இயற்கை

This entry is part 37 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

விளக்குகளிளால் மட்டுமே வெளிச்சம் பெரும் குடிசையில் நிலவு மட்டுமே நீண்ட ஒளியால் சமத்துவம் பேசிவிட்டு போகிறது மாடிவீட்டை கடந்து வரும் என் கால்களிலிருந்து என் கண்களுக்கு அ. இராஜ்திலக்

ஏய் குழந்தாய்…!

This entry is part 36 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

பூவில் ஒருபூவாய் அழகிற்கோரணியாய் அடியோ தாமரையிதழாய் அகம்பாவம் அறியாதவளாய் குணம் வெள்ளை நிறமாய் குறுநகையால் வெல்வாய்…! மகிழ்ந்தால் மங்கலப்புன்னகையாய்… மதியால் மாநிலம் காப்பவளாய்… அழுதால் ஆற்றிடை ஆம்பல் மலராய்… அதிர்ந்தால் நாற்றிடை நாதஸ்வரமாய்… அயர்ந்தால் தென்னங்கீற்றிடைப் பூவாய் உறைவாய். சீருடைச் சிப்பிக்குள் முத்தாய்… தேரிடைப் பூவுக்குள் தேனாய்… நேர்த்தியாய் பாடசாலையில் பயில்வாய் சீரிய குழந்தாய் சுறுசுறுப்பாய்..! ஜுமானா ஜுனைட், இலங்கை.

அழகியல் தொலைத்த நகரங்கள்

This entry is part 35 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

____________________ தென்னைமர உச்சி கிளைகள், அடர்த்தியான வெண் மேகம் நீல வான பின்னணியில் .. இயற்கை ஓவியத்தின் கீழ் குறுக்கில் கிறுக்கல் கோடுகள் – கோணல் மாணலாய் தொங்கும் கேபிள் டிவி கம்பிவடங்கள்.. சாலை அமைக்கவே ஒரு துறையும் கொத்தி குதறவே மற்ற துறைகளும் வீட்டு ஜன்னலிருந்து கைநீட்டினால் சாலை தரை தட்டும் – மேன்மேலும் உயர்ந்து விட்ட சாலை-சீரமைப்புகளும்!! அவரவர்களுக்கு உண்டான காரணங்களோடு .. காற்றிலும் , அதிராத அளவான ஒயிலாக கிளையிலை அசைக்கிற அழகியல் […]

உன்னைப்போல் ஒன்று

This entry is part 34 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

அதைப் போலொரு பறவையைப் பலியிட்டு படையலுடன் பிரார்த்தனனகளுடன் அண்ணாந்து வானம் நோக்கி அழைத்த படியிருந்தான். குறித்த நேரத்தில் அவ்விடத்தைத்தினம் வந்தடைகிற அது அன்று வரவே இல்லை. ஆளற்ற வானந்தரத்தில் நாற்றமடிக்கத்தொடங்கியிருந்த அவனை போலொரு அழுகிய ஒன்றை கொத்தி தின்று கொண்டிருந்தது அது . ரவிஉதயன் raviuthayan@gmail.com

உறுதியின் விதைப்பு

This entry is part 33 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தன் உறுதின் மீது கலைந்திருக்கும் சிறு சிறு நம்பிக்கைகளை சேகரிக்கிறேன் . நாளையின் மீது அவை இன்னும் நிர்பந்திக்கவில்லை இன்றைய இப்பொழுதைய கடக்கும் நிமிடத்தில் தனக்கு உண்டான கட்டமைப்பை சரி பார்த்து கொள்கிறது . இயங்குதலில் கவலை கொள்வதில்லை அது என் பிரபஞ்சம் பார்த்து கொள்கிறது . என் இருப்பின் என்றைக்குமான அவசியம் தன் எண்ணத்தின் உறுதியில் திளைத்திருப்பது வெறும் கற்பனை கொண்ட கனவல்ல என்பதை நிருபணம் செய்வதே . பகடை செய்யப்பட்ட வாழ்வு அல்ல மற்றவர்கள் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (ஓங்கிப் பாடு பாட்டை) (கவிதை -45)

