1939 ஜனவரி 29 வெகுதான்ய தை 16 ஞாயிற்றுக்கிழமை ஆலப்புழை ரயிலடியே அதிசயித்து நிற்க நடேசன் ரயிலேறினார். யாராக்கும் புள்ளிக்காரன், ராஷ்ட்ரியக் காரனோ, மதராஸியிலே வல்ல சம்மேளனம் ஏதும் ஒத்து சேரும் பரிபாடியோ? அம்பலப்புழ நீலன் வக்கீலோட குமஸ்தன். வக்கீல் குமஸ்தன்மாரே, வரூ, நமக்கும் உக்ரனாயிட்டு ஒரு ஹர்த்தால் நடத்தலாம் என்று அஜெண்டா குறிச்சு ஆளனுப்பி வரவழைத்திருப்பார்கள். பாண்டிப் பிரதேச ஜனங்களுக்கு இதெல்லாம் சுபாவத்தில் இல்லாத விஷயம். இங்கே இருந்து அங்கே ஒண்ணும் ரெண்டுமாகப் போய்ச் சேர்ந்த […]
முட்டாளுக்குச் செய்த உபதேசம் ‘’ஏதோ ஒரு காட்டில் மரக்கிளையில் கூட்டைக் கட்டிக்கொண்டு ஒரு பக்ஷ¢ தம்பதிகள் வசித்து வந்தன. ஒரு சமயம் தை மாதத்தில் காலமற்ற காலத்தில் பெய்த மழையில் நனைந்து இளம் காற்றினால் உடல் நடுங்கிய ஏதோ ஒரு குரங்கு அதே மரத்தடிக்கு வந்து சேர்ந்தது. பற்கள் வீணை வாசித்துக் கொண்டு, மிகவும் பரிதாபகரமாக கைகளையும் கால்களையும் ஒடுக்கிக்கொண்டு இருக்கும் அதனிடம் பெண் குருவி இரக்கத்துடன் சொல்லிற்று: கால்களையும் கைகளையும் பார்த்தால் மனிதனுக்கு இருப்பது போலிருக்கிறது. […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கவினுறச் செய்துன்னைக் கவர்ந்து கொள்ளேன் ! காதல் வலையால் உன்னைக் கவர்ந்து கொள்வேன் ! கதவைத் திறப்பது உனக்கென் கையல்ல ! எனது கானங்கள் தான் உனக்கு கதவைத் திறக்கும் ! கழுத்து முழுதும் நகை உனக்கு குவித்திட மாட்டேன் ! பூமாலைப் பூத்தோரணம் உனக்குப் பூண மாட்டேன் ! என் பரிவுப் பண்பை எல்லாம் ஒரு மாலையில் பின்னி உன் கழுத்தணி செய்வேன் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com கவிஞர்களும் பறவைகளும் மனித வாழவியலில் வேரூன்றி, சமுதாயச் சூழலில் செல்வாக்குக் கொண்டு, பயனுடைய பாடல்கள் பலவற்றை மகா கவியும், மக்கள் கவியும் படைத்தார்கள். தனக்காக மட்டுமே எழுதிக் கொண்ட தன்மைக் கவிஞர்களாகாது, தம் கவிதைகள் அனைத்தையும் பிறருக்காகப் படைத்தவர்கள் இக்கவிஞர்கள். வோழும் உயிர் அனைததையும் தானாகக் கருதிய உயிரொருமைப்பாட்டு உணர்வினர் கவிஞர்கள் என்பர். இத்தகைய உணர்வால் பாரதியும் பட்டுக்கோட்டையும், மனித வாழ்வின் ஏற்றங்களைப் பற்றி சிந்தித்த […]
ஒரு பனிரெண்டு நிமிடக் குறும்படம் இதயத்தைக் கனக்க வைக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நி.நெ. தினேஷ். என்னை மட்டுமல்ல.. இன்னமும் ஆயிரம் சொச்சம் ஆட்களை. முகநூலில் நான் பார்த்த இந்தக் குறும்படம், இப்படி ஒரு அனுபவத்தை எனக்கு தந்தது. இப்படத்தின் முக்கிய பாத்திரம், இன்னும் சொல்லப்போனால் ஒரே பாத்திரம், ஒரு வயசாளி. களம் கேரளத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில், காணக்கிடைக்கும் தனித்த ஒரு அடையாளமில்லாத, சராசரி டீக்கடை மற்றும் உணவு விடுதி. காலம்: மதியம் 12 மணியிலிருந்து […]
