உன்னைப் பற்றி

This entry is part 12 of 22 in the series 24 ஜனவரி 2016

  சேயோன் யாழ்வேந்தன்   நான் பயணிக்கும் அதே ரயிலில்தான் ஒருவாரமாய் பயணிக்கிறாய் உன்னைப்பற்றி வேறெதுவும் எனக்குத் தெரியாது ஏறும் ரயில் நிலையத்துக்கு அருகில்தான் உன் வீடு உன்னைப்பற்றி வேறெதுவும் எனக்குத் தெரியாது இறங்கும் நிலையத்துக்கு மிக அருகில் பணிபுரிகிறாய் உ.ப.வே.எ. தெரியாது ரோஜாப் பூக்களை விரும்பிச் சூடுகிறாய் உ.ப.வே.எ. தெரியாது சந்திரிகா சோப்பு உபயோகிக்கிறாய் உ.ப.வே.எ. தெரியாது நான் பணிபுரியும் அதே நிறுவனத்தில்தான் உன் தம்பியும் வேலைசெய்கிறான் உ.ப.வே.எ. தெரியாது அவனுக்கு அடுத்த மாதம் பிறந்தநாள் […]

மனுஷி கவிதைகள் —- ஒரு பார்வை ‘ முத்தங்களின் கடவுள் ‘ தொகுப்பை முன் வைத்து….

This entry is part 14 of 22 in the series 24 ஜனவரி 2016

1985 – ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர் மனுஷி . இவரது இயற்பெயர் ஜெயபாரதி. புதுவையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளார். ‘ குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் ‘ [ 2013 ] இவரது முதல் கவிதைத் தொகுப்பு. ‘ முத்தங்களின் கடவுள் ‘ இரண்டாவது தொகுப்பு. இவரது சில கவிதைகள் மனுஷ்ய புத்திரன் கவிதைகளின் தாக்கம் பெற்றுள்ளன. எளிமை , சுய சிந்தனை வழிப்புதுப் படிமங்கள் , புனைவு , காதல் , […]

“ஆங்கிலம்” என்பது ஒரு மொழி மட்டுமே “அறிவு” அல்ல

This entry is part 15 of 22 in the series 24 ஜனவரி 2016

  முனைவா் பு.பிரபுராம்           உலகில் நூற்றுக் கணக்கில் பல்வேறு மொழிகள் பேசவும் எழுதவும் பயன்படுகின்றன. அவற்றில் ஆங்கிலமும் ஒரு மொழி அவ்வளவே. பிறகு ஏனய்யா தமிழ்நாட்டில் பல மேதாவிகள் ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவு வளரும், நிறையச் சம்பாதிக்க முடியும் என்று அழுத்தமாகச் சொல்கிறார்கள்?. ஏன் பல பெற்றோர்கள் இலட்சக் கணக்கில் செலவு செய்து, தங்கள் பிள்ளைகளை எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற அரும்பெரும் படிப்புகளில் சோ்க்கிறார்கள்?. ஏன் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் […]

மயூரா ரத்தினசாமி கவிதைகள் — ஒரு பார்வை

This entry is part 13 of 22 in the series 24 ஜனவரி 2016

மயூரா ரத்தினசாமி ‘ நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை ‘ என்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார். தலைப்பே வித்தியாசமானது; சிந்திக்க வைக்கிறது. இச்சொற்கள் உருவாக்கும் தொனி ஒருவித தவிப்பை வாசகன் மனத்தில் உருவாக்குகிறது. ” கவிதையெழுதுவதை அவஸ்தை என நான் உணரவில்லை. சமூகத்தின் மீதான . என் சுயநலம், என் வக்கிரம் மீதான என்னுடைய எதிர்வினை கவிதையாக உருக்கொள்கிறது எனலாம். ” என்கிறார் மயூரா இவரது கவிதைகள் அவசியமான சொற்கள் வழியாக நேர்த்தியான வெளிப்பாடு கொண்டவை. ‘ செகப்பு […]

திரும்பிப்பார்க்கின்றேன் ஈழத்தின் தொண்டமனாறு படைப்பாளியின் கதைக்கரு அய்ரோப்பாவரையில் ஒலித்தது

