முன்றில் (சிற்றிதழ்களின் தொகுப்பு) பேரா.காவ்யா சண்முகசுந்தரம் வெளியீடு: காவ்யா விலை: ரூ 550 முன்றில் தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் முன்னோடி வகையைச் சேர்ந்தது என்றால் மிகையாகாது. 1988 முதல் 1996 வரை 19 இதழ்களாக வெளிவந்து தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் சிறந்த இடத்தையும், நவீன தமிழிலக்கிய ஆக்கங்களுக்குச் சீரிய தளத்தையும் தந்து நல்லதோர் தமிழ் முற்றமாக விளங்கியது முன்றில். ”இதற்கு தமிழின் தனித்துவம் மிக்க படைப்பாளிகளான மா.அரங்கநாதன், அசோகமித்திரன், க.நா.சு ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது” என்று தொகுப்பின் […]
நவீன தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய பன்முகம் காலாண்டிதழைத் தொடர்ந்து அதன் பதிப்ப்பாளர் ரவிச்சந்திரனை ஆசிரியராகக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாத இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது புதுப்புனல்! கடந்த 3.4.2011 அன்று புதுப்புனலின் இரண்டு நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. (எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரண்டாவது கவிதைநூல் மற்றும் அவருடைய கட்டுரைத்தொகுதி). இந்த நிகழ்வின் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக தமிழிலக்கியவுலகில் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகக் குறிப்பிடத்தக்க பங்காற்றிவரும் கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது வழங்கப்பட்டது! புதுப்புனல் ஆசிரியர் […]