மனநல மருத்துவர் டாக்டர் சிவராம் ‘க்ளினிக்’கில் மிகவும் பொறுமை இழந்தவளாகக் காத்திருந்தாள் மஞ்சுளா. முதல் ‘பேஷன்ட்’ வர இரண்டு மணி நேரமானது. இரண்டாவது ஆள் வெளியே வந்தால் தான் டாக்டரை சந்திக்க இயலும். அவன் உள்ளே போய் அரை மணி நேரம் ஆகிறது. காத்திருப்போருக்காக அவர்கள் வைத்திருந்த பல பத்திரிக்கைகள் மருத்துவர் எழுதும் மனநலம் பற்றியவை. ஒரு ‘ஃபிலிம் ஃபேரோ’ , ‘ஃபேஷன் மேகஸைனோ’ இல்லை. ஒரு மணி நேரம் கழித்து ஒரு வழியாக அந்த ஆள் […]
விழலுக்கு நீர் இறைக்கும் அரசு இயந்திரம் அரசியல் நடவடிக்கைகள், அறிவிப்புகள் இவையே அரசியல்வாதிகளின் தினசரிப் பணி . ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு இவை ஒன்றும் மாறி விடப் போவதில்லை. ஆட்சியில் இருக்கும் போது அரசின் முடிவுகள், பட்ஜெட் அறிவிப்பு போன்ற முக்கிய நடவடிக்கைகளில் சமூக நலனில் தமது அக்கறையை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு ஆட்சியாளர்களுக்குக் கிடைக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் நிதியை ஒதுக்கும் போது அரசியல் நடவடிக்கையாக மக்களின் நன் மதிப்பைப் பெறும் மிகப் பெரிய […]
1996 ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த பதினாறு ஆண்டுகளாக, ஆண்டுதோறும் கவிஞர் சிற்பி அறக்கட்டளை தமிழகத்தின் சிறந்த கவிஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வரிசையில் 17ஆம் ஆண்டுக்கான விருது மற்றும் பரிசுகள் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார் மற்றும் வானம்பாடிக் கவிஞர் தேனரசன்ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன. வானம்பாடி இயக்கத்தின் மூத்த கவிஞர்களுள் ஒருவரும் வெள்ளைரோஜா. மண்வாசல். காலத்தோடு ஆகிய கவிதைத்தொகுதிகள் நல்கியவ்ரும் ஆன கவிஞர் தேனரசன் சிறந்த ஆய்வாளரும் கூட. கங்கை கொண்டான் கவிதைகளை […]
அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்று சனிக்கிழமை. இப்போது போல், பள்ளிகளில் சனிக்கிழமைகளில் எல்லாம் பள்ளிக்கூடத்தைத் திறந்து வைத்துக் கொடுமை பண்ணியதில்லை. அப்பா என்னைக் கூப்பிட்டு, டேய்… மூர்த்தி அப்பா என்ன கொண்டு வந்திருக்கேன் தெரியுமா …. இங்க பாரு, அழகான நாய்க்குட்டி!. இப்பொழுது எனக்கு இருபத்தெட்டு வயதாகிறது. இதுவரையிலும் அப்பா, எனக்கு வாங்கிக் கொடுத்தவை எத்தனையோ இருக்கும். அத்தனையையும் விஞ்சி, ஜிக்கி மட்டும் என்னை பலமுறை நினைவுக்குள் கொண்டு செல்கிறான். அது ஒருவேளை ஜிக்கியைத் […]