This entry is part 16 of 22 in the series 24 ஜனவரி 2016

முருகபூபதி – அவுஸ்திரேலியா 1963  இல் ஆனந்தவிகடனின் அங்கீகாரம்  பெற்ற ஈழத்தின் குந்தவை. அம்மாமாருக்கு எப்பொழுதும் தமது பிள்ளைகளைப்பற்றிய கவலைகள்  தொடர்ந்துகொண்டே இருப்பது இயல்பு. எனது அம்மாவுக்கும் நான் மூத்த மகன் என்பதால்தானோ என்னவோ என்னைப்பற்றிய கவலைகள் அதிகம் இருந்தன. சோதிடத்தில் நம்பிக்கைகொண்டிருந்த அம்மா, எனக்காக நான் பிறந்தவுடன் கணித்து எழுதப்பட்ட சாதகக்குறிப்பை தான் சந்திக்கும் சோதிடர்களிடம் காண்பித்துக்கேட்பார். அவுஸ்திரேலியாவுக்கு புறப்படும்பொழுதும் அதனை என்னிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கச்சொன்னார். இன்றும் அது பாதுகாப்பாக இருக்கிறது. தொட்டெழுதும் பேனையால் […]

நெய்தல் நிலத்தில் நெல் உற்பத்தியும் சங்கத் தமிழரின் நீர் மேலாண்மையும்

This entry is part 17 of 22 in the series 24 ஜனவரி 2016

                      பா. சிவக்குமார்    முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை – 46. sivasivatamil@gmail.com   நீர் உயிர் வாழ்வதற்கு மிக இன்றியமையாத ஒன்று. இதனை, “நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்” (புறம். 18:18) என்று புறநானூறும், “நீரின்று அமையாது உலகு…” (குறள். 20) என்று திருக்குறளும் நீரின் சிறப்பினைப் வெளிப்படுத்துகின்றன. இத்தகைய சிறப்புமிக்க நீரைப் பாதுகாத்து, வறண்ட காலத்திலும் நீர்வளத்துடன் இருக்க குளங்கள் மற்றும் பிற நீர் நிலைகள் பெரும்பங்காற்றி உள்ளன. சங்ககால மக்களின் […]

ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2016 மாத இதழ்

This entry is part 18 of 22 in the series 24 ஜனவரி 2016

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2016  மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 425க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்

வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் – பகுதி-3 எனக்குப் பிடித்த எனது உரை

This entry is part 19 of 22 in the series 24 ஜனவரி 2016

படத்தில்: கடிகாரச் சுற்றுப்படி: செ.முஹம்மது யூனூஸ், மு:இராமனாதன், எஸ்.பிரசாத், வித்யா ரமணி   வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் தொகுப்பு: மு இராமனாதன் பகுதி-3 எனக்குப் பிடித்த எனது உரை   [ரேடியோ டெலிவிஷன் ஹாங்காங்(RTHK) சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்திய  தொடர் ஒலிபரப்பில் 19.9.15 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டத்தைக் குறித்த உரையாடல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் எழுத்து வடிவம் இங்கே இடம் பெறுகிறது. இது மூன்றாம் பகுதி]   எனக்குப் பிடித்த எனது […]

மூன்று எழுத்தாளர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சி

This entry is part 20 of 22 in the series 24 ஜனவரி 2016

             இம்மாதம் காலமான  மூன்று தமிழ் எழுத்தாளர்களின்              நினைவஞ்சலி நிகழ்ச்சி “ வாசக தளம் “ அமைப்பின் சார்பில்  பழைய மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் எதிரிலான, எம்ஜிபுதூர் மூன்றாம் வீதி ” ஓஷோ பவனி“ல்  புதன் அன்று மாலை நடைபெற்றது.     வழக்கறிஞர் சி.ரவி தலைமை தாங்கினார்.   மறைந்த சென்னை சார்வாகன் அவர்களின் சிறுகதைகளின் சிறப்புத்தன்மையையும் தொழு நோயாளிகளுக்கான மருத்துவப்பணியில் 30 ஆண்டுகளுக்கு முன்பே  அவர் பத்மஸ்ரீ பரிசு பெற்றதையும் […]