[வான்தூக்கு விளைவு] சி. ஜெயபாரதன்,B.E.(Hons),P.Eng.(Nuclear) Canada http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cx75I5gUm-Q https://www.youtube.com/watch?v=oSCX78-8-q0&feature=player_embedded https://www.youtube.com/watch?v=rNf-A3m6HVo&feature=player_embedded பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை பரமாணுக் களாகி, அணுவாகி அணுக்கள் நர்த்தனம் ஆடி மூலக்கூறாகி நேராகித் சீரான நகர்ச்சியில் திரண்டு அண்டமாகி, அண்டத்தில் கண்டமாகித் கண்டத்தில் துண்டமாகிப் பிண்டமாகி, பிண்டத்தில் பின்னமாகிப் பிளந்து தொடரியக்கப் பிளவில் பேரளவுச் சக்தி யாகித் சீராகிச் சேர்ந்து சின்னஞ் சிறு அணுக்கருக்கள் பிணைந்து, பேரொளி யாகிப் பிரம்மாண்டப் பிழம்பாகி, பிணைவு சக்தியாகிப் பரிதியாகி, பரிதியின் பம்பரப் […]
அன்றொரு நாள் – என்றொரு நாள் இலைகளை மட்டும் நேசிக்கும் வக்கிரப் பெருவழுதி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான் அன்றொரு நாள் அந்த நவீன தமிழ்க்கவிஞன். ‘செலக்டிவ் அம்னீஷியா’வில் தோய்த்தெடுக்கப்பட்ட சமகாலத் தமிழ்க்கவிதைச் சரித்திரத்திலிருந்து புறந்தள்ளப்பட்டான். கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் அதையும் கேள்வி கேட்காமல் வெளியிட்டார்கள் தமிழிலக்கியத் தாளாளர்கள். அண்டசராசரமெங்கும் விண்டில கண்டு ஆனந்தமாய்த் திரியும் கவிமனதிற்கு அதெல்லாம் ஒரு பொருட்டா என்ன! ’வாழ்ந்து மறைந்தவருக்கான உரிய மரியாதையோடு’ அந்த வரலாற்றாசிரியர் குறித்து இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்: அவர் […]
முனைவர் மு.பழனியப்பன், தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி,சிவகங்கை, திருக்குறளின் கவிதை வடிவம் செறிவானது. அதன் சொற்கட்டமைப்புக்குள் தத்தமக்கான பொருளைக் கற்பவர்கள் பொருத்திக்கொள்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. திருக்குறள் காட்டும் பொதுப்பொருள், சிறப்புப் பொருள், தனிப்பொருள், தொனிப்பொருள் என்று அதற்குப் பொருள் காணப் பெருவழிகள் பல உள்ளன. அறிவியல் சார்ந்தும் அறவியல் சார்ந்தும் பொருளியல் சார்ந்தும் தத்துவம் சார்ந்தும் பண்பாட்டியல் சார்ந்தும் மொழியியல் சார்ந்தும் மரபியல் சார்ந்தும் பல கோணங்களில் திருக்குறளை ஆராய்வதற்கு வழிவகை செய்து […]
அர்த்தநாரி அவர் பின்னாலேயே நாய் ஓடியது அகஸ்மாத்தாக கல்லெறிய குனிந்தார் நாய் தன் வாலால் புட்டத்தை மறைத்துக் கொண்டது தோட்டத்திலுள்ள பூவின் வனப்பு அவரை சுண்டி இழுத்தது பறவையினங்கள் விதைப்பதுமில்லை,அறுப்பதுமில்லை காலனின் சூத்திரம் இவருக்கு இன்னும் கைவரவில்லை வானம் கறுப்பு ஆடை தரிக்க பொழியும் மழை மண்ணை குளிர்விக்க மரணத்திற்கு பிறகு நற்சான்றிதழ் அளிப்பவர் யார் பாற்கடலில் கடைந்தெடுத்த அமிர்தத்தை மாறுவேடமணிந்து உண்டவர் யார் வெற்றுத் தாளுக்கும் ஓவியத்துக்கும் வித்தியாசம் தெரியாதா கண்களுக்கு ஆதியைக் […]
