-முடவன் குட்டி aஇறைவன் பெரியவன்.. அவனே மகா பெரியவன்.. கலிமாவுடன் உயிர் மூச்சு குழைய அம்மா.. காதில் நீ ஊதிய சொல் ஒன்று எனது பெயராகியபோது சுற்றமும் நட்பும் சூழ இருந்தது… யாரையோ தேடுவதாய் என் கண்ணில் கண்ட நீ சொன்னாய் ’அப்பா நாளை வருவார் மகளே’ என. மலர்ந்தேன்… சிரித்தேன்.. தவழ்ந்தேன்…. நடந்தேன்.. தந்தையே…. அள்ளி அணைத்தும் ஆரத்தழுவியும் கொஞ்சி மகிழ்ந்தும் பேசிச் சிரித்துமாய்.. உங்கள் நினைவுகளில் நிறைந்து தழும்பாது ஏழையானதே என் பிள்ளைப் பருவம் […]
சு.துரைக்குமரன் சிறு அசைவைக்கூட சுவையும் குதூகலமும் நிறைந்து ததும்பும் நிகழ்வாக்கிவிடும் குழந்தைமையைப் போல உனக்குள் என்னையும் எனக்குள் உன்னையும் தேடித் தெளியச் செய்தது காதல் தீராத விளையாட்டுகளால் பிள்ளைகளானோம் கொதித்தடங்கிய பாலில் படியும் ஆடையைப் போல நம் கொண்டாட்டங்களில் படிந்து கொண்டிருந்தது அடிபட்ட ஆளுமையின் விசும்பல்கள் நிலைநிறுத்த எத்தனித்த தனித்தன்மையால் பின்னப்பட்டு தனித்தனியானோம் உன் நொய்மை உண்டாக்கிய வெறுப்பும் தனிமையும் வெளியேறிக் கொண்டிருந்த குழந்தைமையின் மீது வெளிச்சத்தை வாரியிறைத்துத் தளர்ந்தன தொலைந்த முகவரிதேடி அல்லாடிக்கொண்டிருந்தது காதல். சு.துரைக்குமரன்
*மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் * *அறம் • அரசியல் • இலக்கியம்* *இரு நாள் உரைகளும் கருத்தமர்வுகளும்.* * * * • கலாநிதி இ. பாலசுந்தரம் • பா. தேவகாந்தன் • தீபன் சிவபாலன் • ஜெனிற்றா நாதன் • கிருத்திகன் குமாரசாமி • வின்சன்ட் போல் சந்தியாப்பிள்ளை • இரா சிவரட்ணம் • பா. அ. ஜயகரன் • பால சுகுமார் • விஜய் சவரிமுத்து • ராம் சர்வேந்திரன் • பொன்னி அரசு […]
– மா.சித்திவினாயகம் – இன்னமும் மணற் கிடங்குகளிலும், சுடு சாம்பலுள்ளும், காலைக்குத்தும் கற்பார்மீதும் என் வாழ்வு சந்தோசமாயிருக்கிறது. வந்துவிழுந்த செல் துண்டுகளால் என்னைவிட்டு என் உயிர் போகாத மகிழ்ச்சி என்னுள் தாண்டவமாடுகிறது. நான் நடந்த பாதை யெங்கும் என் இரத்தத்தைச் சந்தோசமாகப் பீச்சியடிக்கிறேன். வரும் சந்ததி, என் நிறமூர்த்த அலகுகளை இந்த இரத்தத் திவலைகளிலிருந்து பின்னிக்கொள்ளட்டும். நந்தவனமுள்ள பூஞ்சோலையில் சுதந்திர மலர் பூத்திருக்கும் என்று பூப்பறிக்க முற்பட்டவரின் சதைகள் பிய்த்துப் பிய்த்து நந்திக்கடலெங்கும் வீசிக்கிடக்கிறது. எடுத்து மாலை தொடுங்கள் உலகக் கனவான்களே! சாட்சியைத் தேடியும்… காட்சியைத் தேடியும்…. ஓடுவதாகச் சொல்பவர்கள் விருந்து சாப்பிடுகிறார்கள். தங்களின் விறைத்த குறிகளை எம்முள் புதைக்கத் துடிக்கிற வீராப்பில்…… நான் இன்னமும்… மணிக்கூட்டுமுள்ளைப் போல் இதே பாழும் மணல் வெளியைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறேன். என்ன மாறுதலுக்கு காத்திருக்கிறேன்- என்றோ நான் இல்லாவிட்டால் இங்கு என்ன மாறுதல் நடந்து விடப்போகிறதென்றோ எதுவும் புரியவில்லை. இந்த எலும்புக்கூடுகளால் இனி இங்கு எதை எழுதுதல் முடியுமெனக் காலம்காலமாய் நானிருந்த மண்ணில் மறுபடி என்னைக் குடியேற்றுகின்றார்கள். இதுவே யதார்த்தம் போல் எங்கும் மௌனம். […]
முகில் தினகரன் (சிறுகதை) தான் அமர்ந்திருந்த அந்த சேரை உடகார்ந்தவாறே, அப்படியும் இப்படியுமாக இடுப்பை அசைத்து சோதித்துப் பார்த்தார் கேஷியர் வரதராஜன். ‘லொடக்…லொடக்” என ஒரு பக்கமாய் ஏறி இறங்கியது. குனிந்து பார்த்தார். அதன் அடிப்பகுதியில் ஒரு புஷ் மட்டும் இல்லாமலிருந்தது. ‘அடப்பாவி!…எல்லாச் சேருக்கும் புது வயர் பின்னியாச்சு….புஷ் போட்டாச்சுன்னு சொன்னானே அந்த வயர் பின்னறவன்!…வரட்டும்…வரட்டும்…பில் சாங்ஷன் ஆகி…பேமெண்டுக்கு என்கிட்டதானே வரணும்?…கவனிச்சுக்கறேன்!” கோபத்துடன் தனக்குத்தானே பேசிக் கொண்டார். பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு, ‘சார்…இந்தாங்க சார் பில்லு!” என்று […]
