(1) கனவின் மேல் கல் விழாமல் வெயிலையும் வெட்டவெளியையும் சுருட்டிக் கொண்டு ஒரு மூலையில் படுத்துக் கிடக்கும் நாய் உறங்கித் தீர்க்கும் தன் பிற்பகல் தனிமையை. நாயின் கனவைச் சுடாமல் எப்படி மெல்லச் சூரியன் சாய்ந்து கொண்டிருக்கிறான்! உன் கனவு போலத் தான் நாயின் கனவும் தனித்தது. முடிந்தால் கனவின் மேல் கல் விழாமல் நாய் மேல் கல்லெறிந்து பார் மனிதா! (2) இந்தப் பொழுதைப் பறித்து வேலியை மீறி வெளியே சிரிக்கும் பூவைப் பறிக்கவும் மனமில்லை. […]
சி. ஜெயபாரதன், கனடா (1819-1892) (புல்லின் இலைகள் –1) விடுதலைக் குரல்கள் ..! மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா என் மூலம் எழுவது ஆக்க உணர்ச்சி என் மூலம் உருவாகும் எழுத்தோட்ட அகராதி ! ஆதி காலத்தின் திறவுச் சொல்லை ஓதுகிறேன் ! அடையாளச் சின்னம் காட்டுவேன் குடியரசுக்கு ! கடவுள் சத்தியம், மாறாக வந்திடு மாயின் உடன்படேன் வேறு எதற்கும் ! என் மூலம் எழும் […]
தாகூரின் கீதப் பாமாலை – 57 என் உறக்கம் போனது ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்னிடம் விடை பெறாது அவள் ஏகியதால் என் விழிகள் மறந்தன உறக்கத்தை ! நெருங்கி உன்னருகில் நான் இருந்தாலும் வருத்தப் படும் நொய்ந்து போய் இருதயம் ! தவறான போக்கில் பயண மாது எந்தன் இதயக் கரைதனில் வந்திறங்கி விட்டாள் ! அவள் தவறை அறிந்து கொண்டால் […]
(1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++ வால்ட் விட்மன், அவனோர் பிரபஞ்சம் ! மன்ஹாட்டன் மைந்தன் ! புரட்சிக் காரன் ! உப்பிய சதை ! மோக முள்ளவன் ! பெருந் தீனியான் ! குடிப்பான் !, பிள்ளைகள் பெற்றவன் ! உணர்ச்சி வசப்படான் ! உயர்ந்தவன் அல்லன் மனித குலத்தில் ! தன்னடக்க மற்ற அகங்காரன் ! பிறன் ஒருவனை அவமதிப் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உனக்குத் தெரியாமல் போனது என்னைப் பற்றி ! அதுவும் நல்லதே ! அதுவும் நல்லதே ! அப்பால் நீங்குவ தற்குப் பதிலாய் அருகி லிருந்து நீ யெனக்கு அளிப்பது வேதனை ! திக்கு முக்காடச் செய்வதேன் நீ பக்கத்தில் அமர்ந்து ! என் வசந்த காலம் ஈர்த்துக் கொள்ளும் மெய்யாக இசைத் தொனியை ! மூங்கில் மரத் தோப்பு நிழல் ஓங்கி வளர்க்கும் […]
இனம் மற்றும் நாடு மற்றும் சுயம் ஆகியவற்றைக்காட்டிலும் ஓர் முழமேனும் உயர்ந்து நிற்பீரானால் நீவிர் உண்மையிலேயே கடவுளைப் போன்றவராகிறீர். ஒருவேளை யாம் நீராக இருக்க நேர்ந்தால் தாழ்ந்த அலையினூடேயுள்ள அம்புதியிடம் தவறு காண மாட்டேன். தகுதிவாய்ந்த தலைவனைக் கொண்டதொரு தரமான கப்பலிது; கோளாறில் உள்ளது உமது உந்தி மட்டுமே. அடைய முடியாத எந்த ஒன்றிற்காக நாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோமோ அதுவே, நமக்கு ஏற்கனவே கிடைத்த ஒன்றைக் காட்டிலும் உயிரைப் போன்ற உன்னதமானதாக தோற்றமளிக்கும். […]
எஸ்.எம்.ஏ.ராம் 1. பொற் காலங்களை இழந்தாயிற்று; இழந்தபின்னரே அவை பொற்காலங்கள் என்று புலனாயின. புதிய பொற்காலங்களுக்காகக் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை. காலம் கருணையற்றது. பூமியின் அச்சு முறிந்து அது நிற்கும் என்று தோன்றவில்லை. பிரபஞ்சத்தின் பெருஞ் சுழற்சியில் தனி மனிதனின், ஏன், ஒரு சமூகத்தின்- துக்கங்களுக்குக் கூட மரியாதை இல்லை. 2. எங்கே ஓடினாலும் உன்னைத் துரத்தும் உன் நிழல். சட்டையைக் கழற்றுவது போலுன் ஞாபகங்களைக் கழற்றி எறிவது அத்தனை சாத்தியமல்ல. தினம் தினம் சேரும் ஞாபகக் […]
உதயசூரியன் வார வாரம் வந்து குவியும் காதல் கடிதங்கள் சில அவளின் குணம் பார்த்து பல அவளின் அழகைப் பார்த்து அவளின் வசீகர புன்னகை இவர்களுக்கு அவளின் குறிப்பை உணர்த்திவிடும் மயிரளவு தூரம் ஒழுக்க சீலர்களின் கால்களும் இவளின் கால்களும் அவர்களின் பேச்சு பணியை பற்றித்தான் சில சமயம் தேவையில்லா அறிவுரைகள் எனினும், என்றும் இவளின் கால்கள் நகர்ந்தது இல்லை வசீகர புன்னகையும் குன்றியதில்லை அவர்கள் கண்டிக்கையில் இவளின் தலை மத்தளம் இசைக்கும் சாதாரண மனிதர்கள் […]
தாகூரின் கீதப் பாமாலை – 55 சொல்லிடும் மௌனமாய் ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கவர்ச்சி ஆற்றல் உள்ள உன்னிரு கண்களின் புது மலர்ச்சி திடீரென எனக்கு விடுவிப்பு அளிக்கும் எல்லாப் பிணைப்பி லிருந்தும் ! ஊஞ்சல் ஆடுகிறது வான் நோக்கி இதயம் தன் கதவைத் திறந்து ! வெகு தொலைவுக்கு அப்பாலிருக்கும் காட்டு மரங்களின் நறுமணம் நழுவி வந்து அருகில் தழுவிடும் […]
வாலிகையும் நுரையும் (14) பவள சங்கரி பனித்திரை பூண்ட மலையொரு குன்றுமில்லை; நனைந்த மழையில் துளிக்கும் ஓக் மரம், விசும்பும் வில்லோ (அலரி) அல்ல. பாருங்கள் இங்கேயொரு முரண்பாடான மெய்யுரையை: ஆழ்ந்ததும், உயர்ந்ததுமான அவைகள் இரண்டிற்கும் இடைப்பட்டதைக் காட்டிலும் ஒன்றுக்கொன்று நெருக்கமாகவே உள்ளது. உம் முன்னால் தெளிவானதொரு கண்ணாடியாக யாம் நிற்கும் தருணம், நீவிர் எம்மை உறுத்துப் பார்த்து உம் உருவத்தையேக் கண்டீர் ஆங்கே… பின் நீவிர், “யான் உம்மை விரும்புகிறேன்” […]