கலைச்செல்வி ‘ஒரு நாவல் உலகை மாற்றி விடும் என்ற இறுமாப்பு சார்த்தர் காலத்தில் இருந்தது போல இன்று எமக்கில்லை. அரசியல்ரீதியான தமது கையலாகாத்தனத்தைப் பதிவு செய்ய மட்டும் தான் இன்றைய எழுத்தாளர்களால் முடிகிறது. சார்த்தர், காமு, ஸ்ரைன் பெக் போன்றோரை படிக்கும் போது அந்த மகத்தான அர்ப்பணிப்பு மிக்க ஆளுமைகள் யாவரும் மனிதகுலத்தின் எதிர்காலத்திலும் எழுத்தின் வலிமையிலும் எல்லையில்லாத நம்பிக்கை கொண்டிருந்தமையை அறிய இயலும். அந்த எழுத்துகள் யாவும் வழியை துலக்குவனவாக அமைந்தன. இன்றோ சமகால எழுத்தென்பது […]
There are three things, after all, that a poem must reach: the eye, the ear, and what we may call the heart or mind. It is most important of all to reach the heart of the reader Robert Frost இயக்குனர், கவிஞர் என்.லிங்குசாமி எழுதி வெளிவந்திருக்கும் […]
கற்றுக்குட்டி (மலேசியா) புத்தகக் கடை குருசாமி புத்தகக் கடை என்று பெயர் போட்டிருந்தது. நுழைந்தார் குப்புசாமி. கடையின் வாசலில் கடவுள் படங்கள்: காளி, சிவன், முருகன், கணபதி. ஃப்ரேமுக்குள்ளும் காகிதச் சுருளாகவும். நடக்கும் வழியில் நர்த்தன கணபதி, நடராஜர், குழலூதும் கிருஷ்ணன், மண்சிலைகள், வெண்கலச் சிலைகள், ஐம்பொன் சிலைகள். எல்லா சைசுகளிலும். கண்ணாடிப் பெட்டிகளில் காமாட்சி விளக்குகள், வெள்ளிக் கமண்டலங்கள், தூவக்கால்கள், ஊதுபத்தி ஸ்டாண்ட். புத்தகம் எங்கே என்று […]
ராஜாஜி ராஜகோபாலன் நித்யா நிச்சயம் காத்திருப்பாள். வாசல் கதவுகளோடு தன்னையும் சேர்த்துப் பிணைத்தபடி காத்திருப்பாள்; நினைவுகள் மட்டும் இவனோடு சேர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும். தேவன் பயணம் செய்துகொண்டிருந்த ஆட்டோ அவனுடைய மனோவேகத்தோடு போட்டிபோட முயல்வதுபோல் ஒடிக்கொண்டிருந்தது. ரோட்டில் மட்டுமல்லாமல் நடைபாதைகளிலும் தெருவோர வியாபாரிகளின் முதுகுகளிலும்கூட ஏறி ஓடுவதுபோலிருந்தது. இந்த இருவரையும் இருபது ஆண்டுகள் பிரித்துவைத்த அதே விதிதான் இனியும் இவர்கள் பிரிந்திருப்பது நியாயமல்ல; மீண்டும் சந்தித்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டதென்பதைத் தீர்மானித்திருக்கவேண்டும். தேவன் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். நித்யா இப்போது எப்படி […]
75 ஆண்டுகாலமாக கம்பன் புகழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகமும், பவளவிழாவின் அடையாளமாகத் தோற்றுவிக்கப் பெற்ற கம்பன் தமிழ் ஆய்வு மையமும் இனி ஆற்ற வேண்டிய பணிகள், ஆய்வுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், அறக்கட்டளைகள், நூலகம், பதிப்புப் பணிகள்- கல்வி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றுக்குச் சென்று அவர்களுடன் இணைந்து இளைஞர்கள்- மாணக்கர்களிடம் விழிப்புணர்வு உண்டாக்குதல் போன்ற எவ்வெவற்றை எங்களிடம் தமிழ் ஆர்வலர்களும்,சுவைஞர்களுமாகிய நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என சுருக்கமாக இருபக் கஅளவில் எழுத்து வடிவில் ஒரு வரைவுத் திட்டம் […]
(Song of Myself) என்னுரிமைத் தோழன் (1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா நீ யாரென நான் கேட்ப தில்லை எனக்கது முக்கிய மில்லை எதுவும் செய்ய இயலா தவன் ஏதேனும் தன்னிடம் இல்லா தவன் ஆயினும் உன்னை என்னுள் ளத்தின் உள்ளே வைத்துப் பின்னிக் கொள்வேன் ! பருத்திக் காட்டு கடும் உழைப்பு அல்லது கழிப்பறைச் சுத்தப் பிழைப்பு ஊழிய னுக்கு வலது கன்னத்தில் […]