தாய்மை!

This entry is part 5 of 45 in the series 2 அக்டோபர் 2011

நீண்டதொரு சாலையில் மிதிவண்டியை இழுத்தபடியே என்னோடு பேசிக்கொண்டே நடந்தாய் நீ! நாமிருவரும் தற்காலிகமாய் பிரியவேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தியது சாலையின் பிரிவு! என்னிடம் விடைபெற்றபடியே சாலையின் வலதுபுறமாய் அழுத்தினாய் நீ உன் மிதிவண்டியை! என் கண்ணைவிட்டு நீ மறையும்வரை உன்னை பதைபதைக்கும் உள்ளத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்!! நடைவண்டியை தள்ளிக்கொண்டு உற்சாகமாய்க் கிளம்பும் தன் குழந்தை கீழே விழுந்துவிடக்கூடாது எனத் தவிக்கும் தாய் போலவே…

நவீனத்துவம்

This entry is part 37 of 41 in the series 25 செப்டம்பர் 2011

மரப்பாச்சி பொம்மை மறைத்து மயில் தோகை பக்கம் மறந்து பைசா கைச்செலவு தவிர்த்து குச்சு ஐஸ் பிசுபிசுப்பு விலகி பள்ளிக்கூட வாசல் நெல்லிக்காய் இழந்து, தெருக்கோடி விளையாட்டு அறுத்து என் மகனும் பழமைத்துவம் அளித்த நவீனத்துவம் பழகுகிறான் செயற்கையாய்……..     ராசை நேத்திரன்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)

This entry is part 32 of 41 in the series 25 செப்டம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நீ செல்வந்தருக்காக ஊன்றும் உறுதியின் விளைவுகளை எதிர்காலத்தில்தான் நீ அறுவடை செய்வாய். ஏனெனில் இயற்கை நியதிப்படி அனுப்பியவை யாவும் திருப்பிவரும் தமது மூல இடத்துக்கு ! நீ பட்ட துயரங்கள் களிப்பிடத்துக்குத் திரும்பிவரும், மேலுலக விதிப்படி. எதிர்காலத்தின் பல பிறவிகளில் நேசம், சமத்துவம் ஆகிய இரண்டால் கற்ற பாடங்கள் துயரம், வறுமை என்பது தெரியவரும்.” கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்) “என் […]

புராதனத் தொடர்ச்சி

This entry is part 30 of 41 in the series 25 செப்டம்பர் 2011

புராதனச் சம்பவங்கள் புத்தியில் படிமமேறி நிகழ் வாழ்வில் நெளிந்து உட்ப் புகவும், வெளி வரவும் முடியாது உறக்கமற்ற சூனியத்தை ஒளிப் பிழம்புகளாய் சுருட்டியள்ள .. நிலை குலைந்து புராதனமனைத்தும் துடைத்தெறியும் வெறியில் புதியன பலவும் படித்தறிந்து புகுத்தி வைக்க எத்தனிக்கும் மனதில் புதியன எதுவும் புராதனத்துடனே ஒப்பிட்டு நிற்கும்… தன்னுள்ப் புலம்பும் மனம்… ‘ புதியனவென்று எதுவும் இல்லை .. எல்லாம்,எல்லாம் புராதனத்தின் தொடரே…. ‘

சந்திப்பு

This entry is part 25 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஒரு உறவு ஏற்படும்போதே அதிலிருந்து விலகிப் பார்ப்பதான சிந்தனையும் தோன்ற ஆரம்பிக்கிறது. எந்நேரமும் பிரியலாம் என்ற அணுக்கத்தோடே பகிரப்படுகிறது எல்லா சொந்த விஷயங்களும் இந்நேரத்தில் இன்னதுதான் செய்து கொண்டிருக்கக்கூடும் என்பது தெரியும் வரை தொடர்கிறது பேச்சு. ஏன் பேசுகிறோம் எதற்கு சந்திக்கிறோம் என்ன உண்கிறோம் என்பது சிந்தனைக்கு உரியதாயில்லை. முதல் முதல் ஏற்பட்ட ஒரு சந்திப்பு மட்டுமே வித்யாசமாய் இருந்ததால் நினைவில் இருக்கிறது. அடுத்தடுத்து நட்பும் பிரிவும் சகஜமாகிப்போவதால் எல்லாமே ஒரு சாதாரண விஷயமாகிறது. ஆனாலும் முதல் […]

ஒரு விதையின் சாபம்

This entry is part 24 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஆழத்தில் புதைந்த விதை ஒன்று தனது வாழா வெட்டித்தனத்தை எண்ணியபடி அழுகிறது முளைக்கும் காலத்தில் தூங்கிப் போனதால் இறப்பதற்கும் பிழைக்கவும் வழியற்றது புரிகிறது தன்னோடு விதைக்கப்பட்ட விதைகள் யாவும் முளைத்து செடியாய் அவதரித்தது கண்ணுக்குள் விரிகிறது அந்தச் செடிகளின் வேர்கள் தன்னை சூழ்ந்து நெருக்குவதாகவும் அவமதிப்பதாகவும் தோன்ற இன்னும் ஆழத்தில் புதைந்தது. தானும் மீள்வேன் மண் மீது முளைப்பேன் எனும் நம்பிக்கையின் மீது ஒரு நாள் மண் விழுந்தது யுகங்களாய் நடந்த விளைச்சலுக்கு முடிவெழுத பாத்தி கட்டிய […]

எடை மேடை

This entry is part 23 of 41 in the series 25 செப்டம்பர் 2011

தன்னைத்தானே நீதிமானாகக் கற்பித்துக் கொள்ளும் ஒருவன் பார்க்கும் அனைத்தையும் எடையிட்டுக் கொண்டிருக்கிறான். கடந்து செல்லும் ஒரு பெண்ணை உற்று நோக்குகிறான். அவள் திரும்பப் பார்த்தால் மகிழ்வடைகிறான். பிடித்தமானவள் என்றோ உத்தமி என்றோ குறியீடு இடுகிறான். அவள் அசட்டையாய்க் கடந்தால் திமிர்பிடித்தவளாகிறாள் வேறு யாரையும் நோக்கிப் புன்னகைத்தால் அவன் கணிப்பில் வேசையாகிறாள்.. குழந்தையைப் போலக் கடக்கும் சிலரை என்ன செய்வது என்று தெரியவில்லைஅவனுக்கு.. அதுபோல் அவனைக்கண்டு வினையற்றுக் கடக்கும் அவனுடைய மனைவியையும்.. அதிர்ச்சியடையும் அவன் கணிக்கும் கண்களை மூடி […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)

This entry is part 22 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்களின் வேலை முன்னுள்ளதைக் காண்ப தற்கு. ! ஆத்மா இருப்பது தனது ஆனந்தத் திற்கு ! மூளையின் பயன் இதுதான் மெய்யாய் ஒருத்தியை நேசிப்ப தற்கு ! கால்களின் பணி காதலியின் பின்னே செல்வது ! +++++++++++++ வான வெளியில் காதல் காணாமல் போகும் ! என் மனது ஓடிப் போனது, மனிதர் ஏது செய்வார் என்ன முயல்வார் என்றறிய ! புதிர்கள் […]

பசி வகை!

This entry is part 21 of 41 in the series 25 செப்டம்பர் 2011

பத்து மணி யிலிருந்து பல மணி நேரம் போராட்டம் செய்த பட்டினி வயிறு பாதையோரக் கடையின் பரோட்டா சால்னாவுடனான பேச்சு வார்த்தையில் சமாதானமானது வயிற்றுக்கு ஈயப்பட்டபின் செவிப் பசிக்கு என்பதுகளின் இரைச்சலற்ற இசை வாகனத்தில் விரவ தூக்கம் தொந்தரவானது இராப் பயணங்களில் இரவின் இருப்பை இசையே நிரப்பும் வழுக்கும் தார் சாலை விடுத்து உலுக்கும் கற்சாலை தொடங்க உறக்கமும் கிறக்கமும் சட்டென கலைந்தது மேற்சென்ற வழியெல்லாம் மற்றுமொரு பசிக்கான பரிவர்த்தனை காட்சிகள் பொதி உண்ட கனரக வாகனங்கள் […]

கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்

This entry is part 20 of 41 in the series 25 செப்டம்பர் 2011

”முன் ஜென்ம” கணக்கு காட்டி எனக்கு மறுக்கபட்டிருந்த அன்பை நான் மற்றவர்க்கு கொடுத்து விட்டால், தண்டனையென எனக்கு விதித்ததை எப்படி வசூளித்து கொள்வாய்? உன் செயல்களை அறிய முயன்று நான் தோற்கிற வரை நீ பரம்பொருள் தான்.. நிகழ்வுகளின் மூல கூறுகளை அறிய முற்படுவதையே விட்டுவிட்டால் உனக்கு என்ன பெயர் வைத்துகொள்வாய்? எதிர்காலத்தை கையில் கொண்டு வித்தை காட்டி மகிழ்கிறாய் எதுவாயினும் இருக்கட்டும் என நான் விட்டு விட்டால் உப்புசப்பற்று ஆகிவிடுமோ உனக்கு ? இப்படி ,நீ […]