வால்ட் விட்மன் வசனக் கவிதை -19 என்னைப் பற்றிய பாடல் – 12 (Song of Myself) ஆத்மக் கதிர் உதயம் (1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா பேராற்ற லோடு எவ்வித வேகத்தில் சூரிய உதயம் எழுகிறது பேரொளிப் பகட்டில் எனக்கு மாரக னாக ! இப்போதும் அல்லது எப்போதும் என்னிட மிருந்து சூரிய உதயத்தை என்னால் நீக்க இயலாது ! ஒளிப் […]
பூமி மேல் தன் முதலடியை எடுத்து வைக்க முயலும். உயிர்ப் பந்தாய் மெல்ல எழுந்து நிற்கும். பூமிப் பந்தைப் பிஞ்சுக் கால்களால் உருட்டி விடப் பார்க்கும். பிஞ்சுக் கால்களின் கிளுகிளுப்பில் சுழலும் பூமியின் களிப்பு கொஞ்சம் கூடிப் போயிருக்கும். ‘பொத்’தென்று கீழே விழும் குழந்தை கத்தும். ’தரை தானே தடுக்கிச்சு’- தரையை மிதித்துக் குழந்தையைச் சமாதானப்படுத்துவாள் தாய். சுழலும் பூமி சற்று நின்று சுழலும் மீண்டும். […]
என்னை சுவாசி என்னை சுவாசி நான் தான் உன் மறுபாதி ! என்னை அணை என்னை அணை நான் தான் உன் வாழ்க்கை! வாலிபத்தை கரைத்து வானாந்தரத்தை தேடுகின்றாய்.! வற்றிய சமுத்திரத்தில் வழிதேடி அலைகின்றாய் ! மெளனத்தில் அமர்ந்து அகிலத்தை சுருக்கி- எதை தேடி அலைகின்றாய் எதிலும் நான் தான் ! உதிர விளையாட்டிற்கு உனக்கு தேவை – நான் தான் ! என்னை சுவாசி என்னை சுவாசி நான் தான் பெண் ! – ஜெயானந்தன்.
கிரணங்கள் ஊடுருவிப் பாய்கிறது மனிதனின் நகல் நிழல்களைத் தொடர்கிறது பசி கொண்ட காளைகள் வைக்கோல் போரை சுமக்கின்றன உச்சி வெயில் பாதைகளை மறந்து நிஸ்சிந்தையாய் தோண்டித் துழாவி இலக்கியம் ஒரு கடைச்சரக்கு கொள்வாரின்றி நிலத்துக்கு சுமையாய் கவிதையில் சந்தங்களையும், தாளங்களையும் துரத்தியாயிற்று மின்கம்பம் ஒலியைக் கடத்துவது சிறுபிள்ளை விளையாட்டு நீ நான் உன்னையும் என்னையும் அடகு வைத்து விட்டால் உலகம் இயங்காது வேசிகளாய் அவிழ்த்துக் காட்டும் மரங்கள் ஒரு மதிய வேளை எப்பவும் போல் இருக்கும் […]
முன்னும் பின்னும் ஒரு நூறு அம்புகள் குத்தித் துளைத்த உடல். தன் மீது குத்திய ஒவ்வொரு அம்புக்கும் உடல் ஒரு முத்தத்தை பரிசாய் அளிக்கிறது..
நம்பி கராங்குட்டி முகம் மிகச் சரியாக சிந்திப்பதாக நீ என் மீது அவிழ்த்து எறிகிற குற்றச் சாட்டுக்கள் தெற்கிலிருந்து மேற்குவரை பரவியது கொஞ்சமும் வாய் கூசாமல் ஒரு நல்லவனை தீயவனாக்கி விட்டாய் கெட்டவனான நீ நல்லவனாகி விட்டாய் எனக்கான எல்லா உணர்வுகளும் அதன் பேரமைதியும் மௌனத்தின் தடித்த கயிறுகளால் கட்டப்பட்டிருக்கிறது வேறு வேறு வடிவங்களில் உலவும் நீ என் அறைமுழுக்க மெலிந்த நாகத்தின் தனிமையுடன் அலைகிறாய் எண்ணற்ற நாகங்கள் இப்போது புறந்து கடக்கின்றன வேடிக்கை பார்க்கும் நில […]
நீங்கள் கைப்பற்றலாம் விலங்குகள் இல்லா கானகத்தை உங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் தாகத்திற்கு சிறுநீரைப் பருகும் தேசத்தை உங்கள் தீர்மானத்துக்கு தலையாட்டலாம் இறையாண்மையை அடகு வைத்து பூம்பூம்மாட்டினைப் போல் உறக்கத்தில் கனவுகளுக்கு தடை போடலாம் சிறைக்கு உள்ளே மனதை விலங்கிட்டு உங்கள் ஏகாதிபத்தியத்தை விஸ்தரிக்கலாம் கடனை திருப்பித் தர இயலாத கிராமத்திலிருந்து வாசலில் கோலமிட்டு அழைக்கலாம் நீல வண்ணத்தில் யார் வந்தாலும் நீங்கள் நதியை நாடலாம் பாவமூட்டையை இறக்கி வைக்க உங்கள் கால்களை வருடும் அலைகள் […]
காலையும் மாலையும் செல்ல நாயோடுதான் சிறு நடை வார்ப் பட்டை ஒரு கையில் கழிந்தால் கலைய ஒற்றுத் தாட்கள் மறு கையில் அந்த ‘இனிய’ பணிவிடையில் அலாதி இன்பம் அம்மாவுக்கு ஆனால் பெற்ற குழந்தைக்கு ‘பெம்பர்ஸ்’ கலைவது எப்போதுமே பணிப் பெண்தான் அமீதாம்மாள்
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ஓரக் கண்ணால் பாதி மூடிய உறக்க நிலையில் உணரா மனத்தில் எண்ணித் தாராளமாய் என்னுடன் பழகிக் கொள்ள நீ பேரார்வம் காட்டு கிறாயா ? அந்தச் சந்தர்ப்ப வேளையில் நானுனக்கு என்னை த் தானம் செய்ய வரும் போது, பழுதாய்ப் போன எதுவும் என்னிடம் அளிக்க எஞ்சி இருக்க வில்லை ! பழையன வற்றை எல்லாம் களைந்தேன் என்றுனக்கு நானுறுதி […]
(Song of Myself) என் மீது எனக்குப் பித்து (1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா என் மீது எனக்குப் பித்து என் மீதுள்ள பித்து மிகையானது களிப்புணர்வு எழுவது என்மேல் தான் எல்லாக் கணமும், எது நடந்தாலும் புல்லரிக்க வைத்திடும் பூரிப்பில் என்னை ! கணுக்கால் எனக் கெப்படி நெளிந்துள்ள தென என்னால் கூற முடியாது ! பிறரோடு நான் சேர்ந்துலாவும் […]