விக்கிப்பீடியா – 3

This entry is part 26 of 46 in the series 19 ஜூன் 2011

“ஆமாம் குணா.. நீங்கள் எங்கே பிறந்தவர்?” “நான் புதுக்கோட்டைப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன்.  நீங்கள்..” “நான் சின்னாளப்பட்டி என்ற ஊரில் பிறந்தவன்” “அது என்ன சின்ன கிராமமா?” “அது திண்டுக்கல்லுக்கு அருகே இருக்கும் ஊராட்சி” “அப்படியா.. நான் சின்னாளப்பட்டி சேலை பற்றி மட்டும் கேள்விப்பட்டதுண்டு.  ஆனால் அதற்கு மேல் தெரியாது..” “உங்களுக்கு அது பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் விக்கிப்பீடியாவில் தேடுங்கள்.  அதில் இருக்கிறது.” “அப்படியா.. அப்படியென்றால் எங்கள் ஊர் பற்றியத் தகவல்களும் அதில் […]

இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்

This entry is part 25 of 46 in the series 19 ஜூன் 2011

(01) ………………………….. உதயசூரியன் கவிழ்ந்து ஈர்க்குத் தடியாகிப் பெருக்காதா எங்கிலும் மழைக் குப்பை…குப்பை..   உண்மைதான். வானம் ஒரு குப்பைத் திடலெனில் அதிலிருந்து கீழே விழுபவை குப்பைகள் தானே? தனது ‘இலை துளிர்த்து குயில் கூவும்’ தொகுப்பின் முதலாவது கவிதையில் இப்படித்தான் மழையை ஒரு குப்பையெனச் சொல்கிறார் கவிஞர் எஸ். நளீம். சேவல் கூவும் அதிகாலைவேளையொன்றில் பெய்யும் மழை குறித்த அவரது பார்வை இக் கவிதையாகியிருக்கிறது. தன் பரட்டைத் தலை விரித்து எல்லா இடங்களிலும் படர்ந்திருக்கும் மூடுபனியை, […]

பழமொழிகளில் பணம்

This entry is part 24 of 46 in the series 19 ஜூன் 2011

வாழ்க்கையில் அனுபவப்பட்டுப் பெற்ற பாடங்களைத் தமிழர்கள் பழமொழிகளாக்கிகப் பின்வரும் சந்ததியினரின் வாழ்க்கைக்குப் பயன்படும் என்று அவற்றை விட்டுச் சென்றனர். பழமொழிகளுள் பல்வேறுவிதமான உள்ளடக்கக் கூறுகள் காணப்படுகின்றன. மனிதப் பண்புகள், செயல்கள், பொருள்கள் பற்றிய மதிப்புகள், தொழில்களைப் பற்றிய செய்திகள் உள்ளிட்டவை அதிகம் பழமொழிகளில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. பணம் பணம் படைத்தோர் பற்றியும், அவர்களது செயல்களையும் சமுதாயத்தில் பணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் பழமொழிகளில் இடம்பெற்றுள்ளன. முதன் முதலில் மக்கள் தங்களிடம் இருந்த பொருள்களைக் கொடுத்துவிட்டுப் பின்னர் அதற்கு ஈடாகத் […]

கறுப்புப்பூனை

This entry is part 23 of 46 in the series 19 ஜூன் 2011

உலுக்கி எழுப்பினாற்போல், திடுக்கிட்டுப்போய் எழுந்த மேகநாதனுக்கு அந்த ஓலம் , நாடி நரம்புகளையெல்லாம் ஊடுருவி, விதிர்விதிர்க்கச் செய்யும் ,வேதனையாக  இருந்தது. அவனால் தாங்கவே முடியவில்லை.கடந்த ஒரு வாரமாகவே இப்படி அடிவயிற்றிலிருந்து பிளிறிக்கொண்டு எழும் இந்த கதறல் , ஒரு பூனையின் ஓலம் என்றால் நம்பவா முடிகிறது? எல்லாம் சபிக்கப்பட்ட அந்த ஞாயிற்றுக்கிழமையில் தான் நடந்தது . விடுப்பு நாளானதால் ஹாய்யாக கட்டிலில் படுத்துக்கொண்டு பத்திரிகை படித்துக்கொண்டிருந்தான் மேகநாதன். திடீரென்று மீனாட்சி அலறினாள். ” என்னங்க  , பூ […]

எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)

This entry is part 22 of 46 in the series 19 ஜூன் 2011

வே.சபாநாயகம் எழுத்தாளர் அனுப்பும் கதை அல்லது கட்டுரையின் தலைப்பை, தனதுரசனைக்கு அல்லது வாசகரது ரசனைக்கு ஏற்றது என ஆசிரியர் கருதுவதற்குஏற்ப மாற்றுவது ஆசிரியரின் இன்னொரு உரிமையாகும். சில சமயம் மாற்றப்படும்தலைப்பு எழுத்தாளருக்கு உவப்பானதாகவும் அமைந்து விடுவதுண்டு. அநேகமாகஎழுத்தாளர் முகம் சுளிப்பதாகவே மாற்றம் அமைவதுதான் யதார்த்தம். அதேசமயம் வாசகருக்கும் உவந்ததாகவும் அமைந்து விடலாம். ஆனால் படைப்பாளிமுகம் சுளிப்பதில் பயனில்லை. அடுத்து அவருக்கு வாய்ப்பு இல்லமால் போகக்கூடும். எல்லா பத்திரிகைக்கும் இது பொதுவானதுதான் என்றாலும் ‘குமுதம்’பத்திரிகைக்கு தலைப்பை மாற்றுவது என்பது […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)

This entry is part 21 of 46 in the series 19 ஜூன் 2011

  மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       “நான் அவனுக்குக் கிண்ணம் நிறைய ஆனந்தத்தை அளித்தேன்.  ஆனால் அவனோ அதைத் தரையில் கொட்டி விட்டான், அவனது அறியாமையால் !  பிறகு இருள் தேவதைகள் அந்தக் கிண்ணத்தில் சோக மதுவை நிரப்பினர்.  அதை அவன் அருந்தி ஓர் குடிகாரனாய் மாறினான்.”   கலில் கிப்ரான். (The Goddess of Fantasy)     ++++++++++++++++ ஞானமுள்ள மனிதன் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)

This entry is part 20 of 46 in the series 19 ஜூன் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       இசை அரங்குக் குழுவில் எல்லோ ரையும் விட அதிட்ட வாதி யார் ? நாணல் தட்டை தான் ! அதன் வாய் உன்னிதழ் களைத் தொடும் இன்னிசை கற்றுக் கொள்ள ! கன்னல் இலைகள் போல் எல்லா இலைகளும் இந்த வாய்ப்பு தனையே எண்ணிக் கொள்ளும் ! பல்வேறு வழிகளில் எல்லாப் புறத்திலும் கரும்புத் தண்டுகள் அசைந்தாடும் காற்றினிலே […]

புள்ளி கோலங்கள்

This entry is part 19 of 46 in the series 19 ஜூன் 2011

என்னை சுற்றி அடுக்கு அடுக்காய் வரிசை கிரமத்தில் புள்ளிகள்.     கோலம் துவங்கும் நேரத்தில் புள்ளிகள் நகர்கின்றன.. மத்திய புள்ளியாகிய நானும் அடுத்த அடுக்குக்கு,பக்க அடுக்குக்கு கீழ் அடுக்கின் கடைபுள்ளியாகி கோல பலகையிலிருந்து விழுவோமோ என்ற அச்சத்திலிருந்து மீண்டும் நேர்வாட்டில் குறுக்கு வாட்டில்,மேல் அடுக்கு என நகர்ந்து கொண்டே இருக்கிறேன் ..     நகர்கிற புள்ளிகளில் கோலமாவது ,ஒண்ணாவது? அசந்து விட்ட நேரத்தில் புரிந்தது –     புள்ளிகள் நகர்கையில் மாறி மாறி […]

ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்

This entry is part 18 of 46 in the series 19 ஜூன் 2011

ஏலாதி என்ற நூல் நீதி நூல்களில் ஒன்றாகும். இதனுள் ஆண்களுக்குரிய நீதிகளும் பெண்களுக்கு உரிய நீதிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நூல் வழியாகப் பெறப்படும் இந்த நீதிகளைக் கொண்டு அந்தக் காலத்தில் ஆண்சமுகம்  மற்றும் பெண் சமுகம் ஆகியன எவ்வாறு இருந்தன என்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்தக் கட்டுரையின் வழியாக ஏலாதி என்ற நீதி நூல் காலத்தில் ஆண்களுக்கு உரிய நீதிகளாகக் காட்டப் பெற்ற செய்திகள் எடுத்துரைக்கப்படுகின்றன. ஏலாதி ஆண்களைச் சிறந்தவர்களாக ஆக்குவதற்காக அவர்களுக்கு உரிய நல்ல […]

தியாகச் சுமை:

This entry is part 17 of 46 in the series 19 ஜூன் 2011

  நகர போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி நகர அனுமதிக்கும் விளக்கின் பச்சைக்காகக் காத்திருக்கயில்…   பல வேலை நிமித்தம் சிலர் சாலை கடந்தனர்!   கடந்தவர்களில் ஆண்களோ அலைபேசி அடிமைகளாய் தலை சாய்த்து முடங்கி நடக்க   பெண்களில் பத்துக்கு எட்டுபேர் எதையாவது சுமந்துகொண்டே நடந்து கடந்தனர்…   தோல்பை கைப்பை பணப்பை வழவழ காகிதத்தில் தடிநூல் பிடிகொண்டபை மினுக்கும் அலைபேசிப்பை ஒருமுறை பிரயோகத்திற்கான பாலித்தீன் பை என எதையாவது சுமந்துகொண்டு…   எஞ்சிய இருவரும்கூட கர்ப்பினிப் பெண்டிர்! […]