author

நகர்வு

This entry is part 26 of 37 in the series 22 ஜூலை 2012

சாந்தாதத்     அடுத்து என்ன செய்வது எனும் குழப்பத்துடன் பால்கனியில் நின்று கொண்டிருந்தான் கணேசன். எதிரில் சற்றே முயன்றால் தொட்டுவிடலாம் என்றளவு அருகாமையில் கம்பீரமாகத் தென்பட்டது புதிதாய் எழுந்து கொண்டிருந்தது அக்கட்டடம். அன்றுதான் ஜந்தாம் தளத்திற்குக் கூரை போடப்பட்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு குளுமை கலந்த புத்தம் புது சிமெண்ட் வாசனையைக் காற்றில் அனுப்பிக் கொண்டு சலனமற்ற ஞானி போல் நின்று கொண்டிருந்தது. ஊர்..உத்தியோகம்..பயணம்… போக்குவரத்து.. இப்படி எக்கவலையுமில்லாமல் இது … சிறு பிள்ளைத்தனமாய் ஒரு எண்ணம். […]

தில்லிகை

This entry is part 23 of 37 in the series 22 ஜூலை 2012

  தில்லிகை – தில்லியில் சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டு இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தைப் பெற்றுவரும் தமிழ் இலக்கிய வட்டம்.  இது, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு, தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சந்திப்புகளை நட த்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு மையக் கருத்தை ஒட்டி இந்தச் சந்திப்புகள் நிகழ்கின்றன.  இதுவரை, ‘மதுரை’, ‘கரு’, ‘போர்’, ‘தில்லியும் தமிழ் இலக்கியமும்’, ‘தமிழும் பிற இந்திய மொழி இலக்கியங்களும்’ ஆகிய மையக் கருத்துக்களை ஒட்டி ஐந்து இலக்கியச் சந்திப்புகள் நடந்தேறியுள்ளன.  உறுப்பினராக […]

வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது

This entry is part 20 of 37 in the series 22 ஜூலை 2012

Dear Sir, The Tamil Literary Garden Iyal Virudhu  nomination form is attached. I shall be grateful if you will please please carry this in Thinnai website. Many thanks for your usual cooperation. best regards. anbudan a.muttulingam வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது. கனடாவில், அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். […]

மதநிந்தனையாளர்கள் என்று பெயர் சூட்டி அப்பாவிகளை கொல்லும் பாகிஸ்தான் கலாச்சாரம்

This entry is part 32 of 32 in the series 15 ஜூலை 2012

நதீம் எஃப் பரச்சா இறைவன் வெளியே, பைத்தியக்காரத்தனம் உள்ளே ஜூலை 4 ஆம் தேதி, புதன் கிழமை, பஹவல்பூர் (தெற்கு பஞ்சாப்) நகரத்தில் உள்ள போலீஸ் ஸ்டெஷனின் உள்ளே வெறியேறிய கும்பல் ஒன்று உடைத்து புகுந்தது. அந்த கும்பலின் குறி ஒரு நாடோடி. இப்படிப்பட்ட நாடோடிகளை பாகிஸ்தானில் ஏராளமாக இருக்கும் சூபி துறவிகளின் தர்க்காக்களின் அருகே பார்க்கலாம். இந்த நாடோடிகளை மலாங் malang என்று அழைப்பார்கள் அந்த பகுதி மக்கள் இந்த நாடோடியை சித்தசுவாதீனம் இல்லாதவர் என்று […]

