வளவ. துரையன் அன்று வெள்ளை ஆடைஅணிந்த மகான் ஏற்றியது.இன்றும் அணையவில்லையாம்.வழிவழி வந்தவர்கள்தொடர்கிறார்களாம்.வாய்ச்சொல்லில் மட்டுமன்றுவள்ளன்மையிலும்இருக்கிறார்கள்.நாளாக நாளாகமரங்கள் பட்டுப் போகின்றன.குளங்கள் வற்றிப் போகின்றனமனங்கள் மரத்துப் போகின்றனசாலை ஓரத்தில்கையேந்துவரைப் பார்த்தால்கண்களை மூடுகிறார்.இன்றும்அணையா நெருப்புஅவரவர் வயிற்றுள்ளே!
ஜெயானந்தன் உடைந்து போன ஞாபக கண்ணாடிகளில் நழுவி சென்றது சித்திரை நிலா. போன நித்திரையில் ராமகிருஷ்ணன் வீடகன்று போனான். போனவன் வெளிச்சத்தையும் கொண்டு போய் விட்டான். வீடு இருளாகத்தான் காய்ந்து கிடக்கின்றது. இன்று வந்த நிலாவும் அவனைத்தான் தேடியது கூடவே அவனது கவிதைகளும். பெட்டி நிறைய தழும்புகிறது அவனது இலக்கிய தாம்பத்யம் எதிர் வீட்டு சன்னலிலிருந்து எட்டி பார்க்கும் பத்மனி குட்டிக்கூட என்னை பார்க்க வருவதுபோல் அவனை ஓரக்கண்ணால் பார்த்து சென்றது என் கடந்த போன யவனத்திற்கு […]
ரவி அல்லது வாய்கள் தான்தீர்மானிக்கிறது.வார்த்தைகளின்வாசனைகளைமுகருமாறும்முகம் சுழிக்குமாறும்.அதன்ஏற்ற இரக்கசுதியில்தான்இயங்குகிறதுஉலகம்பிடி கயிற்றின்பின்னால்ஓடுவதாகமாடுகளற்றபொழுதும்மாறாமல்.கலைத் தோய்ந்துகாத்தமௌனத்தின் பொழுதானகண்டெடுப்பிற்குவடிவமிட முடியாதலயித்தலின் வாழ்க்கைதான்தள்ளிக் கொண்டேஇருக்கிறதுவார்த்தைகளைநோக்கிவாஞ்சைகள் கொண்டுவாழ்தலில் மகிழச்சொல்லி. -ரவி அல்லது.20/12/24.01:46ம.
ஆர் வத்ஸலா நடைபாதையில் காய்கறி வியாபாரம்கிழவிக்குடிரைவர் பொறுக்கிய காய்க்குகேட்ட பணத்தைவீசினார்காரில் வந்த கனவான்பொறுக்கி எடுத்த காசைசுருங்கிய கையால்டிரைவர் கையில் வைத்து விட்டுஅடுத்த ஆளை கவனித்தாள்கிழவி
ரவி அல்லது இரவெல்லாம்இருந்துவரைந்தேன்வண்ணமற்றுவாஞ்சையின்தூரிகையில்.வடிவமற்றேஒளிர்ந்ததுஇரவுபகலாகஅதனழகில். இப்படியிருந்தால்எப்படிக் காண்பதென்றார்கள்பகலைப்பார்வைக்குருடர்கள். பார்க்கும்பகலாக்கிக்கொண்டிருந்தேன்இவர்களுக்காகஇரவைபார்க்குமாவல் மேவ. விடிந்து விட்டதேஎன்றார்கள்எப்பொழுதும்போலகலக்கத்தில் . ம்ம்மபார்க்கலாம்என்றேன்பரவசம் சூழ. மறுபடியும்சொன்னார்கள்.இப்படி இருந்தால்எப்படிக்காண்பதென்றார்கள். நான்மறுபடியும்வரைந்தேன்.அவர்கள்பார்ப்பதாகமுயன்று கொண்டேஇருந்தார்கள்விழிகளுக்குதிரையிட்ட வண்ணமொருவினோதப்போக்கில்என்னை விளையாட விட்டு. -ரவி அல்லது.ravialladhu@gmail.com
தொலந்து போன காலடி சுவடுகளை தேடி அலையும் மனசு. தேடாமல் தேட நொண்டியாடி வருவான் அவ்வப்போது. தொலைதூர பூங்காவில் கேட்கும் ரகசிய பயணிகனின் வாழ்க்கை ரகசியங்கள் எந்த குகையில் தேடினாலும் உள்ளூக்குள் இருட்டு. வெளிச்சமேற்றிய கன்னியோ காயப்பட்டு போனாள் தொடர் அறுவை சிகிச்சையால். சகியே சொல்லடி எந்த சாவியை எந்த மனதில் வைத்துள்ளாய். உனக்காக நான் நதியில் நீராகப்போகும் தருணத்தில் படகுக்காரன் கரம் நீட்டி அலைப்பாயா சகியே சொல்லடி. மீண்டும் மீண்டூம் பிறந்துன்னை தொட அலைந்தாலும் நீண்டூக்கொண்டே […]
ரவி அல்லது தேவகுமார பாடுகளின்திருப்பலியில்சிதறியோடியமந்தையைசேகரம்பண்ணஜீவிக்கும்பொருட்டு.உயிர்தெழும்உன்னத சுவிசேஷத்தில். ஹிருதய சுத்தியற்றவிசுவாசகீதங்கள்இசைத்த வண்ணமிருக்கிறதுபரலோக சாம்ராஜ்யத்தைபற்ற முடியாதபரிசேய பாங்கில். நித்திய ஜீவியத்தில்நானே வழியெனதட்டும் கதவுகள்போஜனம்பண்ணாதபுதிராகதிறக்கப்படாமல் இருக்கிறதுஎப்பொழுதும்பெலனாகாத ஜெபித்தலில் மட்டும் ப்ரியம் பண்ணி. -ரவி அல்லது.ravialladhu@gmail.com
ரவி அல்லது வழித்தெடுத்த நேசத்தை வாசனை திரவியமாக தடவினேன். இக் கமகமத்தலைத்தான். இவர்கள் காதலென்கிறார்கள். நான் கசிந்துருகும் உயிர்த்தலென்கிறேன். இங்குதான் என்னுலகம் வேறாகிப்போனது பித்தனென இவர்கள் பிதற்றுவதற்கும் பிறகென்னை வெறுப்பதற்குமான அந்நியப் போக்கில். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
வளவ. துரையன் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு இரவில் வருகையில் சிறு சலசலப்பும் சில்லென்று அடிமனத்தில் அச்சமூட்டும். அதுவும் கட்டைப்புளிய மரம் நெருங்க நெருங்க அதில் ஊசலாடிய கம்சலா உள்மனத்தில் உட்கார்ந்து கொள்வாள். அங்கிருக்கும் சுமைதாங்கிக்கல் அந்த இருட்டில் ஆறு பேர் நிற்பதாகத் தோன்றும். பகலெல்லாம் அதனடியில் பழம்பொறுக்கிச் சீட்டாடும் பாவிகள் எங்குதான் போனார்கள் என்று என்மனம் ஏசும். நடையை வேகமாகப் போட நான் நினைத்தாலும் கால்கள் பின்னலிடும். இத்தனைக்கும் புளியமரம் பக்கத்திலிருக்கும் வேப்பமரம்தான் எங்கள் குலதெய்வம்.
—வளவ. துரையன் நான் உன்னை முழுதும் மறந்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனாலும் உன் நினைவுகளெல்லாம் பலாச்சுளைகளை மொய்க்கப் பறந்து வரும் ஈக்களாக வருகின்றன. தண்ணீரில் மிதக்கவிட்டக் காகிதக் கப்பல் கவிழ்ந்து விடுமோவெனக் கலங்கும் சிறுவனின் மனமாய்த் தவிக்கிறேன். மலர்த்தோட்டத்தில் எல்லாமே மணம் வீசினாலும் மனத்தில் ஒன்றுதானே வந்தமர்கிறது. இறுதியில் முன்னால் ஓடுபவனை வெற்றி பெற விட்டவனாய்த் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.