தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை

This entry is part 24 of 34 in the series 10 நவம்பர் 2013

தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்து  தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வளர்ச்சி, இந்திய படித்த இளைஞர்களிடையே ஒரு பெரிய கனவுலகத்தைச் சிருஷ்டித்தது. அவர்கள் என்றும் நினைத்தும் பார்த்திராத பொருளாதார வளத்தையும் அவர்கள் காண்பது கனவல்ல என்ற நினைப்பையும் தந்தது. தகவல் தொழில் நுட்பம் நுழையாத துறை இல்லை என்று ஆகியது. அது இல்லாது வளர்ச்சி அடையும் துறை இல்லை என்றாகியது. எல்லா பொறியியல் […]

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

This entry is part 23 of 34 in the series 10 நவம்பர் 2013

முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை     மண்ணுலகம், பூவுலகம், மக்கள் உலகம் என்று இந்த பூமி பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.  மண்ணால் நிரம்பியிருப்பதால் இதனை மண்ணுலகம் என்கிறோம். இந்த உலகம் பூமி என்றழைக்கப்படுவதால் பூவுலகம் எனப்படுகின்றது. மக்கள் நிரம்பி வாழ்வதால் இதனை மக்கள் உலகம் என்று அழைக்கிறோம். ,மக்கள் உலகம், பூவுலகம் இவற்றையெல்லாம் விட மண்ணுலகம் என்று சொல்லுவதில்தான் பொருள் ஆழம் அதிகம். மண் தனக்குள் முளைக்கும் திறனைக் கொண்டுள்ளது. […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-8 துவாரகா வாசம்.

This entry is part 22 of 34 in the series 10 நவம்பர் 2013

அத்தியாயம்-8 துவாரகா வாசம். ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையின் தனிப் பெரும் அரசர் இல்லை. நமக்குக் கிடைக்கும் தகவல்களின்படி துவாரகை பல சிற்றரசர்களால் ஆளப்பட்ட ஒரு சமஸ்தானம் ஆகும்.. அதனால்தான் அங்கு வலிமையான மன்னர்கள் இருந்தனர். அந்த சமஸ்தானத்தில்  மூத்த மன்னர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டன. இந்த ஒரு காரணத்தால்தான் ஸ்ரீ கிருஷ்ணர் கம்சனை வென்றாலும் கூட மூத்த மன்னரான ஸ்ரீ கிருஷ்ணரின் தாத்தாவான உக்கிர சேனனுக்கு  மகுடம் சூட்டப் படுகிறது. அரசு மேற்பார்வை என்று வரும்பொழுது எவரிடம் […]

திண்ணையின் இலக்கியத் தடம் -8 நவம்பர் – டிசம்பர் -2000

This entry is part 21 of 34 in the series 10 நவம்பர் 2013

நவம்பர் – டிசம்பர் -2000 நவம்பர் 4, 2000 இதழ்: மார்க்ஸீஸம், முதலாளித்துவம், இந்தியாவின் எதிர்காலம் – ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்று நூலின் ஒரு பகுதி – ஒத்துழையாமை இயக்கம் தோற்று சிறையில் இருக்கும் போது லெனின் தலைமையில் ரஷியா காணும் முன்னேற்றத்தை நேரு பாராட்டுகிறார். பொருளாதாரக் கொள்கைகளில் கம்யூனிஸமே சிறந்தது. ஆனாலும் நேருவுக்கு அங்கு ஜனநாயகக் குரல் நசுக்கப் படுவதில் உடன்பாடில்லை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200110411&edition_id=20001104&format=html ) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு கறைபடியாத கரம் : ரால்ஃப் […]

நுகம்

This entry is part 20 of 34 in the series 10 நவம்பர் 2013

 – சிறகு இரவிச்சந்திரன் படித்த, இன்றைய சமுகக் கட்டமைப்பு மேல் கடும் கோபம் கொண்ட ஒரு இளைஞனை, தன் நாச வலைக்குள் இழுக்கிறது ஒரு அயல்நாட்டு தீவிரவாத கும்பல். பணத்தாசை காட்டி, இந்திய வெளியுறவு துறை அமைச்சரைக் கொல்ல ஏவுகிறது. இடையில் சேரும் இன்னொருவனால், தீவிரவாதம் திசை மாறுகிறது. அப்பாவி இளைஞனின் கதி என்ன ஆயிற்று என்பதை இரண்டேகால் மணி நேரத்தில் சொல்லியிருக்கிறார்கள். சொல்ல வந்த விசயம் உன்னதமானது தான்.. ஆனால் சொன்ன விதம்தான் அரைவேக்காடாக இருக்கிறது. […]

