அழகர்சாமி சக்திவேல் முகநூலில் என் காதலனுடன் அரட்டைக் கச்சேரி… குழந்தை அழறான் பாருங்க… என் மனைவி கத்தினாள்… என் சிந்தை ஓடையில் சங்கடப் புழுக்கள். கிலுகிலுப்பை தேடினேன் என் பழைய அலமாரிக்குள். கிலுகிலுப்பை கிடைத்தது… கூடவே என் அம்மாவின் தொலைந்து போன கடிதம். கடிதம் பிரித்தேன்… பழைய வாசனை.. பழைய நினைவுகள்.. என் நினைவுக் குழந்தை அழுதது.. அந்த அழுகை… என் நிஜக் குழந்தையின் அழுகையில் அமுங்கிப் போயின.. குழந்தையின் அழுகையை […]
குமரன் முன் குறிப்பு: பெண்கள் நிறைந்த பெருங்குடும்ப மரமொன்றின் ஒரு கிளையாய் பிறந்து, அவர்கள் கைப்பிடித்தும் செவி மடுத்தும் வளர்ந்து, புத்தகங்கள் வாயிலாக பெண்மை குறித்த மேன்மையுறு படிமங்கள் கற்று அவற்றை குடும்பத்து மற்றும் சமூகவெளியில் பழகிய பெண்களுடன் ஒற்று, அவ்வாறு பெற்ற பிம்பங்கள், வயதின் வாயில்கள் வழியே ஆங்காங்கே உடைபட்டு அல்லது உடைக்கப்பட்டு, எந்த ஒரு பாலினத்தவரையும், வயதினரையும் பொதுவாய் எடை போட்டு ஒரே தராசில் நிறுத்த இயலாது என்பதையும், ஆண் பெண் இருவரிடத்திலும் நல்லவை […]
அழகர்சாமி சக்திவேல் முகமலைப் பயிர்வனம் வனமோரம் வாய்க்குளம் குளக்கரையில் இன்பமாய்க் கூத்தாடியதென் இதழ்க்கால்கள் சுகமுடன் குளமிறங்கி சுவைநீர் குடித்தெழுந்தேன் மாமன் முனகினான் “உன்மீசை குத்துதடா” நெஞ்சுமலைப் பயிர்வனம் வனமோரமிரு நீராம்பல் நீராம்பல் கூம்புபற்றி நீர்குனிந்து பருகுமெனைக் கெஞ்சியது நீராம்பல் குலுங்கியது நெஞ்சுமலை மாமன் முனகினான் “உன்மீசை குத்துதடா” முதுகுமலைப் பயிர்வனம் வனத்தின்கீழ் பஞ்சுமெத்தை பஞ்சுமெத்தை தனைத்தாங்கும் இருமுரட்டுத் தேக்குமரம் குதூகலமாய் மெத்தையிலென் முகம்பதித்து நான்தூங்க மாமன் முனகினான் “உன்மீசை குத்துதடா” இடைமலைப் […]
புறக்கோளாய் சூரியனுக்கோர் புதிய பூதக்கோள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://youtu.be/6poHQ2h00ZA https://youtu.be/fAIV_6lcbIQ https://youtu.be/TBnItMgSjsE http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A ********************* சூரிய குடும்பப் புறக்கோளாய்ச் சுற்றும் புதிய கோள் ஒன்று ஒளிந்திருப் பதற்கு ஆதாரம் தெளிந்துள்ளது ! பத்தாயிரம் ஆண்டுக் கொருமுறை பரிதியைச் சுற்றி வரும் நீண்ட நீள்வட்ட பாதை. குள்ளக் கோள்களை ஒருபுறம் தள்ளும். நெப்டியூன் நிறை. பூமியைப் போல் அதற்கு பத்து மடங்கு பளு. புறக்கோள்கள் போல் […]
சிவக்குமார் வீட்டுக்குள் வரும் போது , நாச்சியார் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள் . ‘ ஒ, நல்ல வேளையா டயத்துக்கு வந்துட்டேள் .கிச்சன்ல டிகாக் ஷன் இறக்கி வச்சிருக்கேன் .ஏற்கனவே பால் காய்ச்சி வச்சாச்சு . அதை சுடப்பண்ணி காப்பி கலந்து குடியுங்கோ . நான் கோயிலுக்கு கிளம்பிண்டு இருக்கேன் ” என்றபடி வாசல் கதவுக்குப் பக்கத்திலிருந்த செருப்பு ஸ்டாண்டிலிருந்து செருப்பை எடுத்துப் போட்டுக் கொண்டாள். அவன் பதிலை எதிர்பார்க்கிறமாதிரி அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள் . […]
