்கின்றது அடுத்த மரத்துக்கான விதை எல்லா வாசனைகளும் பூக்களாகி நாசிக்குள் நுழையும் கணமொன்றில் செழித்த ஏரியின் கரைகளைக் காக்கின்றன ஓர மரங்கள் வசந்தத்தின் முகில் கூட்டங்களலையும் சுவரோவியங்களில் தோப்புக்கள் எவ்வளவு ரம்யமானதாயிருக்கின்றன இங்கு நீர் தேங்கிய குட்டைகளில் தலைகீழாக வளருகின்றன […]
தாகூரின் கீதப் பாமாலை – 58 தனிமை விளிம்பிலே வனிதை ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பரந்த இருள் மூட்டத்தில் தவறிப் போய் இரவு மலர் விழுந்தது உறக்கத்தின் வேலி ஓரத்தில் ! காலை இளம் பரிதி வீசும் முதல் கதிர்ச் சுடரை வணங்கு தற்கு குருட்டுத் தனமாய் இருட்டில் வெளியேறித் தவறுதலாய் தன்னந் தனியாய் அவள் வந்திருக் கிறாள் ! வெகு […]
(1819-1892) (புல்லின் இலைகள் –1) எதிலும் நீ இருக்கிறாய் ..! மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா உள்ளும் புறமும் தெய்வாம்சம் எனக்குள்ளது ! நான் எதைத் தொட்டாலும், யாரேனும் எனைத் தொட்டாலும் எனக்குப் புனித மாகும் ! பிரார்த்தனை மணத்தை விட எனது அக்குள்ளின் வாசனை மிக்க நேர்த்தி யானது ! எனது சிரமானது ஆலயம், பைபிள் போன்ற சமய விதிகளை விடச் சாலச் சிறந்தது ! ஒன்றைவிட நான் மேலாய் […]
செம்மல் இளங்கோவன் ராயிக்களி கம்புக்களி நாந்திங்க வேணுமின்னு ராப்பகலா கண்முழிச்சு திருகுக்கல்ல திருப்பித் திருப்பி பருப்பரச்சா பாவிமக பொடவைஎல்லாம் பொத்தலோடு ராவெல்லாந் தூங்காம மகன் எனக்கு கத சொல்வா விட்ட கொட்டாயி வத்திப் போயி அசந்திருப்பா வீல்னு கத்தி வெடுக்னு முழிச்சிருவேன் அள்ளி என்னை அணைச்சுக்கிட்டு அப்புறமும் முழுச்சிருப்பா நான்தூங்க உழைப்பெல்லாம் கொட்டிப்புட்டு களைப்போடு கண்ணயர்வா-ஆனாலும் வுடமாட்டேன் மணிக்கணக்கா கத கேப்பேன் இருந்தாலும் அலுக்காம கத சொல்வா ஒரு நாலு கத சொல்லாம சொகமில்லாம படுத்திருந்தா… சோலப்பாட்டிக்கு […]
காற்றின் கரங்களைக் கேட்கலாமென்றால் அது கரைந்து செல்லவே எத்தனிக்கிறது ஃபீனிக்ஸின் இறகுகளைக்கேட்கலாமென்றால் முழுதும் எரிந்தபின்னரே அவை கிடைக்குமெனத் தெரிகிறது. சாதகப்பறவையைக் கேட்கலாமென்றால் பெருமழை வேண்டிக்காத்துக்கிடக்கச் சொல்கிறது அன்னப்பறவையைக் கேட்கலாமென்றால் நீரிலிருந்து பிரித்தெடுக்கும் வரை காத்திருக்கச் சொல்கிறது மானின் விழிகளைக்கேட்கலாமென்றால் அதன் மருட்சியில் மனமே துவண்டு கிடைக்கிறது உன் மனத்தைக் கேட்கலாமென்றால் அது நொடிக்கொருதரம் மாறிக்கொண்டேயிருக்கிறது – சின்னப்பயல் (chinnappayal@gmail.com)
எஸ்.எம்.ஏ.ராம் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன. ஒரு வழி மூடினால் இன்னொன்று திறந்து கொள்ளும் என்று அவர்கள் சொன்னதெல்லாம் பொய் என்று நிரூபணமாகிவிட்டது. எஞ்சியிருப்பவை வெளிச்சத்துக்கும் காற்றுக்குமான சிறு சிறு துளைகள் மட்டுமே. அதனால் தானோ என்னமோ இன்னும் சுவாசம் மட்டும் நம்பிக்கையோடு ஓடிக்கொண்டிருக்கிறது..
ஏ.நஸ்புள்ளாஹ் மழை மனசு நேற்று முழுவதும் சூரியன் சூடேற்றிப் போடவே குளிரான பழைய நாள் பற்றியதான வண்ணத்துப் பூச்சி மனசு படபடப்பாயிருந்தது சில நேரங்களில் மழை நாட்களில் சும்மா வாய்க்கு வந்தபடி காலத்தை திட்டி திர்த்தது பற்றி இப்போது உடம்பு அம்மணமாக வெட்கப்பட்டுக் கொள்கிறது யன்னலருகே நின்று குளிரான பல நாட்களில் காலைப் பனியை மிக அழகாக ரசித்ததுண்டு மனசு பூரித்துப்போக விழுந்து கிடக்கும் ஒரு சூரியன் நாளைக்கூட விரும்பும்படியான ஒப்புதல் அளிக்கவில்லை மனசு. […]
நம்பி மரத்தடியில் இவன் செய்த தவம் எதுவென்று இப்போது புரிகின்றது சமீப தினங்களாய் காரணம் ஏதுமில்லாமலேயே அவனை பார்த்து குரைக்கும் நாய்களின் ஊளையில் சிரிப்பு வந்து விட்டது எனக்கு அனுபவத்தின் போதாத தன்மை உன் எல்லா நடத்தைகளிலும் அடையாளம் காணமுடிகிறது. உன் அவசரப் புத்தி கன்னத்தில் அறை வாங்கும் ஆசை பொதுமையாய் யோசி எல்லா எவனும் நல்லவனாய் இருக்க மாட்டான் உன்னை கவனித்துக் கொண்டிருக்கும் எவனோ ஒருவன் வாள் கொண்டு கை நிறைய அள்ளிப் […]
நாம் பிறந்தோம் நன்கு வளர்ந்தோம் தவழ்ந்தோம் நடந்தோம் பள்ளி சென்றோம் படித்தோம் விளையாடினோம் இருவர் வாழ்விலும் பேதம் இல்லை இருவர் வளர்ப்பிலும் பேதம் இல்லை இனிமையான நாட்கள்தான் அவை பசுமை நிறைந்த நினைவுகள் படிப்பில் சிறந்தவள் எனப் பாராட்டப் பெற்றேன் பதக்கங்கள் வாங்கினேன் விளையாட்டில் சிறந்தவள் எனப் பாராட்டப் பெற்றேன் பதக்கங்கள் வாங்கினேன் ஆடல் பாடல் என எதையும் விட்டு வைக்கவில்லை நான் அவற்றிலும் பரிசுகள் வாங்கினேன் திருமணகாலம் வந்தது என் மகள் பதக்கங்கள் வாங்கியவள் என்றார் […]