சங்கத்தில் பாடாத கவிதை

This entry is part 32 of 42 in the series 1 ஜனவரி 2012


 

எழுதிக்கொண்டிருந்த

கவிதையை

தென்றல் அடித்து

கலைத்துக்கொண்டிருந்தது

 

எழுதி முடித்த சொற்களின்

மேல் பல இடங்களில்

அது தன் புள்ளிகளை

கோலங்களை இட்டுச்சென்றது

 

சில வரிகளில்

சந்திகளில் ஒற்று

மிகுந்து அவற்றை

வலுவாக்கியது

 

சில வரிகளில்

ஒற்றுகளை சேதப்படுத்தி

சொற்களைத் தனிமையில்

நிற்கச்செய்தது.

 

இப்படி எல்லாம் செய்த

தென்றல் பாதியிலேயே

விட்டுச்சென்றுவிட்டது

 

கவிதையை முடித்து வைக்க

இன்னொரு தென்றலை

எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்

யாரேனும் அதைக்கண்டால்

கொஞ்சம் என்னிடம்

அனுப்பி வையுங்கள்.

 

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationகவிப்பொழுதின் அந்திமக்காலம்…நீயும் நானும் தனிமையில் !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *