நம்பிக்கை

This entry is part 3 of 5 in the series 8 டிசம்பர் 2024

                   வெயிலில் நடந்து  வாடும்போதுதான்  நினைவுக்கு வருகிறது தோட்டத்துச் செடிக்கு  நீர் ஊற்றாதது நடும்போதே நான்  சொன்னேன்ல தெனமும் வந்து தண்ணி ஊத்தணும்னு  அம்மா கத்துவார் ஆனால் நம்பிக்கை இருக்கிறது திட்டித் திட்டி எனக்குச்  சோறு போடுவதுபோல  அம்மா அதற்குத் தண்ணீர் ஊற்றி இருப்பார் நான் என்னை  நம்பியா வைத்தேன்  அம்மாவை நம்பித்தானே  அம்மா இல்லையா?

அது

This entry is part 6 of 6 in the series 8 செப்டம்பர் 2024

வெங்கடேசன் நாராயணஸ்வாமி சொந்தமில்லை பந்தமில்லை. “நான்” விடும் மூச்சுக்காற்றும் “என்” சொந்தமில்லை  பந்தமில்லை. சொந்தமில்லை இவ்வுடல், தாய், தகப்பன், பாட்டன், பாட்டி,  முப்பாட்டன், முப்பாட்டியிடமிருந்து வந்ததென்பார்கள். அவர்களுடலும் அவர்கள் சொந்தமில்லை. நிரை நிரை செறியுமுடம்பு நோய்படு முதுகாயம். கடைசியில் கட்டையில் போய் வெந்து கருகி  நீறாகும் இவ்வுடல். தன்னதாகக்கொண்ட இவ்வுடலை “அது” சூடு செய்கிறது, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை. “நான்” இல்லா உறக்கத்திலும் “அது” சூடு செய்கிறது. ஆகையால் இந்த “நான்” “அது” அல்ல. எண்ணங்களாவது  “என்” […]

களவு போன அணுக்கப்பை

This entry is part 9 of 11 in the series 1 டிசம்பர் 2024

ரவி அல்லது ஆடை பாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லைதான் தரித்த ஆடைகள் யுவனாக தோற்றமளிப்பதால். மகனின் அம்மா பிறந்த நாளுக்கா இல்லை அதற்கு ஆறு நாள் முன்பான எனது பிறந்தநாளுக்கா என்று யோசிப்பதைவிட மேலாடையில் பையற்ற இடத்திலிருக்கும் இலட்சினைக்குறி பார்க்கத் தோற்ற அழகுதான். பணமற்ற பரிவர்த்தனைகளில் பழகிய தலைமுறைக்கு இதயத்திற்கு பக்கத்தில் இரக்கத்தை ஒட்ட வைப்பது கொஞ்சம் அசௌகரியம்தான். எண்ணத்திற்கு முன் எடுத்துக் கொடுக்கும் இடமற்ற ஏமாற்றத்தை கைபேசி காவந்து உறையின்  அறைகள் நிவர்த்திகள் செய்கிறது கையேந்துகிறவர்களைத் […]

எழுத்தாளனின் முகவரி

This entry is part 8 of 11 in the series 1 டிசம்பர் 2024

முகவரி கேட்டு  அலைந்துக் கொண்டிருந்தார்  தபால்காரர்.  அவரா என்று எளனமாக பார்த்தான்  சந்தைக்காரன்.  அதோ மூலையிலுள்ள  புத்தகக் கடையில் தேடுங்கள் என்றான் மார்வாடி பெண்ணின் மூக்குத்தியை  எடைப்போட்டுக் கொண்டே.  அவரா  நேத்து தான்  அந்த மூலை பழைய  புத்தகக்கட்டை தேடிக்கொண்டிருந்தார்.  நாலு  பழைய எழுத்தாளன் கிறுக்கல்களை  வாங்கி சென்றார்  நாலு ரூபா பாக்கியுடன்.  அவரா  ஜிப்பாவோடு  அலைவரே தோளில் ஜோல்னாப்பையோடு.  அவரா  முனைத்தெரு  டீக்கடையில்  பேசீக்கொண்டே இருப்பாரே.  அவரா  வேல வெட்டி இல்லாம  எழுதிக்கொண்டிருப்பரே. அவரா  லைப்ரரில  […]

கொட்டும் மழையும். கொஞ்ச வந்த காற்றும்.

