ஆம். உங்கள் ஊகம் சரியே. அந்தக் கதாநாயகன் புரூஸ் லீ தான். படம் எல்லோர் மனதையும் கவர்ந்த பிக் பாஸ். புரூஸ் லீயின் சண்டையிடும் திறம், அவரது வலிமை, உடற்கட்டு அனைத்துமே திரையுலக ரசிகர்களையெல்லாம் எளிதில் அவர் பக்கம் சாய்த்தது. புரூஸ் லீ யை – லீ சியூ லொங் என்று அழைப்பர். லீ சின்ன டிராகன் என்று பொருள். டிராகன் என்பது சீனாவில் கற்பனையாக வடிக்கபட்ட சிங்கத் தலையும் பாம்பு போன்ற நீண்ட உடலும் கொண்ட […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 20. மக்கள் அதிபரான ஏழை என்னங்க இப்படிப் பாக்குறீங்க..ஒங்க பார்வையே சரியில்லையே… என்னன்னு சொல்லுங்க.. அப்படியெல்லாம் பார்க்காதீங்க..என்னமோ சொல்ல வர்ரீங்க..மொதல்ல அதச் சொல்லுங்க.. என்னது…விளையாடறீங்களான்னா கேட்குறீங்க.. அப்படியெல்லாம் நான் விளையாடலைங்க… என்ன..யாரோட துணையுமில்லாம ஒருத்தரு எப்படி மக்கள் அதிபரா வரமுடியும்னு கேட்கிறீங்களா?… அட இதுக்குத்தான் இப்படியொரு பார்வை…இப்படியொரு கேள்வியா?….. ஏங்க முடியாது?…எல்லாம் மனசு இருந்தா மார்க்கம் உண்டுங்க… மனசுமட்டும் இருந்தாப் பத்தாது…முயற்சி, […]
…வழக்கறிஞர் கோ. மன்றவாணன்… ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று இ;ந்தியா முழுவதும் சுதந்திர நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை அரசு அலுவலகங்களில் பள்ளிகளில் கல்லூரிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்படுகிறது. உண்மையிலேயே இந்த விழா உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடப்படுகிறதா? தாய்நாட்டுப் பற்றோடு நடத்தப்படுகிறதா? அரசு அலுவலகங்களில் நடைபெறும் சுதந்திர நாள் விழாக்களில் மேலதிகாரி கொடியேற்றுவார். அந்தந்த அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் அந்த நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்களா? இல்;;;லை என்பதுதான் சரியான பதில். காலை எட்டு […]
குறிப்பு : மிகக் கொடுங்கோலர்களாக அறியப்படுகிற செங்கிஸ்கானும், மங்கோலியப்படைகளும் உலகில் மாபெரும் மாற்றங்கள் வரக் காரண கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். மங்கோலியர்கள் உண்டாக்கிக் கொடுத்த சூழ் நிலைகளே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு பெரும் உந்துதலாக இருந்தது என்பதை பெரும்பாலோர் அறிந்திருப்பதில்லை. இது மங்கோலியர்களின் பல்வேறு ஆளுமைகளைக் குறித்து ஒரு சிறிய அறிமுகம் செய்யும் எண்ணத்துடன் எழுதப்பட்டது. கூடவே சில பல மங்கோலியர்கள் குறித்தான தகவல்களும். * 1930-ஆம் வருடம் ஸ்டாலினின் ரஷ்யப்படைகள் மங்கோலியாவைக் கைப்பற்றின. […]
நம் சாகச நாயகன் யார் என்று ஊகித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அவர் தான் ஜாக்கி சான். அவர் குழந்தை நடிகராகச் சில படங்களில் நடித்திருந்ததால் திரையுலகில் பல பெரிய நட்சத்திரங்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருந்தது. அவர் நட்சத்திரமாக, நாயகனாக நடிக்க முதன்முதலில் கிடைத்த வாய்ப்பைப் பற்றி அறிந்து கொள்வோமா? 1970 ஆம் வருடம். சானுக்கு பதினேழு வயது. சாதாரண ஸ்டண்ட் நடிகனாக தினம் தினம் ஸ்டுடியோ வாசலில் காத்திருந்து காத்திருந்து, […]
