ஒரு வண்டு
சிலந்தியிடம் சொன்னது
‘உன்னைப்போல்
இருந்துண்ணவே
ஆசை எனக்கும் – ஆனால்
வலை செய்யும் கலை அறியேனே’
சிலந்தி
வண்டிடம் சொன்னது
‘சும்மா இருப்பது
சோம் பேறித்தனம்
பறந்துண்ணவே
ஆசை எனக்கு – ஆனால்
றெக்கைகள் இல்லையே’
இறைவனிடம் சென்றன இரண்டும்
கேட்ட வரங்களைத் தந்தான் இறைவன்
வலைபின்னியது வண்டு
பறந்தது சிலந்தி
ஒரு நாள்
கூடாத இடத்தில் கூடுகட்டி
பறவை செத்தது
பறக்கக் கூடாத இடத்தில் பறந்து
சிலந்தியும் செத்தது
அமீதாம்மாள்
- “எலி” – சிறுகதை அசோகமித்திரன் (1972)
 - இருப்பதோடு இரு
 - கவிதையும் ரசனையும் – 9
 - புதியனபுகுதல்
 - நான்கு கவிதைகள்
 - மூட முடியாத ஜன்னல்
 - மாசறு பொன்னே
 - தோள்வலியும் தோளழகும் – சுக்கிரீவன்(பகுதி 1)
 - மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்
 - பல்லுயிர் ஓம்பல்
 - அட கல்யாணமேதான் !
 - “விச்சுளிப் பாய்ச்சல்” (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)