வைரமணிக் கதைகள் – 10 ஓட்டங்களும் இலக்குகளும்

மூன்று பேர் மட்டும்தான் உட்கார்ந்திருந்தோம். நான், ஒரு வயது முதிர்ந்த மெடிகல் ரெப்ரஸென்டேடிவ். ஸ்டூலின் மீது உட்கார்ந்திருந்த அட்டெண்டர் பையன். மற்றபடி விஸிட்டர் பெஞ்ச் காலி.   நான் இங்கே வரும்போது மணி பன்னிரண்டரை. அப்போதே மெடிகல் ரெப்ரெஸன்டேடிவ் உட்கார்ந்திருந்தார்.  …

வைரமணிக் கதைகள் – 9 எஸ்கார்ட் (விளிப்பு மாது)

வையவன் மூன்றாவதாகத்தான் தன் வழக்கை விசாரிக்கப் போகிறார்கள் என்று கேள்விப் பட்டதும், ஆஸ்பத்திரிக் கட்டிலில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் பீமராஜாவைப் போய்ப் பார்த்து விட வேண்டும் என்ற அவா மேலிட்டது கோகிலாவுக்கு. “யம்மாடி ரணபத்ரகாளி! ஒனக்கு என்னிக்கு எஸ்கார்ட் வந்தாலும் எனக்கு…

வைரமணிக் கதைகள் -8 எதிரி

விழித்தது விழித்தபடியே கட்டிலில் படுத்திருந்தார் சுகவனம். அவர் அங்கே கிடத்தப் பட்டிருந்தார். மூக்கில் ஒரு ட்யூப். அது வளைந்து நெளிந்து கூடத்தில் எதற்கோ காத்திருப்பது போல் உட்கார்ந்திருந்த உறவினர் நண்பர்கள் மத்தியில் ஓடி மூலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரில் முடிந்தது.  …

வைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்

வையவன் ஆராவமுதனின் ஆஸ்பத்திரித் தவம் போன வாரமே முடிந்து விட்டது. மயோ கார்டியல் இஸ்கீமியாவில் அவன் மனைவி மல்லிகா ஆறாம் நெம்பர் வார்டில் காலமானது, போன வெள்ளிக்கிழமை. இன்றோடு எட்டு நாள். இனிமேல் அவனுக்கு விடுதலைதான் இந்த ஆஸ்பத்திரியிலிருந்து. இப்படி நிவேதிதா…

வைரமணிக் கதைகள் -6 ஈரம்

    கிணறு கூப்பிடுகிறது. ஏர் கூப்பிடுகிறது. பானையில் உறங்கும் வேர்க்கடலை வித்து கூப்பிடுகிறது. எல்லாமே ஒரே கூப்பாடு தான்.   கொல்லையில் பனைமரத்தின் கீழே வேட்டியை வழித்து உட்கார்ந்திருந்த ஆறுமுகம் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். நீல வானில் வெள்ளியிலே ஒரு…

வைரமணிக் கதைகள் -5 இடிதாங்கி

  கடையை மூடிப் பூட்டை ஆட்டிப் பார்த்து விட்டுச் சாவியை சொக்கேசம் பிள்ளையிடம் ஒப்படைக்கும்போது தான் வானத்தில் முதலாவது இடி முழக்கம் கேட்டது.   துரைசாமி முதலியார் அண்ணாந்து பார்த்தார். மப்பும் மந்தாரமுமாக எந்த நேரத்திலும் வானம் பொத்துக் கொள்ளலாம் என்று…

வைரமணிக் கதைகள் -4 அழகி வீட்டு நிழல்

வாரத்தில் ஒருநாள் திருநாகேச்சுரத்துக்கு வந்துவிட வேண்டும் பாலாமணிக்கு. இந்த நாள், இன்ன மணி, இந்தக் கிழமை என்றில்லை. ஓய்கிற நாள். ஓய்கிற வேளை. இன்று ஓய்ந்தது. இரவு எட்டு மணிக்குப் புறப்பட்டாள். டவுன் பஸ்ஸில்தான். கும்பகோணத்திலிருந்து திருநாகேச்சுரத்திற்கு டவுன் பஸ்ஸாய்ப் பறக்கிறது.…

வைரமணிக் கதைகள் – 3 அப்போது கூட இந்தக் கதவு மூடியிருக்கலாம்…

  கதவு திறக்கவில்லை. நவநீதன் ஐந்து நிமிஷமாகத் தட்டிக் கொண்டிருந்தான். ஒழிவின்றியல்ல; விட்டுவிட்டு. பக்கத்தில் தான் ரயில்வே ஸ்டேஷன். ஒரு மின்சார ரயில் அவன் தட்டத் தொடங்கியதிலிருந்து இதற்குள் வந்து நின்று, போய்விட்டது. நவநீதன் கதவைத் தட்டிக் கொண்டு நிற்பதை ஸ்டேஷன்…

வைரமணிக் கதைகள் – 2 ஆண்மை

      தம்புசாமி படுப்பது குடிசைத் திண்ணையில்தான் எப்போதும். கட்டுக்கடங்காத காற்று மழை திண்ணையை நனைத்தால் தான் எழுந்து உள்ளே போவான்.   இப்போது திடீரென்று காட்டுக் கொல்லைகளில் யானைக் கூட்டம் திரிகிறது என்று பரவியிருக்கிற பீதிக்காக படுக்கையை மாற்றச்…

வைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்

    [வையவன்]   கதவின் உள்பூட்டில் ஒரு ரிப்பேர். பூட்டினால் பூட்டிக் கொள்கிறது.   திறப்பதற்கு முயற்சி செய்தால் சாவியைச் சுழற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.   சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யு மாதிரி சாவி வெளிவரத் தவிக்கிறது.…