// இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான பிரச்சினைகளில் எடுக்கப்படும் நிலைப்பாடுகள் பல சமயங்களில் பெரிதும் சுயசார்புகளை மையமாகக்கொண்டிருக்கின்றன. இவை ஒருபிரச்சினையின் ஆதாரமான கேள்விகளை பலவீனமடையச் செய்துவிடுகின்றன. பாதிக்கப்படும் நபர்களின் பின்புலங்கள் முரண்பாடுகளைக் காட்டிலும் முக்கியமானவை ஒரு சமூகத்தில் அரசு எந்திரத்தின் அதிகாரத்திற்கும் சிவில் உரிமைளுக்கும் இடையிலான பிரச்சினைகள். இந்த உரிமைகளை நாம் ஒருமுறை பாதுகாக்கத் தவறினால் அவற்றை மீண்டும் அடைவது கடினம். இங்கு பத்திரிகையாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் பல சயங்களில் இரட்டை நிலைப்பாடுகளே இருக்கின்றன. ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகளில் […]
இந்திய வங்கிகளின் ஆன் லைன் வசதியில் ஐசிஐசியை நவீனமாகவும் அதன் பயனீட்டாளர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உபயோகிப்பதற்கு இலகுவாகவும் அதன் இணையமூல சேவையில் முன் நிற்கிறது. ஆனால், அதில் சில முறை தவறான தகவல்கள் வருகின்றன,,, அது பற்றி எழுதினாலும் பதில் வருவதில்லை… மென்பொருளின் கவனிக்கப்படாத, சீராக எழுதப்படாத உத்திரவுகள் பல குழப்பங்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தவே செய்யும். உலகமே திரண்டு ஒப்பாரி வைத்த Y2K விஷயம் பற்றி சற்றும் அக்கறையின்றி தவறான அதுவும் மிக மிகத் தவறான தகவல் […]
முனைவர் ந.முத்துமோகனின் மார்க்சிய உரையாடல்கள் 1254 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு நூல். பெருங்கதையாடல்போல் உடனடிப் பார்வைக்கு குறுக்கும் நெடுக்குமாக விவாதங்கள் அலைபாயும் ஒரு கலைக்களஞ்சியமாக உருவாகி உள்ளது. முத்துமோகனின் ஆய்வியல் பயணத்தில் இந்தியத்தத்துவமரபு, ஐரோப்பியத்துவ மரபு, தமிழ்தத்துவமரபு ஊடாட்டம் கொள்கின்றன. எமிலிதர்கைமும், மாக்ஸ்வேபரும் மதம்பற்றி பேசியதை உரையாடல் செய்கின்றன. தத்துவங்கள், மதங்கள், அமைப்பியல், பின்நவீனத்துவம், பின்காலனியம் சார்ந்த விவாதங்களை மார்க்ஸிய பின்புலத்தோடு வாசகனிடத்தில் உரையாட முன்வருகின்றன. எதிர்க்கதையாடல்களின் ஒலிகளை தன்னுள் நிரப்பி வைத்த எழுத்து உண்மை, […]
மாணவத் தற்கொலைகள் தினப்படி செய்தியாகி விட்ட நிலையில் கேள்விப்படும் ஒவ்வொருவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன் ஆசிரியையை கத்தியால் பலமுறைக் குத்து கொன்ற சம்பவம். யார் காரணம் ? யாரின் பங்கு அதிகம்? பள்ளி நிர்வாகமா, பெற்றோரா, ஆசிரியரா ? என்று திரும்பத் திரும்ப பலராலும் பேசப்பட்டு வரும் விஷயம். மூன்று பெண்களுக்குப் பிறகு பிறந்த செல்ல ஆண் பிள்ளையாக தினம் நூறு ரூபாய் கையில் எடுத்து வரும் ஒரு […]
கு.அழகர்சாமி சென்னைப் பள்ளியொன்றில் பதினைந்து வயது கூட முழுமையடையாத ஒரு மாணவன் தன் பள்ளி ஆசிரியையைக் குத்தி கொலை செய்தது அதிர்ச்சியாகவும் துயரமாகவும் இருக்கிறது. நம் கலாச்சாரச் சூழலில் எப்படி இது நடந்தது என்ற தொனியும் அதில் இருக்கிறது. தன் பாடத்தில் சரியாகத் தேர்ச்சி பெறாத மாணவனின் டயரியில் தன் ஆசிரியை எழுதிய குறிப்புகளின் மேல் ஆத்திரப்பட்டு மாணவன் இந்தக் கொலைச் செயலை நடத்தியிருக்கிறான். ஏன் நடந்தது இது? என்ற கேள்வி எல்லோருடைய மனத்திலும் உருத்துகிறது. அது […]
