சென்னை புத்தகக் கண்காட்சி – 2024

This entry is part 1 of 6 in the series 14 ஜனவரி 2024

குரு அரவிந்தன். 47-வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்திருந்தார். விரும்பிய நூல்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை இந்தக் கண்காட்சி ஏற்படுத்தி இருந்தது. கண்காட்சி ஆரம்பமானபோது அகணி வெளியீட்டகத்தினர் கனடா எழுத்தாளர் குரு அரவிந்தனின் நூல்களையும் அரங்கு எண் 604, 605 பகுதியில் காட்சிப்படுத்தியிருந்தனர். இலக்கிய ஆர்வலர்கள் பலர் […]

திருக்குறளில் அறம் – ஒரு யதார்த்தப் பார்வை

This entry is part 2 of 4 in the series 7 ஜனவரி 2024

டாக்டர் ஆர் அம்பலவாணன்  Dr. R. Ambalavanan Professor of Civil Engineering (Retd.) IIT, Madras ( 23அக்டோபர் 2023, டொரான்டோ, கானடாவில் திரு ஜெயமோகன் ‘அறம்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையை அடியொற்றி எழுதியது)      சமீப காலமாக, சனாதனம் என்ற சொல் பரவலாக எல்லா மட்டங்களிலும் பேசப்படுகிறது.அரசியலில் சூடான விவாதமாகவும் மாறியுள்ளது. சனாதனம் என்றால் பழமை, மாறாத தன்மை, (இந்து மதத்தில் இணைந்த!) வாழ்வியல் என்று ஒரு பக்கமும், மக்களை வருணமாக, சாதிகளாக, […]

ஆதிவாசி கேரளர்கள் என்று கேரள இடதுசாரி அரசாங்கம் செய்யும் இனவெறித்தனம்

This entry is part 8 of 8 in the series 5 நவம்பர் 2023

human zoo போல மனிதர்களை அடைத்து ஐரோப்பிய மேற்குடி மக்களுக்கு காட்சி படுத்திய காலனியாதிக்கத்தை விதந்தோதும் முரசொலி பத்தி எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருக்கும் இடதுசாரி கேரள அரசாங்கம், கேரள பழங்குடியினர் என்ற பெயரில் சிலருக்கு வேடமிட்டு கேரளீயம் கொண்டாடுகிறார்கள். இதுதான் அந்த கேரள பழங்குடியினராம். இடுப்பில் நார்களை கட்டிகொண்டு முரசுகளை வைத்துகொண்டு கழுத்தில் வினோதமான சங்கிலியை அணிந்துகொண்டு முகத்தில் ஏதோ கேரளாவுக்கு சம்பந்தமில்லாத டிசைன்களில் வரைந்துகொண்டு இருக்கும் இவர்கள்தான் கேரள பழங்குடியினராம். எந்த கேரள பழங்குடியினர் இது […]

ஓர் அமெரிக்கத் தமிழனின் சிந்தனைகள்

This entry is part 1 of 5 in the series 29 அக்டோபர் 2023

பி.கே. சிவகுமார் நமது அமெரிக்கக் குழந்தைகள் (மூன்று பகுதிகள்) – 2022ல் எழுதியது அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை – 2022ல் எழுதியது ஓர் அமெரிக்கக் கனவு – அக்டோபர் 26, 2023ல் எழுதியது மேற்கண்ட ஜெயமோகன் கட்டுரைகள் ஜெயமோகன்.இன் என்கிற அவர் இணையதளத்தில் கிடைக்கின்றன. அக்கட்டுரைகளை முன்வைத்து என் சில சிந்தனைகள்.. **** ஜெயகாந்தன் 2000-ஆம் ஆண்டில் அமெரிக்கா வந்தபோது அவரிடம் அறிவுரை கேட்டார்கள். அமெரிக்காவுக்கு அறிவுரை தர வரவில்லை என்ற ஜெயகாந்தன், இங்கிருக்கிற தமிழர்கள் பிற […]