This entry is part 4 of 11 in the series 1 டிசம்பர் 2024

ரவி அல்லது பின்னிரவைத் தாண்டியும் பெய்து கொண்டே இருந்தது மழை. தூக்கமிழந்த மரங்கள் துவண்டது. தலை துவட்டி தழுவிக்கொள்ள தாமதமானதாக நினைத்த காற்று. விருப்பம் கொண்டு சற்று வேகமாக வந்ததது. விபரீதம் நடக்கப்போகிறதென்பதை அறியாமல். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com

தொடர் மழை

This entry is part 3 of 11 in the series 1 டிசம்பர் 2024

ஆர் வத்ஸலா விடாமல் பெய்து கொண்டிருக்கிறது மழை ஜன்னல் வழியே ரசித்துக் கொண்டு காத்திருக்கிறார் சூடான பலகாரத்திற்காக கவிஞர் மனதில் கவிதை நெய்துக் கொண்டு மின்தூக்கி வேலை நிறுத்தம் செய்த அந்த கட்டிடத்தில் இரண்டிரண்டு படியாக தாவி ஏறுகிறான் மூச்சு வாங்க ஏழாவது மாடிக்கு ‘ஸ்விக்கி’ பையன் ஐந்து நட்சத்திரம் வாங்கும் ஆசையில் ‘கார் பார்க்கிங்’ இல் நிற்கும் வாகனங்களை பாதுகாக்க இருமிக் கொண்டே தள்ளுகிறாள் குடியிருப்பின் கீழ்தளத்தில் தேங்கிய தண்ணீரை குடியிருப்பு உரிமையாளர் சங்கத்தால் அதிகார […]

சரித்திர சான்று

This entry is part 2 of 11 in the series 1 டிசம்பர் 2024

பத்மநாபபுரம் அரவிந்தன் – எத்தனையெத்தனை  தலைமுறை  மரபணுக்களின் நீட்சி நான்  என்னுள் நீந்தும்  அவைகள் அத்தனையும்  எத்தனை ஜாதிகள் கொண்டனவோ  எத்தனை மதங்களை ஏற்றனவோ… கள்குடித்துப் பித்தான முப்பாட்டன்  வழி வந்த  சிலவும்..  புகை பிடித்துப் புகையான  பூட்டன் வழி வந்த சிலவும்  போன இடமெல்லாம் போகம் விளைத்து  தன் முகத்தை பதிவு செய்த    முகமறியா முன்னோரின் சிலவும் சொல் வடித்துக் கவிதை செய்த பெரும்பாட்டன்  வழிவந்த சிலவும் ஏமாற்றியும்  பலரிடம் ஏமாந்தும்  புத்திகெட்டுப் போயலைந்த  பெயர் தெரியா […]

பரிதாபம்

This entry is part 5 of 7 in the series 24 நவம்பர் 2024

              வளவ. துரையன் அஞ்சல் கொண்டுவந்து தரும் அஞ்சல்காரர் போல ஒரு சில வீடுகளுக்கு முன் ஓயாமல் வந்து நிற்கிறது வெள்ளைப் பசு மாடு. ஒன்றுமே போடாததால் அழைத்தழைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்துவிடும் பரதேசியாய் அதுவும் போகிறது. பாலைக் கறந்துவிட்டு வெளியே விரட்டிவிட்டப் பரிதாபம் அதன் கண்களில். . அடைக்க இயலாதவர் வாங்கிய கடன்போல வளர்க்க இடமி8ல்லாதவர் வாங்கிய ஜீவன் அது. கன்றுக்குக் கொஞ்சமாவது சுரக்க வேண்டுமெனச் சுவரொட்டியையும் நெகிழியையும் தேடிப் போகிறது நம் தேசத்தில்

முத்தம் 

This entry is part 4 of 7 in the series 24 நவம்பர் 2024

                             வளவ. துரையன்                 கல்லூரி மாணவனின் அடையாள அட்டை அநாதையாகக் கிடக்கிறது. ஓட்டுநர் முன்பக்கம் சாய்ந்து உறங்குவதுபோலக் கிடக்கிறார். முதுகு ஏறி இறங்குகிறது. காலைப் பிடித்துக் கொண்டு  கதறும்  கிழவர் ஒருவர் கதறலை நிறுத்தவே இல்லை. அலுவலகமோ பள்ளியோ செல்லவேண்டிய அந்தப் பெண்மணி கீழே கிடக்கும் சாப்பாட்டுப் பெட்டியின் நசுங்களைப் பார்க்கிறார். நகரம் பார்க்கலாம் என்றிருந்த காய்கறிகள் வழி தெரியாமல் கீழே சிதறி அழுகின்றன. லேசாகத்தான் மோதினாய் பரவாயில்லை என்கிறது புளியமரம் தன்னை முத்தமிட்டு நிற்கும் அந்தப் […]

நகுலன் பூனைகள்

This entry is part 3 of 7 in the series 24 நவம்பர் 2024

நகுலன்  வீதிகளை மறந்து  வீட்டையும் மறந்த கலைஞன். விலாசம் தெரியா காட்டில் அலையும் தத்துவக்கவி.  கவி, தொலை தூரத்து  பறவைகளின் பாடல் கேட்பதாக  சொல்லும் வயோதிகன்.  பூதக்கண்ணாடிகளை  இலக்கிய பூச்சோலையில்  விட்ட கவிஞன்.  ராமசந்திரன்  வந்து விட்டான என  கேட்டுக்கொண்டே இருக்கின்றார்.  பூனைகளிடம் தான்  கேட்க வேண்டும் நகுலன் வீடு எங்கே,  அவைகள்தான்  நகுலன் கவுச்சி வாசனை  பிடிக்க இழுத்துச்செல்லும்.   ஜெயானந்தன்