மதிப்பிழந்த என் சுயத்தை வெறுமென வேடிக்கை காட்டும் பொருளாக மாற்றியமைக்க இயன்ற வரை முயல்கிறது என்னை அறியப்படாத காலம் ஒன்று . தன்னை நிருபணம் செய்வதற்கு சுயத்தை ஒன்றுமில்லாமல் செய்வதை வேடிக்கை பார்க்கிறது என்னை அறிந்து வைத்துள்ள காலம் ஒன்று . சுய அங்கீகாரம் அச்சில் பெறுவதில் இல்லை என்பதை உணர செய்கின்ற காலம் இன்னும் தோன்றியிருக்கவில்லை . காலங்கள் இணைத்துள்ள என்னை பெருவெளி மட்டுமே அறியக்கூடிய சுயத்தை பெற்றிருக்கிறேன் . வளத்தூர் தி.ராஜேஷ் .
தற்செயலாய் ஒரு குருவிக்கூட்டைக் கண்டேன் என் பிம்பங்களை பிரித்து மேய்ந்துவிட்டது நான்கு முட்டைகள் ஒன்று உடைந்து பிறந்திருக்க அதன் கண்கள் திறக்கவில்லை இறகுகள் இல்லாத பச்சைக்குழந்தை மூக்கு இன்னும் வளரவில்லை அதற்கு உணவூட்ட துடித்த தாயின் அன்பை அனுபவத்தை, ஆசையை எந்த கடவுள் கற்றுகொடுத்தான்? முத்துசுரேஷ்
உறவினர் எவரேனும் வந்தால் நலம் விசா¡¢க்கும் முன் கேட்பது உங்க ஊர்ல மழை உண்டா என்று மழைக்காக மேகத்தை பார்ப்பதும் வானத்தை வெறிப்பதுமாய் பல நாட்கள் வாடிப்போனதுண்டு மழை மட்டும் இல்லாவிட்டால் உலகில் எந்த ஒரு வேலையும் நடக்கதென நினைப்பதுண்டு கொளுத்தும் வெயிலையும் படுத்தி எடுக்கும் வெக்கையையும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை பெரும்பாலான நேரங்கள் இல்லாத மழைக்கான ஏக்கத்திலேயே கழிந்து கொண்டிருந்தது எப்போது விதைப்பது எப்போது வளர்வது எப்போது அறுவடை செய்வது அதற்கெல்லாம் மழை எப்போதெனும் எதிர்பார்ப்பு ஓங்கியிருந்தது […]
உச்சி வெயிலில் வெற்றுடம்புடன் மருள் பார்வையில் மயங்கி புடவையின் நுனி பற்றி இழுத்தும் கவனம் கார் கண்ணாடியிலும் சிக்னல் விளக்கிலும் … கைசேர்த்த காசுகள் ஒரு பாலாடை பாலுடன் சிறிது மதுவும் ஊற்றி மயக்கத்தை உறுதிபடுத்தி வாகன ஊர்வலத்தில் இடைசெருகி மாலை நேர கணக்கு முடித்து கமிஷன் வாங்கி சேயை அதன் தாயிடம் சேர்க்கையில் கண்ணில் நிழலாடியது தன்னை விற்றுப்போன தாயின் முகம் ….. – கவிப்ரியா பானு
ஹெச்.ஜி.ரசூல் குரலைத் திருடியது யாரென்று தெரியவில்லை பொம்மை ஒன்று பாடமறுத்தது பொம்மையின் பேச்சு எப்படி இருக்கும் பொம்மைகள் விளையாடிக் கொண்டிருந்தன பூக்களைதலையில் சூட்டியும் நாசியால் முகர்ந்தும் குழந்தைகளை இடுப்பில் தூக்கியும் முத்தம் கொடுத்தும் துப்பாக்கிமுனைகளை துடைத்தும் சுடுவதாய் பாவனை செய்தும் பொம்மைகள் பொம்மைகளாய் இருந்தவரை பொம்மைகளின் விளையாட்டில் படைக்கப்பட்ட உலகம் யாருக்கும் வசப்படாதது பார்ப்போருக்கும் கேட்போருக்கும் பொம்மையின் பேச்சு பிடிபடுவதாக இல்லை இடியோசை கேட்டும் மின்னல்களைப் பார்த்தும் பொம்மைகள் பயப்படவில்லை ஏற்கெனவே அறிமுகமான பொம்மை ஜின்களின் தலைகளில் […]
