– தெளிவத்தை ஜோசப் – இலங்கை ஒரு கால் நூற்றாண்டுக்கு சற்றுக் கூடுதலாகவே கால்நடை வைத்தியராக அவுஸ்திரேலியாவில் பணியாற்றும் திரு.நோயல் நடேசன் அவர்கள் எழுத்துத்துறையுடன் அதே ஆண்டு காலம் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றுபவர். ‘திடீரென நிகழ்ந்த விபத்தினால் பேசமுடியாமற்போன சிறுவனைப்போன்று நானும் எனது வாழ்விடத்தில் நடந்த சம்பவங்களை வெற்றுத்தாள்களில் கிறுக்கி வைத்திருந்தேன். பதினைந்து வருடங்களுக்கு முன்’ – என்று தனது எழுத்தின் தோற்றம் பற்றிக் குறிப்பிடுகின்றார் திரு.நடேசன். (வண்ணாத்திக்குளம்- நாவல் – […]
பமீலா சந்திரன் பட்டு புடவை பட்டு வேட்டி மின்னுகிறது மாயிலை தோரணம் மார்க்கெட்டில் விற்றுதீர்ந்தது!!! மங்கள் இசை டிவியில் ஒலிக்கிறது கோயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது !! கிரமப்புறங்களில் பண்டிகை களைகட்டியது புது பானையில் பொங்கல் பொங்கி வழிந்தது !! இப்படி தான் பொங்கல் கொண்டாட்டம் ஊரெல்லாம் களைகட்டும் -ஆனால் பொறியாளர்கள் எங்களுக்கு இவையெல்லாம் கூகுளின் முன் மட்டும்…!!!
சென்னை ஜனவரி ’10 ,2015 சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலசில் இன்று காலை 11 மணிக்கு காட்பாதர் திரைக்கதை நூல் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்டது. 1972ல் ஹாலிவுட்டில் வெளியான காட்பாதர். இன்று வரை உலகம் முழுக்க மிகப்பெரிய அதிர்வுகளை உண்டாக்கி வருகிறது. வணிக ரீதியாகவும் விமர்சன தர ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மரியோ புசோவின் நாவலை அடிப்படையாக வைத்து பிரான்ஸில் போர்ட் கபோலா இயக்கிய இத்திரைப்படத்தை தழுவி இன்றும் உலகம் முழுக்க […]
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா https://www.youtube.com/watch?feature=player_embedded&v=cQMB7o3SXOw https://www.youtube.com/watch?feature=player_embedded&v=4aYQixhdWY4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Ri5MX9ygN2g https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=F6fvIpCVurk ********************* காலக் குயவன் ஆழியில் சுழற்றிய ஞாலத்தின் உட்கருவில் பூத வடிவிலே பிறப்பு முதல் அணுப்பிளவு உலை கணப்பளித்து வருகுது பில்லியன் ஆண்டுகளாய் ! எருப் பொருள் தீர்ந்து இயக்கத்தில் இரட்டித்துப் பெருக்கும் வேகப் பெருக்கி அணு உலை ! உட்கரு உள்ளே கட்டுப் பாடுடன் இயங்கியும் நிறுத்தம் அடைந்தும், விட்டு விட்டு வேலை செய்வது ! […]
தமிழ் வகுப்பில் இன்னொரு விரிவுரையாளர் கிருஷ்ணசாமி என்பவர் இராமாயணம் எடுத்தார். அதில் நட்பின் இலக்கணத்துக்கு குகன் பற்றிய பகுதியை விளக்கியது இன்னும் அப்படியே மனதில் பதிந்துள்ளது. அது அயோத்தியா காண்டத்தில் உள்ளது. இராமாயணத்தில் அது ஓர் அற்புதமான காட்சி! இராமன் வனவாசம் சென்று கங்கை ஆற்றின் மறு கரையில் குகனின் பராமரிப்பில் உள்ளான். குகன் எனும் வேடவர் மன்னன் இராமன் மீது அதிகமான பற்றுதல் கொண்டவன். இராமன் காட்டில் இருந்ததால் அவனுடைய பாதுகாப்பு கருதி அவன் […]