எம்.எம். மன்ஸுர் – மாவனல்லை என்றும் இலக்கியக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னகத்தே நிறுவனம் ஒன்றை வைத்திருக்கும் புரவலர் அல்ஹாஜ் ஹாஸீம் உமர் அவர்கள், எழுத்தாளர்களின் படைப்புக்களை நூல் வடிவில் கொண்டு வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டு வருகிறார். 2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த எழுத்தாளர்களுக்கு உதவும் பணி மூலம் இதுவரை முப்பது நூல்களை இலவசமாக வெளியிட்டு வசதியற்ற எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆதரவளித்து ஈழத்து இலக்கிய உலகுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். அந்த வகையில் […]
ஆதி பார்த்தீபன் நாளாக்கிய நாளொன்றில் அவள் வந்திருந்தாள் நாளான புண்ணிடமும்-நசுக்கப்பட்ட சீழிடமும் கதை பேசிக்கொண்டிருந்தாள் சிக்கிய முடிவழி-திக்கிய பேனினத்தை சிக்கெடுத்து ஓடவிட்டாள் அவள் காதலில் தோற்று பைத்தியமானவளோ..!! விரல்களை நளினம் செய்து காற்றுடன் காதல் பேசினாள் அவள் தன் உரப்புகளை மீட்கத் தொடங்கியிருந்தாள் ஆண்கள் பற்றிய வசைகளுடனும் ஒன்றிரண்டு காமக் கூச்சலுடனும் ..!! மேலாடை களைவதற்காய் மிகைப்பட்ட முயற்சியொன்றை எடுத்துக்கொண்டாள் களைந்த ஆடைகட்கிடையில் கறைபடிந்த அந்த செய்தியை புரட்டிக்கொண்டிருந்தாள் கவர்ச்சி விழுங்கும் உலகத்திடம்…!! thitthu13@gmail.com
மு.கோபி சரபோஜி வெட்கமின்றி நீரையெல்லாம் அம்மணத்தால் அலசி கழுவும் சாண் பிள்ளைகள்…….. அம்மாவின் சேலைதுணியை வலையாய் சுமந்து கெரண்டைக்கால் நீரில் தாவித்திரியும் கருவாச்சி தேவதைகள்….. காற்று கூட விதேசியாய் வேண்டாமென கரையில் வந்துறங்கும் தலைமுறை கண்டவர்கள்…. இரை வரத்துக்காக ஒரு காலூன்றி மறுகால் மடக்கி தவம் கிடக்கும் வள்ளுவ கொக்குகள்….. புறம் சென்று பொழுது சாய அகம் திரும்புகையில் தன்னழகு காண கரை இறங்கும் வாயில்லா ஜீவன்கள்… கரை மீது […]
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெரும்கருணை அருட்பெருஞ்சோதி ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம் , இப்பிரபஞ்சத்தில் ஆத்மிக மையம் பாரதத்திருநாட்டின் தென்கிழக்கே இலங்கைதிருநாட்டில் சாவகச்சேரி பகுதியில் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருளால் ,திருஅருட்பிரகாசவள்ளலார் தலைமையில் உலக சகோதரத்துவ விழா (190-வது வள்ளலார் அவதரித்த திருநாள்) நடக்க இருக்கின்றது. மனித பிறப்பின் உண்மை , இறை நிலையின் ஆற்றல் இதனைஉணர்த்தும் மார்க்கம் சன்மார்க்கம் . இவ்விழாவில் தாங்கள் குடும்பத்தினர் , உறவினர்களோடு கலந்துகொண்டு ஆன்மலாபம் பெற அன்புடன் அழைக்கின்றோம். குறிப்பு : அழைப்பிதழ் இணைக்கப்பட்டு உள்ளது. என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் – வள்ளலார் […]
மணி.கணேசன் தமிழ்ச் சமூகம் தொன்றுதொட்டு வாழும் ஒரு கதைச்சொல்லிச் சமூகமாகும்.தம் வாழ்வியலை இரத்தமும் சதையுமாகக் கற்பனை கலந்து சுவைபட எடுத்துக்கூறுவதில் இது தன்னிகரற்றது.நாட்டுப்புறங்களில் வாய்மொழியாக வழங்கி வந்த பல்வகைப்பட்ட கதைகள் முறையாக எழுதப்படாமலும் தொகுக்கப்படாமலும் இலக்கியமாகப் பதிவுசெய்யப்படாமலும் இருந்த காரணங்களால் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகம் மேலை இலக்கியப் புத்திலக்கிய வரவாகச் சிறுகதையைக் கருதத்தொடங்கியது. ஆதலாலே,தமிழ்ச்சிறுகதையின் பிதாமகர் வ.வே.சு.ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் எனும் சிறுகதை தமிழில் உருவான முதல் சிறுகதையாக உருவெடுத்தது என்றுதான் கூறவேண்டும்.மேலைநாட்டார் வகுத்துத்தந்த சிறுகதை […]