இரண்டு கவிதைகள்

This entry is part 16 of 46 in the series 19 ஜூன் 2011

01 பள்ளிப் பேருந்துக்கு வழியனுப்ப யாரும் வராத இன்னொருவனைக் காட்டி எப்போதிருந்து நானும் அப்படிப் போவேனென்று கேட்ட மகனுக்கு எப்படி சொல்ல எனக்கு மட்டும் தெரியும் அவன் கண்களின் ஏக்கத்தை. O 02 தவறுதலாய் நான் அழுத்திய தளத்தின் எண் தனக்கானது என்று புன்சிரிப்போடு ஒருவருடன் போக நேர்ந்த லிப்ட் பயணம் போல தானாய் இப்படி எல்லாமே தவறுகளின்றி நேருமானால்… o  

கட்டங்கள் சொற்கள் கோடுகள்

This entry is part 15 of 46 in the series 19 ஜூன் 2011

கட்டங்கள் வரைந்து சொற்களை உள்ளே இட்டேன் அவற்றுக்குள் தொடர்பு ஏற்படுத்த கோடுகள் இழுத்தேன் கட்டங்கள் ஒன்றோடொன்று இணைந்தன சொற்கள் அடைபட்டுப்போய் பேச மறுத்தன கட்டங்களை நீக்கி விட்டு சொற்களையும் கோடுகளையும் இணைத்து விடலாம் என எண்ணினேன் கட்டி வைத்த சொற்களும், இணைக்க இழுத்த கோடுகளும், ஒட்ட மறுத்தன மீண்டும் கட்டங்களை வரைந்தபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. கட்டங்களும், இணைப்புக்கோடுகளும் ஒரு சேரக்காணாமல் போயின எஞ்சிய சொற்கள் என்னைக்கேலி செய்து கொண்டிருந்தன.   – சின்னப்பயல் ( chinnappayal@gmail.com […]

முதுகெலும்பா விவசாயம் ?

This entry is part 14 of 46 in the series 19 ஜூன் 2011

நல்லா செழித்து வளர்ந்துடுச்சு இந்தத் தலவாசல் வேப்ப மரம் .. போன வருஷம் மழை இல்லாமக் காஞ்சு கிடந்துச்சு இது தான் போக்கிடம் எனக்கும் மேக்காலவளவு  குப்புசாமிக்கும் … மோட்டுவளைய பாத்துகிட்டு எவ்ளோ நேரம்தான் கட்டயக் கிடத்துறது ? ஆடுகன்னுகளப் பட்டில அடைச்சதுக்கப்பறம் வூடு தாவாரம் இறங்கிப்  போச்சு .. இனி  ஓடு மேஞ்சென்ன ஆகப் போகுது ? அந்த தாழ்வாரத்துல கொறஞ்சது எழுவது பேர் உக்காந்து சாப்பிட்டது கண்ணுக்குள்ள நெனப்பா வருது இருவத்தஞ்சு படி அரிசி போட்டு […]

விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?

This entry is part 13 of 46 in the series 19 ஜூன் 2011

அது 2009ம் வருடத்தின் நடுப்பகுதி. கிளிநொச்சியில் ஷெல் குண்டு மழை பொழிந்த காலம். 2008 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு முகங்கொடுத்த விஜிதா நால்வர் அடங்கிய குடும்பத்தின் மூன்றாமவள். அப்பொழுது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பிச் செல்லத் தேவையானவற்றைத் தயார்படுத்துவதற்காக அவள் அவசர அவசரமாக தனது தாய்க்கு உதவிக் கொண்டிருந்தாள்.   தப்பிச் செல்வது ஷெல் குண்டுகளிலிருந்து காத்துக் கொள்வதற்காக மட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் கட்டளையை செயற்படுத்தாது விடின் வரும் ரீ56 குண்டுகளிலிருந்தும் காத்துக் கொள்ளத்தான். […]

சின்னாண்டியின் மரணம்

This entry is part 12 of 46 in the series 19 ஜூன் 2011

(இது வெறும் கற்பனை மட்டுமே. இருந்தோர், இறந்தோர் அல்லது இறக்கவிருப்போர் எவரையும் குறிப்பிடுவது அல்ல) எல்லோரையும் போலவே ஒருநாள் சின்னாண்டியும் செத்துப் போனார்.   அல்லோகலப்பட்டது புழுதிக்காடு.   செத்த சின்னாண்டி, சிலபேருக்குத் தலைவர் பலபேருக்குப் பகைவர். பெயருக்கு நேரெதிராக பெரும் பணக்காரர்.   புழுதிக்காட்டின் பாதி அவருடையது. மீதியும் அவருடையதே என்பது பொதுஜன அறிவு.   புண்ணாக்கு விற்றே புழுதிக்காட்டை வளைத்ததாக அன்னார் சின்னாண்டி அடிக்கடி சிலாகிப்பார்.   இதில், எள்ளுப் புண்ணாக்கு விற்றவரெல்லாம் ஏழைகளாய் […]