தமிழ் ஸ்டூடியோ இரண்டு நிகழ்வுகள்

This entry is part 19 of 34 in the series 10 நவம்பர் 2013

இரண்டு நிகழ்ச்சிகள். நண்பர்களே எதிர்வரும் சனிக்கிழமை (09-11-2013) ஞாயிற்றுக்கிழமை (10-11-2013) இரண்டு நாட்களும் சென்னையில் முக்கியமான இரண்டு இலக்கிய நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்விற்கு அன்போடு வரவேற்கிறேன். நிகழ்வு ஒன்று:   சென்னை புத்தகத் திருவிழாவிற்கான, புத்தக அறிமுக நிகழ்ச்சிகளில் முதலாவதாக, ஓவியர் சீனிவாசன்-பாலசுப்ரமணியன் எழுதி, வம்சி பதிப்பகம் வெளியிட்ட நம்மோடுதான் பேசுகிறார்கள் நூல் திறனாய்வுக் கூட்டத்திற்கான அழைப்பிதழ்.   நாள்: 09-11-2013, சனிக்கிழமை. இடம்: தி புக் பைன்ட் (The Book Point), […]

ஜாக்கி சான் 15. நரகமாகிப் போன மாயலோகம்

This entry is part 18 of 34 in the series 10 நவம்பர் 2013

15. நரகமாகிப் போன மாயலோகம்   சார்லஸ் குடும்பத்தினர் சீன நாடகக் கழகத்தை அடைந்த போது, குரு அவர்களுக்காகக் காத்திருந்தார்.  சானின் பெற்றோரை வரவேற்று விட்டு, அவனது தோளைத் தொட்டு நடத்தி, “வா.. கொங் சாங்”என்று அன்புடன் கூறி, கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.  “நீ இங்கு வரும்போதெல்லாம் நன்றாக இருந்ததல்லவா.. நீ இங்கே தங்குவதை விரும்புவாய் என்று எண்ணுகிறேன்” என்று பேசிக் கொண்டேநடந்தார்.   உடனே தந்தையின் பக்கம் திரும்பி, “அப்பா.. நான் நிஜமாகவே இங்கேத் தங்கலாமா?” என்று கேட்டான் சான்.   “ஆமாம் பாவ்.. உனக்கு எவ்வளவு நாள் வேண்டுமோ.. அவ்வளவு நாள்” என்றார் தந்தை.   உண்ணும் மேசை மேல் ஒரு காகிதச் சுருள் வைக்கப்பட்டு இருந்தது.  அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.  அதைப் படிக்கத் தெரியாத காரணத்தால், சான் அதைக் கண்டு கொள்ளவில்லை.  சார்லஸ்அதைப் படித்துப் பார்த்தார்.  தாயும் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு எட்டி எட்டிப் பார்த்துப் படித்தார்.   “சான் அவர்களே.. எல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று கேட்டார் குரு.  “இதில் இருப்பது தான் நடைமுறைபடுத்தப்படும்.  நீங்கள் கையெழுத்திட்ட பின், இங்கு இருக்கும் வரை உங்கள் மகன் என்முழுப் பொறுப்பில் இருப்பான்.  நான் என் செலவில் உணவு, உடை, தங்கும் இடம் கொடுத்து விடுவேன்.  அவனது பாதுகாப்பிற்கு நான் உத்தரவாதம். நான் உலகின் மிகச் சிறப்பான பயிற்சியைஅவனுக்குக் கொடுத்துப் பெரியாளாக்குவேன். அவன் மிகப் பெரிய நட்சத்திரமாகும் வாய்ப்பும் உண்டு” என்று உறுதி கூறினார்.   தந்தை சொல்வதனைத்தையும் கேட்டுவிட்டு, “அவன் சம்பாதிப்பது கழகத்தைச் சேர்ந்தது என்று பத்திரம் சொல்கிறதே?” என்று கேட்டார்.   “நாங்கள் கழகத்தை குழந்தைகளின் நிகழ்ச்சிகளின் மூலமாகத் தான் நடத்தி வருகிறோம்.  அதனால் நாங்கள் சொல்லித் தருவனவற்றை தொடர்ந்து கற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். சரி தானே..”   சார்லஸ் குருவின் கூற்றை ஆமோதித்துவிட்டு, “இன்னொரு விசயம்.  பையனை ஒழுங்குப்படுத்துவதாயும், அதுவும் இறக்கும் அளவிற்கும் கூட சென்று ஒழுங்குப்படுத்துவதாய் உள்ளதே..” என்றுபயத்துடன் கேட்டார்.   “ஆம்.. கலைக்கு ஒழுக்கம் ஆத்மா.  மனித இனத்தின் வேரே ஒழுக்கம் என்று சொல்லப்படுகிறதல்லவா?” என்று எதிர் கேள்வி கேட்டார்.   சார்லஸ் அதை ஏற்றுக்கொண்டு, சானை அழைத்து, “பாவ் கவனமாக் கேள்..” என்றார்.   “என்னப்பா?”   “உனக்கு இங்கு எவ்வளவு காலம் இருக்க வேண்டும்.  ஐந்து வருடம், ஏழு வருடம்..?” என்று கேட்டார்.   “எப்போதும்” என்று மகிழ்ச்சியுடன் உரக்கக் கத்தினான்.   தாய் சார்லஸின் கைகளை பலம் கொண்ட மட்டும் அழுத்தினார்.   “அதிகபட்சம்  பத்து ஆண்டுகள் இருக்க முடியும்” என்றார் குரு.  பத்திரத்தில் பத்தாண்டு காலம் என்று எழுதி சார்லஸிடம் நீட்டினார். கையெழுத்திட்டுப் பெயர் பதித்த முத்திரையை இட்டார் சார்லஸ்.   சானுக்கு நடப்பது ஏதும் புரியவில்லை.  அடுத்த பத்து ஆண்டுகள் கழகத்தின் சொத்தானான் சான்.   கையெழுத்தான சிறிது நேரத்திலேயே, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சான் அழைக்கப்பட்டான்.   “விடை கொடுக்க எங்களுடன் வா பாவ்..” என்று தாய் கூறினார்.  அப்போது சானுக்கு அது புரியவில்லை.  இப்போதே விடைபெற வேண்டியது தானே என்று எண்ணினான்.   தாய் சொன்ன விதத்தை உணர்ந்து, சான் மறு பேச்சு பேசாமல் அவர்களுடன் நடந்தான்.  “நான் சீக்கிரமே வந்து விடுவேன்” என்று அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு சான் கிளம்பினான்.       வீட்டிற்குச் சென்று பொருள்களை எடுத்துக்கொண்டு கப்பல் துறைமுகத்திற்கு வந்தனர்.   சிறிது நேரத்தில் தந்தை கிளம்ப எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.  தாயிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு சானிடம் வந்தார்.   “கொங் சாங்.. நீ இப்போது பெரியவன். உன்னைப் பார்த்துக் கொள். நீ எங்களுக்குப் பெருமை சேர்ப்பாய் என்று நன்றாகத் தெரியும்” […]