குமரி எஸ். நீலகண்டன் சிதறிக் கிடந்த கருமேகங்களைக் கூட்டி அதற்குள் மறைந்து மறைந்து போனது நிலா. காற்று அந்த கருந்திரையைக் கலைத்துக் கலைத்து நிலாவின் முகத்தை நிர்வாணமாக்கியது. கருந்திரை எங்கோ பறந்து போக முகம்மூட ஆடை தேடி மிதந்து சென்று கொண்டிருந்தது நிலா. நிலவுடன் காற்று காதல் விளையாடிக் கொண்டிருக்க… மேகத்தைக் கலைத்து மழையைக் கொண்டு சென்று விட்டதாக காற்றைக் கடுமையாய் திட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர் பலரும்.
தெரிந்தெடுத்த பூக்கள் கொய்து வரிந்து கட்டிய செண்டாய் என் – வீட்டினர் மத்தியில் கலி ஃபோர்னியக் கைக்குழந்தை ஸஃபிய்யா அள்ளியணைக்க கொள்ளையாசை! அம்மாவின் கைகளினின்றும் அட்சரம் விலகினாலும் அழுதது ஸஃபிய்யா அப்பனின் முகமும் அலைபாயும் கண்களுமென… எதையோ… யாரையோ… தேடிய ஸஃபிய்யா நிலா, பொம்மை, பூக்கள், புத்தகம், பூனை, பல்லி எல்லாம் புறக்கனித்து எதையோ… யாரையோ… தேடிய ஸஃபிய்யா சட்டென உதித்தொரு யுக்தி. கைகள் ஏந்தி… கண்கள் பார்த்து… சொன்னேன்…மந்திர வாக்கியமொன்று- தாவி வந்தது ஸஃபிய்யா அள்ளியணைத்து […]
சூர்யா நீலகண்டன் அந்த குழந்தை அப்பாவிடம் கூறியது அதற்கு ஏன் மீசை வளரவில்லை என்று. அப்பா அதனிடம் கேலியாக மூன்றில் எங்கு மீசை என்று. அப்பாவை கேட்ட அப்பாவிக் குழந்தை தன் செல்லப் பூனையிடம் கேள்வியாக இரண்டில் உனக்கு மட்டும் எப்படி மீசை என்றது. திடீரென பூனையின் மீசையிலேறிய கௌரவத்தில் அப்பாவின் தோரணை அதன் உறுமலில் உருவம் கொண்டது. சூர்யா நீலகண்டன்
இத்தோடு இது நின்றிடுமா.. என்றும் தொடரும் தொடர் கதையா- கேட்கிறான் ஏமாந்த ஒருவன் ! -செண்பக ஜெகதீசன்..
குவிந்த விரல்களூடே குறுக்கும் நெடுக்குமாய் சிவந்த ரேகைகள் வழிகிற உள்ளங்கைச் சிறைக்குள் படபடக்குஞ் சிறுவண்ணாத்தி புலன்களுக்குள் குவியமிலா நெடுங்கனவுச் சிதறுகை. கரைந்திடுங் கணங்களில் வர்ணங்களின் பிசுபிசுப்பும் படபடப்பின் அமர்முடுகலும் ஒருசேர உணர்த்திய விபரீதங்களின் நடுக்கங்களோடு சடாரென விரியும் பிஞ்சுவிரல்களே வரைந்திடுமோ விண்ணளவுக்குமான அதன் விடுதலையை. கிண்ணியா எஸ். பாயிஸா அலி