பொன்மாலைப்போழுதிலான

This entry is part 36 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

ஒரு பொன்மாலைப்போழுதிலான பேருந்துப்பயணம்,தோழியுடன்.. வெட்டிக்கதைகளுக்கிடையே அலறிய அவளது அலைபேசியில் பிரத்யேக அழைப்பொலியும் முகமொளிர்ந்து வழிந்த அவள் அசட்டுச்சிரிப்பும் சொல்லாமல் சொல்லின எதிர்முனையில் யாரென்று! இங்கிதம் தெரிந்தும் எங்கும் நகர முடியாத தவிப்பு.. மூடிகளில்லா காதுகளைப்படைத்த இயற்கையை நொந்தபடி கைகள் துழாவுகின்றன என் ஜீன்ஸின் பாக்கெட்டை.. கிடைத்துவிட்டது செயற்கை மூடி.. என் இயர்போன்ஸ் காப்பற்றிவிட்டது, ‘ம் இப்போ வேணாம்.. அப்புறமா…’ -களிலிருந்து அவளையும் ‘சிவபூஜைக்குள் கரடி’ என்றும் இன்னும் பலவாறும் திட்டப்படுவதிலிருந்து என்னையும்!!

நிலவின் வருத்தம்

This entry is part 35 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

இரவைத் துளைத்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் இரவுக் குளியல் நடத்தியது ஒரு காகம். அதில் அருகே குளித்துக் கொண்டிருந்தது பௌர்ணமி நிலா… நிலா கேட்டது காகத்திடம் இந்த நேரத்தில் இங்கே எப்படி என்று. கால நேரம் பார்த்தால் என் தாகமும் தீராது தேகமும் தகிப்பிலிருந்து தணியாது என்றது காகம் தன் சிறகுகள் அடித்து. நிலா சொன்னது.. அப்போதெல்லாம் இந்த இடத்தில் ஒரு பெரிய குளம் இருந்தது. மீன்கள் […]

கூடியிருந்து குளிர்ந்தேலோ …

This entry is part 34 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

______________________ சூழ்ந்திருந்த மாமரமும் சிறகடிக்கும் பட்டாம்பூச்சியும் ரீங்காரமிடும் தட்டான்பூச்சியும் மத்தியிலிருந்த நானும் – ஆளுக்கொரு கை உண்டு குளிர்ந்தோம் இடை-வெளியிலிருந்த நிச்சலனத்தை… – சித்ரா (k_chithra@yahoo.com)

இருப்பு!

This entry is part 33 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

முற்றத்துக் கயிற்றுக் கொடிக்கும் வீட்டிற்கு மென மாறிமாறி உலர்த்தியும் விட்டுவிட்டுப் பெய்த தூறலின் ஈரம் மிச்ச மிருந்ததால் இரண்டு ஆண்டுகளுக்குமுன் இறந்துபோன வாப்பாவின் சட்டை யொன்றை உம்மாவிடம் கேட்க ‘வாப்பாவுக்கு ரொம்பப் பிடித்த’தாக தந்தச் சட்டை… நான் பிரயோகித்துப் புறக்கனித்துக் கழட்டிப்போட்ட ஒன்று! தென்னந் தோப்பில் கரும் பச்சையாய் செழிப்பா யிருந்த ஒரு வரிசை மரங்களைக் காட்டி புருவம் சுருக்க ‘அவை வாப்பா நட்ட’வை என்றான் தோட்டக் காப்பாளன்! முன் முற்றத்தில் தலைவாசலுக்கு வலப்புறம் பந்தல் பிடித்து […]

காகிதத்தின் மீது கடல்

This entry is part 32 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

சிறுமி காகிதத்தின் மீது ஏழு கடலின் சித்திரத்தைத் தீட்டுகிறாள் அதில் ஏழு மீன்களை நீந்தவிடுகிறாள் ஏழு மலைகளின் சித்திரத்தைத் தீட்டுகிறாள் அதன் முகடுகளில் ஏழு பஞ்சு மேகங்களை மிதக்கவிடுகிறாள் ஏழு மேகங்கலிருந்து சில மழை துளிகளை உதிர விடுகிறாள் மழைத் துளிகள் விழுமிடத்தில் ஒரு பூவின் சித்திரத்தைத் தீட்டுகிறாள் அதனடியில் தன் பெயரை எழுதுகிறாள் இனி அவளை காண்பதென்றால் ஏழு கடல் ஏழு மலைளைத் தாண்டி பயணிக்க வேண்டியிருக்கும் நமக்கு. ரவிஉதயன் raviuthayan@gmail.com

யுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்

This entry is part 31 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

இலங்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், அவை குறித்த தமிழ்நாட்டின் உணர்வுகளையும், நாட்டின் அரசியல் நிலவரங்களையும் மிகச் சரியான முறையில் புரிந்து கொள்ள ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு முடியாமல் போனமையால், அதற்குப் பதிலாக பெரியதொரு நஷ்ட ஈட்டைச் செலுத்த இலங்கைக்கு நேர்ந்தது. அதே போல விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த நீதமான பார்வை இல்லாத காரணத்தால் அதற்காக இந்தியாவுக்கும் பெரியதொரு நஷ்ட ஈட்டைச் செலுத்த நேர்ந்தது. விடுதலைப் புலிகளுக்கெதிராகச் செய்யப்பட்ட யுத்தத்தின் போது, அதைத் தடுக்கவென இந்தியாவிடமிருந்து எந்தவொரு உறுதியான […]

வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்

This entry is part 30 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

– எந்தவொரு நிகழ்வுக்கும் மறுபக்கம் உண்டு. ஆனால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு பக்கமே உரத்த குரலிலான பிரசாரத்தின் விளைவாகப் பார்வையில் படுவதும் பொதுப் பிரக்ஞையில் பதிந்து போவதுமாகிவிடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் இருந்துவந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்ந்த மிக முக்கிய சமூக நிகழ்வு என்று சொல்லத் தக்க தோள் சீலைக் கலகம் இப்படியான ஒன்று. இதுவரை அறியப்படாத அதன் மறுபக்கம் இப்போது சென்னை குரோம்பேட்டையிலிருந்து இயங்கிவரும் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் […]

ஜென் ஒரு புரிதல் பகுதி 7

This entry is part 29 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

நகரங்களும் நகர வாழ்க்கையும் கிராமங்களிலிருந்து எவ்வாறு வேறு படுகின்றன? நகரங்களும் நகரவாசிகளும் சுகவாசிகளாகவும் சூட்சமம் மிக்கவர்களாகவும் கிராமவாசிகள் அப்பாவிகள் என்றும் சித்தரித்துப் பல திரைப் படங்களும் எழுத்துலகப் படைப்புகளும் வந்துள்ளன. இது சரியான அணுகுமுறை தானா என்று தொடராமல் நகரங்களுக்கே உரித்தான சில பிரச்சனைகளைப் பார்ப்போம். ஒரு நகரம் உருவான பின் சுற்றியுள்ள எல்லாப் பகுதிகளுக்குமான வணிகமும் சேவைகளும் நகரில் மென்மேலும் வளருகின்றன. தன்னால் தாக்குப் பிடிக்க முடியாத ஒரு ஜனத்திரளை நகர் வரவேற்று சமாளித்து அனுப்புகிறது. […]

உடைப்பு

This entry is part 28 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

சபா தயாபரன் வாசலில்; அம்மா புதிதாக நட்ட செவ்வரத்தம் மரத்தில் இரண்டு பெரிய செவ்வரத்தம் மலர்கள் கொஞ்சிக் குலவியபடி இருந்தன..பனிக்கு மதாளித்து வளர்ந்து , பச்சை இலையில்; வெள்ளை புள்ளி வைத்த குரோட்டன் இலைகள் , மஞ்சள் வெயிலில் வண்ணம் காட்டி நின்றன அவற்றின் அடியில் துளிர்த்து நின்ற பனித் துளிகளை கைகளினால் உதறி விடுகையில் ஐpல் என்று குளிர்ந்தது.அம்மா ஞாபகம் ஷாந்தனுக்கு சின்னவனாய் இருக்கையில் முழுகிவிட்டு வரும் இவனை அம்மா கைகளினால் கோதி விடுவாள் அப்Nபுhது […]

மீண்டும் வியாழனைச் சுற்ற நீண்ட விண்வெளிப் பயணம் துவக்கிய விண்ணுளவி ஜூனோ

This entry is part 27 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

  [Juno Spacecraft Travels to Orbit Jupiter] (2011 – 2016)  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “பரிதி மின்சக்தித் தட்டுகள் இணைத்தியங்கும் (Solar Panel Powered) விண்ணுளவிப் பயணத் திட்டமானதால், துருவ நீள் வட்டத்தில் சுற்றும் ஜூனோவின் பரிதி மின்தட்டுகள் எப்போதும் சூரியனை நோக்கியே பறந்து செல்லும்.  விண்ணுளவி வியாழக் கோளின் மறைவுப் புறத்தில் பயணம் செய்யாதபடி நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.” ஸ்காட் போல்டன்,  ஜூனோ திட்டப் பிரதம விஞ்ஞானி (ஜூனோ […]