ஊடகங்களின் கதாநாயகர்கள் – ABCD (American Born Confused Desi) (கேரளா, இயக்குநர்- மார்ட்டின் பிரக்காட்)

This entry is part 2 of 26 in the series 8 டிசம்பர் 2013

ஷைன்சன்        அன்னா ஹஸாரே எப்படி சில நாட்களுக்குள்ளாக இந்தியாவின் மிக முக்கியமான நபராக மாறி, அதே வேகத்திலேயே மறக்கப்பட்டும் போனார்? பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து வரும் இந்திய நாட்டில் நிர்பயாவின் மீதான வன்முறை மட்டும் எப்படி நாட்டின் மனசாட்சியை உலுக்கும் ஒரு சம்பவமாய் மாறிப்போனது? நாடெங்கும் பல கொலைக்குற்றங்கள் நடக்கின்ற போது நொய்டா இரட்டைக் கொலை மட்டும் எப்படி நாடு முழுக்க பிரபலமானது? பத்து வருடங்களுக்கு முன்பு நாட்டின் மனசாட்சியை உலுக்கிய குஜராத் […]

‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.

This entry is part 5 of 26 in the series 8 டிசம்பர் 2013

தமிழன்பருக்கு வணக்கம். அயல்நாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழைக் கற்பிக்கும் தமிழாசிரியர்களை உருவாக்குவதற்காக ‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.   இப் பட்டயப் படிப்பு குறித்தான அறிவுப்பு மடல் இணைக்கப்பட்டுள்ளது. இணையவழி நடத்தப்படும் இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் பின்வரும் இணையப் பக்கத்தில் தகவல்களைப் பெறலாம். http://www.srmuniv.ac.in/tamilperayam/dtt.html இந்தப் பயிற்சிச் படிப்பில் சேர விரும்புவோர் பின்வரும் இணையதளத்தில் பதிவு செய்யவும். http://evarsity.srmuniv.ac.in/TamilPeraiyam/dtt/login.jsp உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் […]

டௌரி தராத கௌரி கல்யாணம் – 28

This entry is part 1 of 26 in the series 8 டிசம்பர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர்     என்னது ….? என்று தன் இரு புருவங்களை உயர்த்தி கௌரியைப் பார்த்த  பிரசாத்தின்  ஆச்சரியப் பார்வையில்,  வொய் திஸ் .’L’ போர்டு ? ன்னு பயந்துட்டியா பிரசாத்….? வேறெதுக்கு ‘கங்கா கல்யாணி’யை வளர்க்கத்தான்..ஆஹாஆஹாஆஹா ….வேறெதுக்கோன்னு நெனைச்சுட்டேளாக்கும் ..! என்று விஷமச் சிரிப்புடன் மங்களத்தைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தபடியே வண்டிக்குள் ஏறுகிறாள் கௌரி. அம்மா…நீயும் பார்த்து ஏறு….என்றவளிடம்.,   அய்யோ ….அதெல்லாம் ஒண்ணுமில்ல…..திடீர்னு ஒரு பிரம்மச்சாரிக்கு ‘L’ போர்டு மாட்டி அழகு பார்க்கணம்னு எப்டியாக்கும் தோணித்து அதான்…என்று  பிரசாத் சிரிக்க அந்த இடத்தில் ஒரு சிரிப்பலை தொடர்ந்து கேட்டது.   […]

ஈசாவின் விண்ணுளவி கோசி [GOCE] கண்டுபிடித்த பூகம்ப நில அதிர்ச்சிகள் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழும்புகள்

This entry is part 4 of 26 in the series 8 டிசம்பர் 2013

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா [ Earth’s Gravity Scars, made by Japan Earthquake in 2011 ]   http://spaceinvideos.esa.int/Videos/2013/03/Earthquake_sensed_by_GOCE http://spaceinvideos.esa.int/Videos/2013/03/Earthquake_felt_in_Space http://spaceinvideos.esa.int/Videos/2004/07/GOCE http://spaceinvideos.esa.int/Videos/2011/03/GOCE_Geoid http://spaceinvideos.esa.int/Videos/2013/10/Goce_completes_his_mission http://spaceinvideos.esa.int/Videos/2013/10/Atmospheric_density_and_winds_from_GOCE http://spaceinvideos.esa.int/Videos/2013/10/GOCE_data_on_density_and_wind_compared_to_model   குட்டை உயரத்தில் புவிசுற்றி வரும் வட்டப் பாதையில் ஈசாவின் கோசி விண்ணுளவி ! துல்லியமாய்க் கணித்துப் புவியீர்ப்பு மாறுதல் களை எல்லாம் நவீன முறையில் படங்கள் மூலம் பதிவு செய்யும் ! கடலின் நீரோட்டச் சுழற்சி […]

இருண்ட இதயம்

This entry is part 7 of 26 in the series 8 டிசம்பர் 2013

பவள சங்கரி “விடுங்க …. ஆரும் பார்க்கப் போயினம்.. “ உதடுகள் மட்டும் ஏதோ சொல்வதை உள்ளம் மறுத்து அதுவே தொடர வேண்டும் என்று ஏங்கும் அதிசயத்தை உணர்ந்தாள் தமிழினி. “தமிழினி, எப்படி இவ்வளவு மென்மையாக இருக்கிறாய்?. அதுசரி, காயம் ஏதும் பட்டதோ? ” கீழே விழப் போனவளை தாங்கிப் பிடித்தபோது, அவன் வார்த்தைகளில் இருந்த அதீத அன்பை உணரும் நேரம் உள்ளமெல்லாம் பூவாய் பூத்தது! “அதெல்லாம் ஒன்னுமில்லை, விடுங்க.. நான் போய்விட்டு வாறன்” “என்ன தமிழினி, […]

நத்தை ஓட்டுத் தண்ணீர்

This entry is part 1 of 26 in the series 8 டிசம்பர் 2013

முனைவர் ந.பாஸ்கரன், சங்கு சிற்றிதழின் ஆசிரியர் ஒரு நாள்; இந்நூலுக்கு ஓர் அறிமுகம் எழுதுங்கள் என்று என்னிடம் கொடுத்தார்.வழக்கம் போல் தவிர்த்தும், அவர் வழக்கம் போல் திணித்தும் சென்று விட்டார். இரண்டு தினங்கள் கழித்து அப்புத்தகத்தை எடுத்தேன். படித்தேன். படித்துக்கொண்டே இருந்தேன். மிக விருவிருப்பாக நகர்ந்தது. ஹரணியின் கவிதைகளைக் கதைகளைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். இப்பொழுதுதான் அவரது உரைநடையைப் படிக்கின்றேன். அவரது உரைநடையின் வீச்சு என்னை வெகுவாகப் பாதித்தது. அவரது உரைநடை என்னுள் நடந்தது என்பதைவிட நாட்டியமாடியது என்றுதான் […]