இப்படியும் ஓர் அப்பா! (மீள்பதிவு– சில சேர்க்கைகளுடன்) ஜோதிர்லதா கிரிஜா “அப்பாக்கள் தினம்” கடந்துசென்று விட்டது. ஆனாலும், நல்ல அப்பாக்களையும் அம்மாக்களையும் பொறுத்த மட்டில், எல்லா நாள்களுமே பெற்றோர் தினமாய்க் கொண்டாடப்பட வேண்டிய பெருமை படைத்த நாள்கள்தானே! ‘அதென்ன நல்ல அப்பா, நல்ல அம்மா?’ என்கிறீர்களா? இவ்வாறு சொல்லுவதற்குக் காரணம் உண்டு. பெற்றோர்களிலும் சராசரி, சராசரிக்கும் மேல், மிக. மிக உயர்ந்தவர்கள் என்றெல்லாம் பாகுபடுத்தப்படக் கூடியவர்கள் உண்டு என்பதும் உண்மைதானே? எல்லாருக்கும்தான் அப்பாக்கள் […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 19. புதுயுகம் படைத்த படிக்காத ஏழை ….. வாங்க ….. வாங்க…. எப்படி இருக்கீங்க… நல்லா இருக்கீங்களா?…அப்பறம் ஏன் பேசமாட்டேங்குறீங்க… விடை தெரியவில்லையா.. சரி….சரி.. மனசப் போட்டுக் குழப்பிக்காதீங்க… நானே சொல்லிடுறேன்… அந்த மேதைதான் மைக்கேல் ஃபாரடே. இப்ப நினைவுக்கு வந்திருச்சா..ஆமா…மா…டைனமோவக் கண்டுபிடிச்சவருதான்…. அவருதான் ஒரு புதிய […]
“தாமரை மணாளன்” எனும் புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்த ஓர் அருமையான எழுத்தாளர் இருந்தார். அவரைப் பற்றி இந்த்த தலைமுறையினரில் எத்தனை பேருக்க்குத் தெரியும்? தெரியவில்லை. (படிப்பது குறைந்துகொண்டு வருவதாய்ச் சொல்லப்படும் இந்நாளில் தற்போதைய எழுத்தாளர்களைப் பற்றியே அநேகருக்குத் தெரியவில்லை என்கிறார்கள். அப்படி இருக்க, சிலஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்ட தாமரை மணாளனைப் பற்றி அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறதாம்?) அற்புதமான அந்த எழுத்தாளர் பற்றி மற்ற எழுத்தாளர்களே பேசாத நிலையில் பிறரைப் பற்றி என்ன சொல்ல! 1968 இன் இறுதி […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 18. உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சைசெய்த ஏழை… என்னங்க தலையப் பிடிச்சுக்கிட்டே வர்ரீங்க…..என்னங்க பேசாம ஒக்காந்துட்டீங்க… என்ன குழப்பமாப் பாக்குறீங்க…. குழம்பாதீங்க… போனவாரம் கேட்ட கேள்விக்கு உரிய பதில நானே சொல்லிர்ரேன்… அவருதாங்க ஹமில்டன் நாகி. ஆமாங்க அவருதான் உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை […]
ஒரு படப்பிடிப்பு அரங்கம். நாயகன் சண்டையிடும் காட்சி. படப்பிடிப்புக் குழுவினர் தயாராய் இருக்கின்றனர். காட்சி சற்றே ஆபத்தானது என்பதால் கதாநாயகனுக்கு பதிலாக ஸ்டண்ட் நடிகர் அழைக்கப்பட்டார். இயக்குநர் காட்சியைப் பற்றி ஸ்டண்ட் கலைஞர்களின் ஒருங்கிணைப்பாளரிடம் விவரித்தார். “நாயகன் வில்லன் நடிகருடன் சண்டையிட்டுக் கொண்டே பதினைந்தடி உயரத்திலிருந்து கீழே விழ வேண்டும், அதுவும் பின் பக்கமாக” என்று தன் திட்டத்தைச் சொன்னார் இயக்குநர். “இதை எளிதில் செய்துவிடுவார் என் ஆள்” என்றார் ஒருங்கிணைப்பாளர் வேகமாக. “காட்சிக்குத் தயாராகச் சொல்லுங்கள்” […]