முன்னுரை: இருபதாம் நூற்றாண்டு தொழிற் புரட்சியிலே உலக நாடுகளில் எழுந்த ஆயிரக் கணக்கான இரசாயன தொழிற்சாலைகள் & நூற்றுக் கணக்கான அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றில் வெளியாகும் திரவ, கடின, வாயுக் கழிவுகளின்றி அவை தொடர்ந்து இயங்க முடிவதில்லை. அந்த யந்திர இயக்க உற்பத்திக் கூடங்கள் டிசைன் ஆகும் போதே அவற்றின் கழிவுகளைச் சூழ்வெளிப் பாதக விளைவு களின்றி எப்படிப் பாதுகாப்பாய்க் கையாளுவது, கண்காணிப்பது, புதைப்பது என்ற விளக்கமான வினை முறைகளும் தயாரிக்கப் பட வேண்டும். […]
“காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். “பீட்ஸ்” என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் “பிரான்ஸிஸ்கோ மறுமலர்ச்சி ” என்னும் புதுக்கவிதை எழுச்சிக்காலத்தில் ஒரு முக்கியமான முன்னோடி. புலிட்ஸர் பரிசைப் பெற்ற இவர் இருபதாம் நூற்றாண்டின் மிகப் பிரசித்தி பெற்ற “ஸுஸுகி” என்னும் ஜென் சிந்தனையாளரால் ஈர்க்கப் பட்டவர். இவரது கவிதைகளில் சில ஒரு மேற்கத்தியரின் ஜென் பற்றிய புரிதலாகக் காணக் கிடைக்கின்றன. ஸ்னைடர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த […]
இந்தியாவின் கல்விக்கொள்கை பல மாறுதல்களுக்கு உட்பட்டது. நாம், இன்றும் மெக்கலெ ராஜாபாட்டையில் செல்கின்றோம். இந்த பாடத்திட்டத்தில்,நல்ல கண்க்கு பிள்ளைகளை, தெளிவற்ற வாத்யார்களை,கேள்விக்கேட்காத அலுவலர்களை உருவாக்கமுடியும். இதையெல்லாம் மீறி, சில நேரங்களில், சிந்தானாவாதிகள், விஞ்ஞானிகள்,எழுத்தாளர்கள் தோன்றிவிடுகின்றனர். இவர்கள்தான், நமது கலாச்சார – இலக்கைய சுவடுகளை காப்பாற்றி வருபவர்கள். இதையும் காசாக்க பலர் முற்ப்பட்டு, அதுவும் பாழாகிபோனகதை பல இன்று ச்மூகத்தில் உலவிவருகின்றது. இந்த நூற்றாண்டில் தோன்றிய ஒரு கணித மேதையை ( ராமானுஜம்), கும்பகோணத்து வாத்தியார்கள் கண்டுக்கொள்ளவில்லை. அவர் […]
நான் Illustrated Weekly of India வுடன் பரிச்சயம் கொண்டிருந்த காலத்தில் அதற்கு C.R.Mandy என்பவர் ஆசிரியராக இருந்தார். அதன் பெயருக்கு ஏற்பவே எந்தக் கட்டுரையானாலும் நிறைய படங்கள் உடன் பிரசுரமாகி இருக்கும். படங்கள் இல்லாத பக்கமோ கட்டுரையோ அதில் பார்க்கமுடியாது. நான் வாங்கத் தொடங்கிய போது அது 12 அணாவுக்கு விற்று வந்தது. 12 அணா என்பது முக்கால் ரூபாய். படம் என்றதும் ஓவியங்களின் கலர் பதிவுகளையும் முக்கிய மாகச் சொல்ல வேண்டும். நான் 1950 […]
இஸ்லாமிய வழியில் வந்த மத ஸ்தாபகர்களில் ஒருவராக பஹாவுல்லா அவர்களை முன்பு பார்த்தோம். இந்த வாரம் இந்தியாவில் பிறந்து இஸ்லாமில் ஒரு பிரிவாகவே தொடர விரும்பும் அஹ்மதியா பிரிவை தோற்றுவித்த மிர்ஸா குலாம் அஹ்மது அவர்களை பார்க்கலாம். இஸ்லாமில் நிறைய பிரிவுகள் இருந்தாலும் இரண்டு மிக முக்கியமான பிரிவுகளாக ஷியா பிரிவையும் சுன்னி பிரிவையும் குறிப்பிடலாம். இதற்கு முக்கிய காரணம் இந்த பிரிவுகளே சரியான பிரிவுகள் என்று கருதும் அரசாங்கங்கள் ஆட்சியில் இருப்பதே. அரேபியாவை ஆளும் சவுதி […]