மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நிரம்பி இருக்கட்டும் பிரிவுக் கிண்ணம்
அமுதம் போல்
நினைவுகள் பொங்கி !
திருப்பிக் கொடு கிண்ணத்தை எனக்கு
சோகக் கண் ணீருடன்
மௌனமாய்க் கூடி இணைந்த
கோலா கலத்தில் !
அதன் பலாபலன் அந்தரங்க மாய்
உதிக்கட்டும்
இதயத்தின் புதுக் குரலாய் !
இனிப் போகும் பாதையில் நீ
தனித்து விடப் படுவாய் !
கண்ணெதிரில் இருள் மயமாய்
இருக்கும்
பிரதிபலிக்கும் ஒளிக் கீற்றுகள் !
இரகசிய மாய் நாள் முழுதும்
ஆத்மாவின்
தாமரைத் தடாகத்தில்
வீணை மீட்டிடும் கலைத் தெய்வம்
தேனமுதைப் பொழிவாள்
பிரிவுத் துயரில் !
+++++++++++++++++++++++++
பாட்டு : 239 ஏப்ரல் 13, 1923 இல் தாகூர் 62 வயதினராய் இருந்த போது சாந்திநிகேதனத்தில் “விடை பெறுகிறேன்” என்னும் கவிதையாய் எழுதப் பட்டது. பிறகு அக்கவிதை “சப்மோட்சன்” என்னும் பாட்டு நாடகத்தில் பயன்படுத்தப் பட்டது.
+++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] January 14, 2013
- பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் விளக்கு விருது பெறுகிறார்
- தொல்காப்பிய அகம் புறம் சார்ந்த இணையப் பதிவுகள்- ஒரு மதிப்பீடு
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….13 கி. ராஜநாராயணன்- ‘கரிசல் காட்டுக் கடுதாசி’
- பேசாமொழி – வீடு சிறப்பிதழ்..
- நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும். . .
- பிசாவும் தலாஷ் 2டும்
- மணலும் (வாலிகையும்) நுரையும் – கலீல் ஜிப்ரான் – 8
- எலி
- ஒரு ஆன்மாவின் அழுகுரல்..
- சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 4
- பொம்மலாட்டம்
- கிளைகளின் கதை
- ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 1
- என் அருமைச் சகோதரியே ரிசானா..!
- தமிழ்த் திரைப் பாலைவனத்தில் துளிர்த்த ஒரு தளிர் – பாலு மகேந்திராவின் ’வீடு’
- நூல்கள் வெளியீட்டு விழா
- திருப்பூர் அரிமா விருதுகள் 2013
- கலித்தொகையில் தொழில்களும் தொழிலாளரும்
- அசர வைக்காத பொய் மெய் – மேடை நாடகம்
- புதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக
- இரு கவரிமான்கள் – 6
- வாசித்த சில.. புத்தகங்கள்…மலர்மன்னன், Padma Seshadr & Padma Malini , மாலன், டாக்டர் தி.சே.சௌ.ராஜன்
- அக்னிப்பிரவேசம்-19
- திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -2
- வால்ட் விட்மன் வசன கவிதை – 7 அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் (I Hear America Singing)
- தாகூரின் கீதப் பாமாலை – 49 பிரிவுத் துயர்
- சொல்லித் தீராத சங்கிலி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஈர்ப்பு விசை என்பது ஒருவித மாயையாய் இருக்கலாம் !
- சாரல் விருது