author

உறு மீன் வரும்வரை…..

This entry is part 10 of 28 in the series 9 செப்டம்பர் 2012

வில்லவன்கோதை   விடியற்காலை  நான்கு  மணியிருக்கும் ! இரண்டு நிமிடங்கள் மட்டுமே நின்று  இளைப்பாறிய  சதர்ன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நெடுங்காடு  ரயில் நிலையத்தை விட்டு தெற்கு நோக்கி  தன் பயணத்தை துவக்கியது. அந்த அதிகாலை நேரத்தில் அது எழுப்பிய  பார்…..ம்  என்ற பிசிரடிக்கும் பேரொலி அந்த மலைப்பிராந்தியம் முழுதும்  எதிரொலித்து பெருவாரியான உயிரினங்களின் உறக்கத்தை தொலைத்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு கிடந்த பெட்டிகளில் ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டியில் இருந்து குறைந்தபட்ச சுமைகளுடன் குதித்து இறங்கினான் […]

கர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிற

This entry is part 27 of 28 in the series 9 செப்டம்பர் 2012

கர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிறது. குரு என்று எவரிடமும் பாட்டு கற்றுக் கொள்ளாமல் தானே சுயமாக சாதக வலிமை மூலம் இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். ஜி.என்.பி., மதுரை மணி ஐயர் போன்ற ஜாம்பவான்கள் காலத்தில் தொடங்கி இன்றும் கச்சேரிகள் செய்பவர். 90 வயதாகும் இவர் இன்று வாழ்கிற கர்நாடக இசைப் பாடகர்களிலேயே மிகவும் மூத்தவர். இன்றைய தலைமுறையினருக்கும் வருங்கால சந்ததியினருக்கும் அறிமுகம் செய்விக்கும் வகையில் […]

Bharathiar-Bharathidasan Festival 2012,Singapore

This entry is part 28 of 28 in the series 9 செப்டம்பர் 2012

Dear Members, friends and well-wishers of TLCS, Greetings! On Behalf of the Tamil Language and Cultural Society i have the pleasure to invite you with family and friends to: Event          :  Bharathiar-Bharathidasan Festival 2012, Date           :  Saturday, 08 September 2012 Time           :  6.00 […]

வைகறை வாசம் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 37 of 37 in the series 2 செப்டம்பர் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) காத்தான்குடியைப் பிறப்பிடமாகவும், பாணந்துறையை வசிப்பிடமாகவும் கொண்டவர் ஜனாப் பௌஸ் மௌலவி அவர்கள். இவர் கவிதை, சிறுகதை, கட்டுரைகளின் மூலம் பத்திரிகைகளிலும், வானொலி நிகழ்ச்சிகளிலும் தன் பங்களிப்பைச் செவ்வனே செய்துவரும் பன்முக ஆளுமை கொண்டவர். மார்க்கத்தின் மனக்கதவு, காதிகோட், போதனைப் பொக்கிஷம்,  நிறை மார்க்கத்தின் நிலா முற்றம், ஊடகத்தில் உதித்த உபதேசங்கள், விடியலை நோக்கிய விசுவாசிகள் ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும், முஅஸ்ஸினின் முறைப்பாடு, பாரெங்கும் பலஸ்தீனம், பாசம் சென்ற பாதையிலே போன்ற கவிதைத் […]

இந்திய இன்சுரன்ஸ் பணம் & பிஎஃப் பணம் பணால் ஆக, நிதிஅமைச்சரின் யோசனை….

This entry is part 28 of 37 in the series 2 செப்டம்பர் 2012

புனைப்பெயரில்…   போனமுறை திரு.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது நடந்த ஸ்டாக் மார்க்கெட் கூத்து பலரின் வாழ்வை தெருவிற்கு கொண்டு வந்தது எங்காயாவது இருக்கட்டும் எப்படியும் போகட்டும் என அவர் உள்துறை மந்திரியாக இருந்த போது நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்… ஆனால், மன்மோகனுக்குத் தான் நாம் நிம்மதியாக இருப்பது பிடிக்காதே…. திரும்பவும் இப்போது நிதி, ப.சி கையில். தற்போது அவரின் லட்சியம், ஸ்டாக் மார்கெட்டை ரிவைவ் பண்ணுவதாம்..? எப்படி, இந்திய இன்சுரன்ஸ் கம்பெனிகள், பிஎஃப் பணம் […]

இவ்வாண்டின் “ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது “ பெற்ற சுப்ரபாரதிமணியனின் “நீர்த்துளி ” நாவல்