This entry is part 31 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆலோசனை எதுவும் உதவாது காதலர் தமக்கு ! மலை நெடுவே ஓடும் நீரோட்டம் போலில்லை அவருக்குக் குறுக்கிடும் அணையின் திறம் ! குடிகாரன் உணர்ச்சி ஒரு ஞானிக்குத் தெரியாது ! காதலருக்குள் தம்மை இழந்தவர் அடுத்தென்ன செய்வார் என்றறிய முயலாதே ! மேற்பதவி யாளன் தன் பதவியைக் கைவிடுவான் தனியாகக் காதலியுடன் வீட்டில் மாட்டிக் கொண்டால் ! +++++++++ மலை ஊடே ஒருவன் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2)

This entry is part 30 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “ஏழ்மையில் உழலும் என் தோழனே ! செல்வீகம் ஏழ்மைத் தீங்கை நிவர்த்தி செய்தாலும், வறுமைதான் ஆன்மாவின் பெருந்தன்மையைத் தோன்ற வைக்கிறது. துயர் ஏழ்மையின் உணர்ச்சிகளை மிதமாக்குகிறது. களிப்பு இதயத்தின் காயங்களை ஆற்றுகிறது. வறுமையும், துயரும் நீக்கப் பட்டால், மனித ஆன்மா தன்னலம், பேராசை சின்னகளாய்த் தெரியும் ஒரு சூனிய வில்லை போல் ஆகிறது.” கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்) என் ஆத்மா […]

காதலாகிக் கசிந்துருகி…

This entry is part 29 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தோற்ற மயக்கம் தொற்றாகி மொட்டை மாடியில் மல்லாந்து கிடந்த கல்லூரிக் காலங்களில் அவளை வருணிக்க வாய்த்திருந்த நிலா காய்ந்திருக்கும் நிலா நுகர்ந்த முல்லையெனவும் என் நெஞ்சுக்குள் அடைபட்ட காலங்களே அகிலத்தாருக்கு அமாவாசை யெனவும் ஒளிந்தும் ஒளிர்ந்தும் நிலா நிலவியதை அவளோடு ஊடல் கூடல் என் ஒப்பிட்டும் கசிந்துருகிய காலங்களிலும் நிலா காய்ந்திருக்கும் கலைந்திறாத கூந்த லொதிக்கிய கையினூடே கழட்டியனுப்பிய கடைக்கண் பார்வை குறித்து கிறுக்கித் தள்ளிய கவிதைகளிலும் நிலா இருக்கும் மேலேப் பார்த்தபோது நிலா உதிர்ந்துகொண்டிருக்கும் பெள்ர்னமி! […]

தேனம்மை லட்சுமணன் கவிதைகள்

This entry is part 26 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

இடறல்:- *********************** ஹாய் செல்லம் மிஸ்யூடா அச்சுறுத்துகிறது., குறுங்கத்திகளாய் கண்களைக் குத்துமுன் மடக்கிக் குப்பையில் போடும்வரை. யாரும் படித்திருக்கக் கூடாதென எண்ணும்போது அப்ப உனக்குப் பிடித்திருக்கிறதா என்ற கேள்வி கத்தி முனையாய் இடறிக் கொண்டே.   சகிப்பு:- ************* கர்ண குண்டலங்களைப் போல கனமாக இருந்தாலும் கழட்டி வைத்துவிட முடிவதில்லை அவைகளை. அறுத்தெறிந்தாளாம் மறத்தமிழச்சி பால்குடித்தவன் வீரனில்லை என்பதால். வீரன் கை வைத்தாலும் வெட்டி எறிய முடிவதில்லை மார்பகங்களையும் கைகளையும் நாய்கள் தின்னும் பிணமானதால். கசியும் வியர்வையூடான […]

நிலாச் சிரிப்பு

This entry is part 25 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

நாளுக்கு நாள் கூட்டிக் குறைத்து சிரித்தாலும் வாயை அகல விரித்து சிரித்தாலும் பிறையாக வளைத்து சிரித்தாலும் முகம் முழுக்க விரிய சிரித்தாலும் மற்றவர்கள் நம்மோடு சிரித்தாலும் சிரிக்காமல் புறக்கணித்தாலும் சிரிப்பானது எல்லோருக்கும் குளுமையாக்த்தான் இருக்கிறது.   சதா புன்னகைத்துக் கொண்டே இருக்கும் நிலவை பார்த்துத்தான் சொல்கிறேன்.