கோணல் மன(ர)ங்கள்

என்.துளசி அண்ணாமலை “இராசாத்தி, இங்கே வந்துட்டுப்போ” கூடத்திலிருந்து மாமியார் அழைப்பது கேட்டது. வானொலியில் பழம்பாடல்களைக் கேட்டுக் கொண்டே துணிகளை மடித்துக் கொண்டிருந்த இராசாத்திக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டது. அந்த வயதுக்கே வரக்கூடிய முட்டிவலி ஒரு நிமிடம் அவளை நகரவிடவில்லை. ஆனால்…
மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015

மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015

-நாகரத்தினம் கிருஷ்ணா அ. இலக்கிய சொல்லாடல் -5 : 'சுய சரித்திரம்'(Autobiographie) தமிழில் முதல் சுய சரித்திரம் உ.வே.சா. அவர்களுடையது, மேற்கத்தியர்களோடு ஒப்பிடுகிறபோது காலத்தால் பிந்தங்கியது, தவிர சில அறிஞர் பெருமக்களின் வற்புறுத்தலால் நிகழ்ந்தது என்கிறார்கள். பிரெஞ்சு இலக்கிய உலகில் ஒரு…

இருதலைக்கொள்ளி

வளவ. துரையன் சிறுவயதிலிருந்தே எனக்குக் கிரிக்கெட் மீது கொஞ்சம் பைத்தியமுண்டு. எங்கள் தெருவின் அணியின் தலைவனே நான்தான். பிற்பாடு பெரியவனான பிறகு ஊரில் அணி ஒன்றைத் தொடங்கி வெளியூர்களெல்லாம் சென்று விளையாடிய காலம் ஒன்று உண்டு. எழுபுதுகளில் இலக்கியத்தின் மீது நாட்டம்…

காதலிக்கச்சொல்லும் வள்ளுவர் 1

(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (7) அதிகாரம் 115: அலர் அறிவுறுத்தல்) “நெய்யூற்றி நெருப்பணையுமா” தூற்றுதல் தவிருங்கள் தூற்ற தூற்ற காமம் ஊற்றெனப்பெருகும் இரகசியம் உணருங்கள் இதைக் காதலரே விரும்புவர் ஊர்தூற்றும் எம்காதலும் அப்படித்தான் என் மலர்விழியாளின் அருமை. யாவரும் அறியாத காரணத்தால்…

மிதிலாவிலாஸ்-29 (நிறைவு)

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள் முழுவதும் அபிஜித்துக்கு மூச்சுவிட முடியாத அளவுக்கு வேலைகள் இருந்தன. ஜப்பான்லிருந்து ஒரு குழு விசிட் பண்ணுவதற்கு வருகிறது. அவர்களை அழைத்துச் சென்று தன்னுடைய பேக்டரியைச் சுற்றிக் காண்பித்து, பிறகு லஞ்ச்…

காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3

( 3 ) என்னா நாகு...என்னாச்சு விஷயம்...? – கான்ட்ராக்டர் பிச்சாண்டியின் குரல் கேட்டு அதிர்ந்துதான் போனார் நாகநாதன். கடையின் முன்னால் வந்து இப்படியா எல்லோர் முன்னிலையிலும் பளீர் என்று கேட்பது? விவஸ்தை என்பதெல்லாம் ஏது இந்தாளுக்கு? – நினைத்தவாறே பட்டென்று…

உதவிடலாம் !

எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .... அவுஸ்த்திரேலியா பார்வையை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார் பார்வையுடன் இருப்பவர்நாம் பலவழியில் உதவிடலாம் ! கல்விதனைக் காணாமல் கணக்கற்றோர் நாட்டிலுள்ளார் கற்றுநிற்கும் நாமவர்க்கு கற்பதற்கு உதவிடலாம் ! அன்னைதந்தை தெரியாது அலமந்து நிற்பார்க்கு ஆதரவுக்…

பயன்

சேயோன் யாழ்வேந்தன் இலைகள் உணவு தயாரிக்கின்றன இலைகள் உணவாகின்றன இலைகள் உணவு பரிமாறுகின்றன இலைகள் எரிபொருளாகின்றன இலைகள் உரமாகின்றன இலைகள் நிழல் தருகின்றன இலைகள் சருகாகி சப்தம் செய்து எச்சரிக்கின்றன இலைகள் குடையாகின்றன இலைகள் கூரையாகின்றன இலைகள் ஆடையாகின்றன இலைகள் பாடையாகின்றன…

சுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி

சிறகு இரவிச்சந்திரன். 0 காரிய சித்திக்காக சுந்தர காண்டம் படிக்கும் மக்கள் மத்தியில் ஒரு சாரார் சற்று திசை மாற, வளைந்த கொம்போடு வாழ்க்கையைப் படிக்கப் போகிறார்கள். அவர்களுக்கு பாடம் கற்றுத்தருவதற்கென்றே கூரை வேயாத பள்ளிக்கூடங்கள் பல உள்ளன. விடலைப் பருவங்களில்,…

அப்துல் கலாம்

விலாக்கூட்டை விண்கலமாக்கி விண்ணைச் சலித்தவரை நாளைய நாட்டின் நடுமுதுகுத் தண்டாய் மாணவரைக் கண்டவரை அக்னிச் சிறகால் அகிலம் பறந்தவரை அமிலமழை அரசியலில் நனையாமல் நடந்தவரை அகலநீனம் அறிபுக்கில்லை அது தேடத்தேட விரியும் விரிய விரியத் தேடும் என்றவரை தேடுதல் இல்லையெனில் சிக்கிமுக்கிகூட…