author

ஆனந்த பவன் -காட்சி-23 இறுதிக் காட்சி

This entry is part 19 of 19 in the series 25 ஜனவரி 2015

  இடம்: ஆனந்த பவன்   நேரம்: காலை மணி ஏழரை.   உறுப்பினர்: ராஜாமணி, சுப்பண்ணா, மாதவன், உமாசங்கர், ராமையா மற்றும் ரங்கையர், பாபா.   (சூழ்நிலை: ராஜாமணி கேஷில் உட்கார்ந்து பில் வாங்கிக் கொண்டிருக்கிறான். எதிரில் சுப்பண்ணா நின்று, பஞ்சாயத்து யூனியன் ஆபீஸுக்கு ஒரு பார்ட்டிக்காக ஒப்புதல் பெற்று வந்தவர், சொல்லி விட்டுப் போனதை அவனிடம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்)   சுப்பண்ணா: என்ன ராஜா சொல்றது காதில வாங்கிண்டு இருக்கியா, சிவனேண்ணு கேட்டுண்டு இருக்கியா? […]

ஆனந்த பவன் : 22 நாடகம் காட்சி-22

This entry is part 20 of 23 in the series 18 ஜனவரி 2015

இடம்: கிருஷ்ணாராவ் தோட்டம். நேரம்: மறுநாள் காலை மணி ஏழு. பாத்திரங்கள்: ராஜாமணி ஜமுனா. (சூழ்நிலை: ராஜாமணி ஜமுனா கொண்டு வந்து கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு பக்கத்திலிருந்த பெஞ்சின் மீது டம்ளரை வைக்கிறான். அவள் தலை குனிந்து அங்கே நின்றிருக்கிறாள்) ராஜாமணி: சரி ஜம்னா… நானும் அம்மாவும் வந்த வேலை முடிஞ்சுடுத்து! ஒங்க மன்னியையும் ஒன் மருமானையும் கொண்டாந்து ஒன்கிட்டயே சேத்தாச்சு… பொறப்படறோம். ஜமுனா: ம் ம் ம். ராஜாமணி: நேத்தியிலேர்ந்து நீ என்கிட்டே ஒண்ணுமே […]

ஆனந்த பவன் -21 நாடகம்

This entry is part 30 of 31 in the series 11 ஜனவரி 2015

இடம்: ஆனந்தராவ் வீடு நேரம்: மறுநாள் காலை மணி ஏழு. பாத்திரங்கள்: ஆனந்தராவ், ரங்கையர், கங்காபாய். (சூழ்நிலை: ஆனந்தராவ் தமது அறையில் கட்டிலின் மீது படுத்திருக்கிறார். அவரைக் காண்பதற்காக, ரங்கையர் வீட்டுப் படியேறிக் கொண்டிருக்கிறார். நடை வாசலில் அவரைக் கண்டு திரும்பி எதிர் கொள்கிறாள் கங்காபாய்) கங்காபாய்: வாப்பா ரங்கா வா! ரங்கையர்: அண்ணா தூங்கிண்டிருக்காரா மன்னி? கங்காபாய்: இன்னேரமா முழிச்சுண்டு சிரமப்பட்டார். விடியக்காலமறே தான் கண் அசந்து தூங்கினார். ரங்கையர்: டாக்டர் என்ன சொன்னார்? கங்காபாய்: […]

ஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20

This entry is part 12 of 33 in the series 4 ஜனவரி 2015

  வையவன்   காட்சி-20   இடம்: ஆனந்தபவன்   நேரம்: மூன்று நாள் கழித்து, ஒரு முற்பகல் வேளை.   உறுப்பினர்: சுப்பண்ணா, சாரங்கன், உமாசங்கர், மாதவன், ராமையா.   (சூழ்நிலை: சுப்பண்ணா வடை போட்டுக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் ராமையா நின்று கொண்டிருக்கிறார்)     சுப்பண்ணா: கெழக்கு மேக்கே போனா, மேக்கு கெழக்கே வர்றது. எல்லாமே சக்கரம்தான். சுத்திண்டிருக்கிற சக்கரம்.   ராமையா: ஏண்ணா எத்தனை லிட்டர் அரிசி போடட்டும்?   சுப்பண்ணா: என்னையே […]

ஆனந்த பவன் நாடகம் வையவன் காட்சி-18

This entry is part 20 of 23 in the series 21 டிசம்பர் 2014

இடம்: ஒய்.எம்.சி.ஏ. கட்டிடம். நேரம்: மாலை மணி ஐந்தரை. உறுப்பினர்: ஜான்ஸன், ரங்கையர், மோனிகா மில்லர், குழந்தை யோகி. (சூழ்நிலை: ஜான்ஸனும் ரங்கையரும் உட்கார்ந்திருக்கிறார்கள். மோனிகா மில்லர், கைக் குழந்தையுடன் அந்த அறைக்குள் பிரவேசிக்கிறாள்) ஜான்ஸன்: இதோ மிஸ்டர் ரங்கையர், இவள்தான் ஒங்கள் டாட்டர்-இன்-லா, மிஸஸ் மோனிகா மில்லர். திஸ் ஈஸ் யுவர் ஃபாதர் இன்-லா. மோனிகா மில்லர்: நமஸ்கார் மாமா (தரையில் குழந்தையை அவர் காலடியில் வைத்துவிட்டு நெடுஞ்சாண் கிடையாக விழுகிறாள்) ரங்கையர்: (ஒன்றும் பேசாமல் […]

ஆனந்த பவன் நாடகம் வையவன்   காட்சி-17

This entry is part 12 of 23 in the series 14 டிசம்பர் 2014

        இடம்: ஆனந்தபவன்   நேரம்: மாலை மணி ஆறு   உறுப்பினர்: ராஜாமணி, சுப்பண்ணா, சாரங்கன்   (சூழ்நிலை: ராஜாமணி கேஷ் கவுண்டரில் உட்கார்ந்திருக்கிறான். சாரங்கன் உள்ளேயிருந்த கைக் காரியத்தைப் போட்டு விட்டு ஓடி வருகிறான். அவன் பின்னால் சுப்பண்ணா வருகிறார்)     சாரங்கன்: ராஜா… ரங்கண்ணா ஒய்.சி.எம்.ஏ.வுக்குப் போனவர்  அவரா வரல்லியே… சைக்கிள்ளேறி  பார்த்துட்டு வந்துடட்டா?   ராஜாமணி: என்னமோ ராகவன் விஷயம் பேசணும்ணு செக்ரட்டரி ஜான்ஸன் கூப்பிட்டு […]

ஆனந்த பவன் ( நாடகம் ) காட்சி-16

This entry is part 18 of 23 in the series 7 டிசம்பர் 2014

      இடம்: ஒய்.எம்.சி.ஏ. ஹாஸ்டல்   காலம்: பிற்பகல் ஐந்து மணி.   உறுப்பினர்: ரங்கையர், ஜான்ஸன், மோனிகா மில்லர்   (சூழ்நிலை: ரங்கையர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு ஜான்ஸன் (வயது 55) மாடியிலிருந்த கீழே இறங்கி வருகிறார். ரங்கையர் படிக்கட்டின் கீழே நின்று கொண்டிருக்கிறார். ஜான்ஸனின் பேச்சில் ஆங்கிலேயர் தமிழ் பேசும் அன்னிய வாடை)       ஜான்ஸன்: ஹலோ ரங்கையர் சௌக்யமா?   ரங்கையர்: சௌக்கியம். என்னமோ நீங்க வரச் சொன்னதா […]

ஆனந்த பவன் நாடகம் வையவன் காட்சி-15

This entry is part 9 of 23 in the series 30 நவம்பர் 2014

இடம்: ரங்கையர் வீடு உறுப்பினர்: ஜமுனா, மோகன் நேரம்: மாலை மணி ஐந்து. (சூழ்நிலை: ஜமுனா துவைத்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருக்கிறாள். அப்போது மோகன் வீட்டினுள் வருகிறான்.) மோகன்: என்ன பண்ணிண்டிருக்கே ஜம்னா? ஜமுனா: துணிகளை மடிச்சு வச்சுண்டிருக்கேன்! மோகன்: மடிச்சு ஒரு பெட்டியிலே வச்சுக்கோ… பயணத்துக்கு ரெடியாயிடு. ஜமுனா: உறுதி வந்துடுத்தா? மோகன்: ஆமாம். ஜமுனா: எத்தனை மணிக்குப் பொறப்படணும்? மோகன்: மாலை ஆறு மணிக்கு. ஜமுனா: (கூடத்திலிருந்த கடிகாரத்தைத் திரும்பிப் பார்க்கிறாள்) மணி […]

ஆனந்த பவன் நாடகம் காட்சி-14

This entry is part 5 of 21 in the series 23 நவம்பர் 2014

வையவன் இடம்: ஆனந்தராவ் வீடு. உறுப்பினர்: ராஜாமணி, கங்காபாய், ஆனந்தராவ். நேரம்: மணி மூன்றரை (சூழ்நிலை: ஆனந்தராவ் ஈஸிசேரில் படுத்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருக்கிறார். நடுவில் இரண்டு மூன்று முறை தும்மி விடுகிறார். வெளியே மிளகாய் அரைக்க, முறத்தில் மிளகாயைக் கொட்டிக் காம்புகளை அகற்றி கொண்டிருக்கிறாள் கங்காபாய்) கங்காபாய்: சின்னக் கொழந்தை மாதிரி பிடிவாதம் பிடிச்சேள்! மழை வர்றாப்பில மானம் மூடிண்டிருக்கு, வாண்டாம் வாண்டாம்னேன் கேட்டேளோ? பழையதிலே தயிர் போட்டு சாப்பிட்டுத்தான் ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சேள், சாயங்காலம் […]

ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12

This entry is part 1 of 14 in the series 9 நவம்பர் 2014

    இடம்: ரங்கையர் வீடு   காலம்: மத்தியானம் மணி பனிரெண்டரை   உறுப்பினர்: ஜமுனா, மோகன்   (சூழ்நிலை: ஜமுனா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அந்நேரத்துக்கு மோகன் அங்கே வருகிறான்)     மோகன்: ஜம்னா… ஜம்னா   ஜமுனா: யாரது?   மோகன்: நான்தான் ! இந்த மழைல ஐஸ்கிரீமா..?. இதென்ன பச்சைக் குழந்தை மாதிரி.   ஜமுனா: வழக்கமா வர்ற ஐஸ்கிரீம் வண்டிக்காரன் வந்தான். இன்னிக்கு ஊர்வலமாச்சே. நெறய ஐஸ்கிரீம் விக்கும்னு […]