This entry is part 25 of 37 in the series 2 செப்டம்பர் 2012

 “  உதிரி மனிதர்களின் உலகமும்,      சூழல் கேடற்ற நகரக் கனவும்”                                                      பிரபஞ்சன் திருப்பூர் மக்களின் வாழ்க்கை சார்ந்து, பனியன் தொழில் சார்ந்த மக்களின் வாழ்ககை பற்றிய சிந்தனைகளை தொடர்ந்து தன் படைப்புகளின் வழியே வெளிப்படுத்தி வருபவர் சுப்ரபாரதிமணியன். சாய்த்திரை நாவலில் நொய்யல் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும் அந்த் நதியின் கலாச்சார விசயங்களையும் இலக்கியப்படைப்பாக்கியவர். இந்த நாவலில் அந்த நகரம் சார்ந்த சிந்தனைகளை வேறொரு கோணத்தில் எழுதியிருக்கிறார். உதிரி உதிரியான பாத்திரங்கள், கலங்கலான […]

சாகித்திய அகாதெமி விருது குறிஞ்சிச்செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம்

This entry is part 21 of 37 in the series 2 செப்டம்பர் 2012

சாகித்திய அகாதெமி விருது குறிஞ்சிச்செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் குறிஞ்சிசெல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான (2012 ) ‘சாகித்ய அகாதெமியின்’ பால சாகித்ய புரஷ்கார் விருது கிடைத்துள்ளது. நிவேதிதா புத்தகப்பூங்கா வெளியிட்ட ’காட்டுக்குள்ளே இசைவிழா’ எனும் சிறுவர் நூலுக்கு இந்த விருதை குறிஞ்சிச் செல்வர் பெறுகிறார் குறிஞ்சிச் செல்வர் கொ. மா. கோதண்டம் அவர்கள், 15. 9. 1938 இல் கொட்டுமுக்கல மாடசாமி ராஜாவுக்கும், சீதாலட்சுமி அம்மாளுக்கும் பிறந்தார். மனைவி ராஜேஸ்வரிகோதண்டம் எம்.ஏ. ஹிந்தி படித்தவர். […]

அது ஒரு வரம்

This entry is part 18 of 37 in the series 2 செப்டம்பர் 2012

முகில் தினகரன் திரைப்படங்களில் கதாநாயகி மழையில் நனைந்தபடி ஓடிச் சென்று ஒரு குடிசையில் ஒதுங்குவதையம் குடிசைக்குள் அமர்ந்திருக்கும் கதாநாயகன் நனைந்த நிலையில் நிற்கும் அவளின் மேனியழகில் சொக்கிப் போய் காதல் வயப்பட்டு நெருங்கி வந்து அணைப்பதையும், அவளும் அவன் அணைப்பில் மயங்கிச் சாய்வதையும், பார்க்கும் போதெல்லாம் சிரிப்புச் சிரிப்பாய் வரும் சாவித்திரிக்கு. ஆனால் இன்று அந்தக் கதாநாயகியின் சூழ்நிலை நிஜத்தில் அவளுக்கே ஏற்பட்ட போது அவளுடைய மனநிலை வேறு விதமாயிருந்தது. சிரிப்பு வரவில்லை மாறாக…எதையோ தேடும் ஆவல்…எதிர்பார்ப்பு […]

ஆற்றங்கரைப் பிள்ளையார்

This entry is part 12 of 37 in the series 2 செப்டம்பர் 2012

தி.ந.இளங்கோவன் பருவப் பெண்ணின் செருக்கோடு வளைந்து நெளிந்து பாய்கிறது நதி. கரையோரம் பொறுக்க யாருமின்றி உதிர்ந்து கிடக்கின்றன நாவற்பழங்கள். அப்பா தூக்கியெறிந்த உணவுத்தட்டு ஆடி அடங்குகிறது முற்றத்தில் சோற்றுப்பருக்கைகளின் மீது. செத்த எலியொன்றை சிதைத்துப் புசிக்கின்றன பசி கொண்ட காகங்கள். சருகு மெத்தையில் சுருண்டு கிடக்குதொரு நாகம். காய்களின் கனம் தாங்காமல் தரை தொடுகிறது மாமரக்கிளை. தனது கடைசி உணவுக்காய் காய்க்கிறது தினமென்று உணராப் பெண்ணொருத்தி அம்மரத்தின் பூப்பறித்து தினந்தினம் தொழுகின்றாள், எல்லாம் அறிந்தும்   எதுவும் […]

இடைவெளிகள் (9) – புலம்பெயர்தலும் உருளைக்கிழங்கு பொரியலும்

This entry is part 28 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

இராம. வயிரவன் (25-Aug-2012) உருளைக்கிழங்கையும் கேரட்டையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வானலியில் ஒரு கறண்டி எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்த பிறகு நறுக்கி வைத்திருக்கிற உருளைக்கிழங்கு மற்றும் கேரட் துண்டுகளை அதிலே போட்டு சிறிது உப்பு, சிறிது மிளகாய்ப்பொடி போட்டுக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் விட்டுக்கொள்ளலாம். உருளைக்கிழங்கும் கேரட்டும் நன்கு வெந்துவிடும். சற்று நேரத்தில் இறக்கி வைத்து விட்டால் உருளைக்கிழங்கு கேரட் பொறியல் தயார். ‘என்ன இது கட்டுரை வேறு மாதிரியாகப் போகிறதே..’ […]