ஜி,சரவணன் விடிந்து ரொம்ப நேரமாகிவிட்டது. வீடுகளில் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். சீனிச்சாமி அய்யா திண்ணையிலிருந்து இறங்கி இன்னும் தெருவில் கால் வைக்கவில்லை. தெருவிலிருக்கும் ஆண்கள் வெளியில் கிளம்பும் நேரத்தைவிட சீனிச்சாமி திண்ணையைவிட்டு தெருவில் நடக்கத் தொடங்குவதுதான் ஊருக்கே நேரக்கணக்கு. வழக்கமாக காலை நாலரை மணிக்கே எழுந்துவிடுவார். இருட்டிலே அமர்ந்தபடி நாலைந்து முறை வெற்றிலை சீவலை மெல்லுவதும் துப்புவதுமாக ஏழுமணி வரைக்கும் கழியும். இடைப்பட்ட அந்நேரங்களில் எதாவது காரியமாக யாரும் தெருவில் நடந்துபோனால் […]
உடலியல் பாடத்தில் உடலின் உறுப்புகளின் செயல்பாடுகள் பற்றி இரண்டு ஆண்டுகள் பயில வேண்டும். உடலியல் ஆராய்ச்சிகளில் இறந்துபோன மனித உடல்கள் பயன்படுத்த முடியாத காரணத்தால் நாய்களும், தவளைகளும், முயல்களும் பயன்படுத்தப்பட்டன. முதன்முதலாக நாய்களைப் பயன்படுத்தி வரலாற்று சிறப்புமிக்க ஒரு கண்டுபிடிப்பை உலகுக்கு உணர்த்தியவர் பாவ்லோவ் ( Pavlov ) என்ற ரஷ்ய நாட்டு உடலியலாளர் . பல அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்று இதுவும் எதிர்ப்பாராத ஒரு கண்டுபிடிப்புதான்! அவர் கண்டுபிடித்த உடலியல் உண்மையும் அதைக் கண்டுபிடித்த விதமும் […]
தியானம் என்பது மூச்சுகளில் தக்கிளி நூற்றல். காற்றை சோறு சமைத்து குழம்பு தாளித்து சாப்பிடுதல். ஆக்ஸிஜனின் “வேலன்ஸி-பாண்ட்” மோல்யூக்யூலர் ஸ்ட்ரக்ச்சர் என்று வேண்டுமானால் நுறையீரலுக்குள் புகுந்து பாடம் எடுக்கலாம். பாடம் படிக்கலாம். உங்களை மயிரிழையாக்கி உங்கள் மூக்கின் வழியே சுருட்டி நுழைத்துப்பாருங்கள். உங்கள் நெருடல்கள் அங்கே ஆயிரம் மலைகளின் பனிக்குடம் உடைக்கும். சுகமாய் மரணம். சுகமாய் ஜனனம். மீண்டும் மீண்டும் வேதங்கள் எச்சில் பட்டு புழுதின்று உங்களுக்குள் தகனம் ஆகி சாம்பல் மேடு தட்டும். காதுப்பறைகளுக்குள் காண்டா […]
* சுப்ரபாரதிமணியனின் புதிய நூல் – “அன்பே உலகம்“ என்ற சிறுவர் நூல் வெளியீடு 24/1/16 ஞாயிறு மாலை மக்கள் மாமன்ற நூலகத்தில், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூரில் நடைபெற்றது, தலைமை வகித்தவர்: பிரகாஷ் ( நிறுவனத்தலைவர், நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை ) முன்னிலைவகித்தவர் : சி.சுப்ரமணியன் ( மக்கள் மாமன்றம் ) சுப்ரபாரதிமணியனின் “அன்பே உலகம்“ சிறுவர் நூலை பிரகாஷ் ( நிறுவனத்தலைவர், நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை ) வெளியிட ஆறுச்சாமி […]
இரு நண்பர்கள் பிரியாமல் இருப்பதைக் காட்ட ஒரு திரைப் படத்தில் விசு இப்படி வசனம் எழுதுவார். ”அவர்கள் இருவரும் நகமும் சதையும் போல” கேட்டவர் உடனே கூறுவார். “ஆமாமாம்; நகச்சுத்தி வந்தா நகம் சதையைத் திட்டும்; சதை நகத்தைத் திட்டும்” பிரச்சனை என்ப்து வளர்ந்துவிட்ட பிறகு நட்பு பிளவுண்டு இரு கூறுகளாகி விடுவது இயல்பாகி விடுகிறது. கூடிப்பழகிய காலமெல்லாம் பறந்து போய் ஒருவருக்கொருவர் கூற்றுவனாக நினைக்கத் தொடங்குகிறார்கள். அடுத்தடுத்த வீடுகளைச் சேர்ந்தவர்கள் சிறுவயது முதல் ஒன்றாய் […]