_ லதா ராமகிருஷ்ணன் 38வது சென்னைப் புத்தகக் கண்காட்சி ஆரம்பமாகிவிட்டது! கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக மாற்றிதழ், நவீன இலக்கியம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் பன்முகம் என்ற காலாண்டிதழையும் இப்போது புதுப்புனல் என்ற மாத இதழையும் எத்தனையோ இடையூறுகள், பொருளாதார நெருக்கடிக்கு இடையில் தொடர்ந்து நடத்திக்கொண்டுவரும் புதுப்புனல் பதிப்பகத்தார் தோழர் ரவிச்சந்திரன் – சாந்தி தம்பதியர் 152 _ 153 என்ற இரண்டு அரங்குகளில் தங்களுடைய வெளியீடுகளையும், குறிப்பிடத்தக்க சமூக, இலக்கிய நூல்களையும் […]
ந.பெரியசாமி(1971) பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராமத்தில் பிறந்தவர். தற்சமயம் ஓசூரில் தனியார் நிறுவனமொன்றில் பணி. 2003களிலிருந்து எழுதிவருகிற இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘நதிச்சிறை’ 2004இல் வெலியானது. ஓசூர் தமுஎகச கிளைப் பணிகளில் பங்கேற்பது. ஓசூர் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி நண்பர்களுடன் இணைந்து மாற்று சினிமா திரிஅயிடுவது. புதுவிசை இதழின் நிர்வாகப் ஒறுப்பு என தனது தொடர்ந்த செயல்பாடுகளால் பரவலாக அறியப்பட்டவர். _ ‘மதுவாகினி’ தொகுப்பிலிருந்து. “ஆசைகொண்டு வாங்கிய மூன்று சக்கர […]
மு.இராமனாதன் ## (ஹாங்காங் ‘இலக்கிய வட்ட’த்தின் 25ஆம் கூட்டம் ஜூலை 13, 2008 அன்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மு இராமனாதன் ஆற்றிய நிறைவுரையிலிருந்து சில பகுதிகள்) அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன். இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. இது 25ஆவது கூட்டம். இந்த மைல்கல்லை அடைவதற்கு நமக்கு 6-1/2 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. நம்முடைய ஓட்டம், அல்லது நடை மிகவும் மெதுவாகத்தான் இருக்கிறது. இலக்கிய வட்டம் போன்ற ஒரு அமைப்பு, ஹாங்காங் சூழலில் அவசியம்தானா? இலக்கிய வட்டம் […]
இந்த “ஒரு வரிக் கவிதையை” தலைப்பாய் சூட்டியிருக்கிறது “தி இந்து தமிழ்” தனது தலையங்கத்தில்! பிரெஞ்சு மண் ஒரு புரட்சியை ருசி பார்த்திருக்கிறது. வறட்சி தீப்பிடித்த சிந்தனை இப்படிவெறி பிடித்ததை இன்று தான் பார்க்கிறது. அது என்ன வெறும் விறைத்த “ஈஃப்பில் கோபுரமா?” ஃப்ரான்ஸ் நாட்டு பாரீஸில் மக்கள் நட்டு வைத்த சுதந்திரத்தின் முதுகெலும்பு அது! முதுகெலும்பற்ற துப்பாக்கிப்புழுக்கள் துப்பிய எச்சிலால் “லிபெர்டி ஈக்குவலிடி ஃப்ரெட்டனிடி” என்ற “ஜீன் ஜேக்குவஸ் ரூஸோ”வின் உயிர் மிகுந்த சொற்களையா அழிக்க […]
தமிழுக்கு விடுதலை தா சி. ஜெயபாரதன், கனடா. தமிழைச் சங்கச் சிறையில் தள்ளாதே ! தங்கச் சிறை வேண்டாம் ! கை கால்களில் பொன் விலங்கு பூட்டாதே ! தமிழுக்கு வல்லமை தேவை மூச்சு விடட்டும்; முன்னுக்கு வரட்டும் ! நுண்ணோக்கி மூலம் நீ பின்னோக்கிப் பாராது, முன்னோக்கிப் பார் தொலை நோக்கி மூலம் ! வேரூன்றிக் கிளைகள் விட்டு விழுதுகள் வைய மெங்கும் பரவட்டும்; கழுத்தை நெரிக்காதே ! காற்றில் நீந்தட்டும் ! கால் பந்தாய் […]