நெய்தல் நிலத்து குறுந்தொழில்கள்

This entry is part 17 of 34 in the series 10 நவம்பர் 2013

முனைவர் ந.பாஸ்கரன் நெய்தல் நிலத்து கடல் தொழில்களான மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், உலர் மீன் தயாரித்தல், மீன் அல்லது உப்பு விற்பனை செய்தல், முத்தெடுத்தல் போன்றவற்றை நெய்தல் நிலத்து பெருந்தொழில்களாகச் சுட்டலாம்; கொல்லர் தொழில், தச்சுத்தொழில், பொற்கொல்லர் தொழில், கால்நடைவளர்ப்புத்தொழில், குடிசைகள் கட்டும் தொழில் மறறும் பணியாளர்த் தொழில் என்று பலவகையானக் குறுந்தொழிலிகள் நெய்தல் நிலம் சார்ந்தவையாக சங்க இலக்கியங்களின் வழி காணமுடிகிறது கொல்லர் அல்லது தச்சர் தொழில் ஐந்திணை மக்களின் தொழில்புரி கருவிகளிலும் கொலலர் மற்றும் […]

90களின் பின் அந்தி –

This entry is part 16 of 34 in the series 10 நவம்பர் 2013

ஜெம்சித் ஸமான் ஒரு ஊசாட்டமும் இல்லை என் செம் மண் தெருவை தார் ஊற்றி கொன்றது யார் 90களின் பின் அந்தியா இது அப்போது காகங்கள் என்றாலும் தெருவை கலைத்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களின் சூ கால்கள் தெருவின் விரை மீது ஊன்றி ஊன்றி மிதிக்கும் ஜீப் வண்டிகளின் டயர் தடங்களில் நசுங்கிய கைப் பாவைகளைக் கேட்டு எந்தக் குழந்தை என்றாலும் அழுது வடிந்து கொண்டிருக்கும் முரட்டு துப்பாக்கிகளைக் கண்டு தெரு நாய்கள் குரைத்து குரைத்து அச்சம் […]

தாகூரின் கீதப் பாமாலை – 88 நான் பாடும் கானம் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

This entry is part 15 of 34 in the series 10 நவம்பர் 2013

தாகூரின் கீதப் பாமாலை – 88 நான் பாடும் கானம் .. !   மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. நான் பாடும் அந்தக் கானம் யாரை நோக்கியோ  என்று நான் அறியேன் ! புயல் காற்று ஓயாமல் புலம் பெயர்ந்த பறவை போல் உள்ளத்தை நோக்கி ஓடி வரும் போது, உருக்க மான அந்த இன்னிசை எங்கே மிதக்கிற  தென்று நான் அறியேன் !   உன் முகத்தை பார்க்கும் போது முன்பு கண்ட ஓர் கனவு திரும்பி புதிய காலத்துக்குப் புத்தாடை யோடு உன்னுள்ளே  எழுந்ததா  என்று நான் […]