இழப்பு

This entry is part 31 of 32 in the series 15 ஜூலை 2012

நிலாவண்ணன் எத்தனை ஆண்டுகள் ஆனாலென்ன… அதற்கான சொந்தத்தை மனம் மறக்குமா என்ன…? அந்த மேளத்தை – தொல் தமிழர்களின் அந்த தோல் கருவியை, மிருதுவாயிருந்து இப்போது கொஞ்சமாக முரடேறிப்போயிருந்த அதன் மேற்பாகத்தைத் தடவிக் கொடுக்கும்போது பழைய ஞாபகங்கள் மனதுக்குள் ஓடி வந்து சம்மணம் இட்டுக் கொண்டன. ‘இவ்வளவு நாளா உபயோகிக்காம கெடந்தாலும் கொஞ்ச நாழி அனல்ல சூடு காட்டினா டண்டணக்கு…டண்டணக்குன்னு ஏழூருக்கும் கேக்கற மாதிரி தயாராயிடுமில்ல..!’ அம்மாசி தன் இசைக்கருவியிவின் நாதத்தில் ஆழ்ந்து போனார். “ஏம்பா உங்களுக்கு […]

நகரமும் நடைபாதையும்

This entry is part 9 of 32 in the series 15 ஜூலை 2012

கு.அழகர்சாமி ஒரு நகரின் நிலை நன்றா இல்லையா என்பதை எப்படித் தேர்வது? அந்த நகரின் நடை பாதைகள் நிலையைப் பாருங்கள். இப்படி ஒரு கருத்தை சென்னைக்கு வருகை தந்த ஒரு வெளி நாட்டு மேயர் ஒருவர் சொன்னதாய் இந்து நாளிதழில் எப்போதோ படித்த நினைவு. சொன்ன கருத்தில் ஒரு மேலை நாட்டுப் பின்னணியும் கண்ணோட்டத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலை நாட்டு நகர் ஜனத் தொகையையும் , நம் நகரங்களின் ஜன நெரிசலையும் ஒப்பிட முடியாது […]

சிரியாவில் என்ன நடக்கிறது?

This entry is part 26 of 41 in the series 8 ஜூலை 2012

பிபிஸி ஐக்கிய நாடுகள் சபையும் மற்ற பார்வையாளர்களும் மார்ச் 2011இலிருந்து இதுவரை 9000 பேர்கள் சிரியா போராட்டத்தில் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள். போராட்டம் எப்படி ஆரம்பித்தது? சிரியா நாட்டின் தெற்கில் இருக்கும் நகரமான டேரா (Deraa)வில் 14 பள்ளிச்சிறுவர்கள் துனிசியாவிலும் எகிப்திலும் மக்களது கோஷமாக இருந்த ஒரு கோஷத்தை சுவரில் எழுதினார்கள். அரபி மொழியில்.”மக்கள் இந்த அரசு வீழவேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்ற பொருள். இதற்காக போலீஸ் இந்த சிறுவர்களை கைது செய்து அழைத்து சென்று சித்ரவதை செய்தது. […]

தீவிரவாதம் ஆக்கிரமித்த முஸ்லீம் மனம்

This entry is part 24 of 41 in the series 8 ஜூலை 2012

எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் (பாகிஸ்தான் தினசரி) தலையங்கம். ஜூலை 3, 2012   இன்றைக்கு பாகிஸ்தானில் தலையாய விவாத தலைப்பு என்னவாக இருக்குமென்றால், அது நிச்சயமாக தீவிரவாதமாகத்தான் இருக்கும். இது மதரஸாக்களை நடத்தும் உலேமாக்களாக இருந்தாலும் சரி, தாராளவாத குடிமக்களாக இருந்தாலும் சரி, இதுதான் முக்கிய பேச்சாக இருக்கிறது. இதே முஸ்லீம் தீவிரவாதம்தான்  உலகத்தின் மற்ற பகுதிகளிலும் தலையாய விவாதமாக இருக்கிறது. ஐரோப்பாவுக்கு செல்லும் முஸ்லீம்களும் அமெரிக்கா வாழ் முஸ்லீம்களும்சந்தேகத்தின் காரணமாக கைது செய்யப்படுகிறார்கள். ஆசியாவிலும் முஸ்லீம் பெரும்பான்மையும் […]