கனடா தொல்காப்பிய மன்ற ஆண்டுவிழா – 2023

This entry is part 3 of 5 in the series 8 அக்டோபர் 2023

குரு அரவிந்தன் – சென்ற சனிக்கிழமை 23-9-2023 அன்று கனடா, ரொறன்ரோவில் உள்ள தொல்காப்பிய மன்றத்தினர் நடத்திய 8வது தொல்காப்பிய ஆண்டுவிழா – 2023 தமிழிசைக் கலாமன்றத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மங்கள விளக்கேற்றல், கனடிய தேசியப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, தொல்காப்பிய மன்றப்பாடல் ஆகியவற்றைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து கனடா பழங்குடி மக்களின் அங்கீகாரம் வாசிக்கப்பட்டது. அடுத்து தொல்காப்பிய மன்றத் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமை உரை இடம் […]

கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா – 2023

This entry is part 4 of 5 in the series 8 அக்டோபர் 2023

கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா – 2023 குரு அரவிந்தன் 35 வது வருட நிறைவைக் கொண்டாடும் கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை 24-9-2023 ரொறன்ரோ சீனக்கலாச்சார மண்டபத்தில் குறிப்பிட்ட நேரப்படி மாலை 5:05 மணிக்கு ஆரம்பமாகிச் சிறப்பாக நடந்தேறியது. திரு. பஞ்சன் பழனிநாதனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம் பெற்றது. சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக இலங்கையில் இருந்து வருகை […]

இந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி

This entry is part 2 of 2 in the series 1 அக்டோபர் 2023

இந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கருந்துளை ஒரு சேமிப்புக்களஞ்சியம் !விண்மீன் தோன்றலாம் !ஒளிமந்தை பின்னிக் கொள்ளலாம் !இருளுக்குள் உறங்கும்பெருங் கருந்துளையை எழுப்பாதுஉருவத்தை மதிப்பிட்டார் !உச்சப் பெருங் கருந்துளைக்குவயிறு பெருத்த விதம்தெரிந்து போயிற்று !பிரியாவின் அடிக் கோலால்பெரிய கருந்துளையின்உருவத்தைக் கணிக்க முடிந்தது !விண்மீன்களை விழுங்கியும்கும்பி நிரம்பாதுபிண்டங்களைத் தின்றுகுண்டான உடம்பைநிறுத்தும் உச்ச வரம்பு !“பிரியா வரம்பு”கடவுளின்கைத்திறம் காண்பதுமெய்த்திறம் ஆய்வது,வையகத்தார் மகத்துவம் ! “பிரபஞ்சத்தில் மிகப் பெரும் காலாக்ஸிக் கொத்துக்களின் (Galaxy Clusters) நீள்வட்ட […]

இந்தியா சூரியனைச் சுற்றி ஆராயப் போகும் ஆதித்யான் -L1 விண்ணுளவியை ஏவியுள்ளது

This entry is part 4 of 6 in the series 3 செப்டம்பர் 2023

Adityan-L1 Launch Live: Indian Space Research Organisation’s (ISRO) Aditya-L1, India’s maiden solar mission, onboard PSLV-C57 lifts off from the launch pad at Satish Dhawan Space Centre, in Sriharikota, on Saturday, September 2, 2023. (Image: PTI) இந்தியா நிலவை நோக்கி சந்திராயின் -3 விண்சிமிழை வெற்றிகரமாக ஏவிய சில நாட்களில், [ஆதித்யான் -L1]  விண்ணுளவியை PSLV -C57 ராக்கெட்டில் அனுப்பி, சூரியனைச் சுற்றி ஆராய்ந்திட முனைந்துள்ளது. ஆதித்யான் – […]

இந்திய நிலா தளஆய்வி சந்திராயின் -3 நிலவின் தென் துருவத்தில் முதன்முதல் தடம் வைத்துள்ளது

This entry is part 2 of 5 in the series 27 ஆகஸ்ட் 2023

2023 ஆகஸ்டு 23 ஆம் தேதி இந்தியாவின் சந்திரயான் -3 நிலா ஆய்வி நிலவின் தென் துருவத்தில் முதன்முதல் தடம் வைத்து, அதன் நிலா ஊர்தி கீழிறங்கி, விண்வெளித் தேடல் வரலாற்றில் ஒருபெரும் சாதனை புரிந்துள்ளது. இதுவரை நிலவை நோக்கிச் சென்று வெற்றி பெற்ற அமெரிக்கா, ரஷ்யா, சைனா முப்பரும் வல்லரசுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தைப் பெற்று விட்டது. 2019 இல் சந்திராயன் -2 திட்டம் 95% வெற்றி பெற்று, இறுதியில் பழுது ஏற்பட்டு, நில […]