உருவு கண்டு எள்ளாமை வேண்டும்

This entry is part 11 of 46 in the series 19 ஜூன் 2011

இந்தக் கதையின் பெயர்கள் அனைத்தும் கற்பனையே வாழைவல்லியூர். இருநூறு கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த ஊருக்கு வராதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. இந்த ஊரின் பெருமைக்குக் காரணம் ஆண்டாண்டு நடக்கும் தேர்த்திருவிழா.  அடுத்து இந்த ஊரின் கோயில் யானை கற்பகம். உடம்பெல்லாம் வெள்ளைப் புள்ளிகள் தெளித்த தோற்றம். இரண்டு முழம் தந்தம். கம்பீரமாக ஆனால் பொறுமையாக அனைவரையும் ஆசீர்வதிக்கும் அழகு. இத்தனையுடன் பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு கற்பகம் ஆசீர்வதித்தால் அந்தப் பேறு கிடைக்கலாம் என்ற அந்த ஊரின் […]

காலாதி காலங்களாய்

This entry is part 10 of 46 in the series 19 ஜூன் 2011

பிரக்ஞையற்று திரிந்தலைந்த  கிரெளஞ்சப் பட்சியொன்று மனவெளியில் தரையிறங்கியது மிச்சமிருக்கும் வதைகளின் பொருட்டு தீரா வேட்கையுடன் உயிர்த்தலின் ஆதாரத்தை அலைகிழிக்கின்றது கூர்ந்த நகங்களால்…. காலாதி காலங்களாய் தொடர்ந்த மெளனம் களைந்தெறிந்து ஊழியின் உருவமாய் மெய் சிவந்து நின்றேன் எதிர்கொள்ளவியலாது சிறகின் தூவிகள் பொசுங்க ரத்தமும் மாம்சமும் கருக வெந்தொழிந்தது….. — சக்தி

எதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து

This entry is part 9 of 46 in the series 19 ஜூன் 2011

சமீபத்தில் ஒரு கணினி நிறுவனத்தில் பணிபுரியும் ஏறக்குறைய 100 கணினி ”வல்லுனர்கள்” சென்னை காவல் துறை ஆணையரை சந்தித்து தங்கள் கணினி அலுவலகத்தில் நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும் தங்களுக்கு 2 மாதமாக சம்பளம் தரப்படவில்லை என்றும் முறையிட்டார்கள். குறைகளை கேட்டறிந்த ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து விட்டு குறைகளை ஒரு மனுவாக எழுதி தரும்படி கேட்டிருக்கிறார். யாருக்குமே என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல் முழித்திருக்கிறார்கள். மறுநாள், இது செய்தியாக சில தினசரிகளில் வெளியாகி […]

நினைவுகளின் சுவட்டில் – (70)

This entry is part 8 of 46 in the series 19 ஜூன் 2011

சீனுவாசன் மிகவும் சுவாரஸ்யமான மனிதர். நண்பர். சுவாரஸ்யமான என்றால், அவர் பேச்சில், பார்வையில், ரசனையில், சில பிரசினைகளை அணுகும் முறையில் அவர் வித்தியாசமானவர். சாதாரணமாக அவர் செய்வதையும், சிந்திப்பதையும், பேசுவதையும் இன்னொருவர் பேசக்கூடும் என்று நாம் எதிர்பார்க்கவியலாது. முன்னரே ஒன்றிரண்டு சம்பவங்களைச் சொல்லியிருக்கிறேன். இதன் காரணமாக அவருடன் பழகுவதில் எங்களுக்கு எவ்வித சிரமும் இருந்ததில்லை. சாதாரணமாக எதிர்பார்க்கக்கூடியதை அவர் செய்வதில்லையாதலால் எங்களுக்கு அதனால் லாபமே தவிர கஷ்டங்கள் எதுவும் நிகழ்ந்ததில்லை.   முதலில்  எப்படி எங்கள் அறைக்கு […]

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்

This entry is part 7 of 46 in the series 19 ஜூன் 2011

திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை தொகுப்பு. அவரின் இயல்பான நடையில், காற்றில் அடித்துச் செல்லப்படும் இறகை போல, இந்த நூலை வாசிக்கும்போது பறக்கத் தொடங்கி விடுவீர்கள். பல்வேறு தளங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்த சிறுகதை தொகுப்பில் மிகச் சிறந்த கதையாக நான் விரும்புவது, “குதிரைகள் பேச மறுக்கின்றன”. பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணவன் மனைவியின் வாழ்க்கையில், நின்று நிதானிக்க நேரம் இல்லை. ஊரில் இருந்து வரும் அவனின் அப்பா வீட்டில் வளரும் நாயை வெளியே கூட்டிச் […]