author

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு — புத்தகம் ஒரு பார்வை.

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு பற்றி 1953 இல் ஒரு புத்தகம் வந்துள்ளது. அதன் மறுபதிப்பு 2003 ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தில் மலர்ந்துள்ளது. நாகநாட்டில் இருந்து காஞ்சீபுரம், காவிரிப் பூம்பட்டினம், சிதம்பரம் அதன் பின் பாண்டிநாடு என்று அவர்கள் வலசை வந்தது குறித்தும் அவர்கள் வணிகம், தெய்வ வழிபாடு, கொண்டுவிக்கப் போய் பொருளீட்டியது,தரும வட்டி வாங்கியது, சிவாலயங்கள் அமைத்தது, தருமமே குலதர்மமாகக் கொண்டது, வேத பாடசாலைகள், பசுமடங்கள் அமைத்தது, குளங்கள் வெட்டியது, அன்னதான மடங்கள் அமைத்தது, இறைத் […]

மயிலிறகு

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

பூங்காவின் சாயம் திப்பிய கிருஷ்ணன் நெற்றியில் கட்டிய ஒற்றை மயிலிறகு ஒரு மாறுவேடப்போட்டியில் சிலையாக நிற்கவைத்தது குழந்தையை. அசைந்து ஓடிக்கொண்டிருக்கும் அவனை ஐந்து நிமிடங்கள் அசைவற்ற சிலையாக்கிய பெருமைக்குள்ளானதாக அது ஊர் ஊராக புத்தகங்கள் மத்தியில் பயணப்பட்டுக்கொண்டிருந்தது. அவனுக்குக் குழந்தைகள் வந்தும் அது முதுமையடையவில்லை. ஆட்டமும் பாட்டும் மறந்து அசைவற்ற குழந்தைகள் தொலைக்காட்சி முன்னிருக்க கோடைச் சந்தையில் புழுக்கத்தோடு விசிறியபடி கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள் மயிலிறகு விசிறியை.

எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார் -நூல் அறிமுகம்

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

எம்ஜியார் என்ற மூன்றெழுத்து மந்திரம் நம் தமிழ் சினிமாவையும் அரசியலையும் ஆட்டிப்படைத்த விபரத்தையும் அவரது வாழ்க்கைச் சரிதத்தையும் பால கணேஷ் சுருக்கமாக அழகாக விவரித்துள்ளார். பிறப்பிலிருந்து அவர் சந்தித்த சோதனைகள், ஈழத்திலிருந்து கேரளாவுக்குப் புலம் பெயர்ந்தது, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்கத்துவங்கி சினிமாவுக்கு வந்தது, சினிமாவில் பெற்ற வெற்றிகள், எம் ஆர் ராதா சுட்டது, அதன் பின் அரசியல் ப்ரவேசம் , திமுக விலிருந்து விலகி அதிமுக துவங்கியது, மூன்று முறை முதல்வரானது, சத்துணவுத்திட்டம்,நல்லாட்சி […]

நுரைத்துப் பெருகும் அருவி

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

கண்ணோரம் காக்கைக் கால்களாய்ச் சுருங்கி விரிந்து  கிடக்கின்றன காட்டு விருட்சங்கள்.. நுரைத்துக் கிடக்கும் அருவி பெருகி வீழ்கிறது அந்தரங்கம் திறந்த மனமாய். தவளைகள் முணுமுணுப்போது குதித்துச் செல்கின்றன கரையோரம். மினுமினுப்போடு  தாவித் தாவி நீந்திக் கொண்டிருக்கிறது நதி. முங்கிக் குளித்துக் கொண்டிருந்தன கற்கள். கரையோரம் கிடந்தவை கால் நனைத்துக் கிடந்தன. விருட்சங்கள் விருப்பத்தோடு கரை அணைத்துத் தழுவிக் கொடியாய்க் கிடந்தன. அள்ளி அள்ளிச் சுழற்றிச் சென்றது நீரை நதி…. குழந்தையைக் கொஞ்சுவதாய். எச்சில் நுரையால் முத்தமிட்டபடியே சென்றன […]

மாணவர்களுக்கு மொழிப் பயிற்சியும் துறைசார்ந்த அறிவும்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

தற்காலத்தில் மாணவர்க்கு மொழிப் பயிற்சி பல சமயம் சிறப்பாய் இருப்பதில்லை.   பேசும் மொழி வட்டார வழக்கிலிருப்பது தவறில்லை. ஆனால் ஒரு மாணவனின் மொழியைக் கொண்டே அவனின் கற்றலை , தகுதியை ஊகிக்கலாம்.    மொழியறிவு, அவர்களின் எதிர்காலத்தை நிர்மாணிக்கிறது.    மொழியறிவுப் பழுதால் என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள நேருகிறது என முதலில் பார்ப்போம்.   1. விளம்பரங்களில் எழுத்துப் பிழைகள்.   2. கடிதம் எழுதத் தெரிவதில்லை. தமிழை எழுத்துப் பிழையுடனும்.ஆங்கிலத்தை இலக்கணப் பிழையுடனும் எழுதுகிறார்கள்.கட்டுரைகள் எழுதினாலும்  ur, tq ,  என்றெல்லாம் எழுதுவது.ஆன்லைன் அல்லது செல்ஃபோன் லாங்குவேஜில் எழுதுவது.    புதிதாக ஒன்றையும் எழுதத் தெரியாமல் எல்லாமே கட் காப்பி ,பேஸ்ட் மெசேஜ்கள் தான்.   3. ப்ராஜக்டுகளை விலைக்கு வாங்கி சமர்ப்பித்தல்.   4. என்ன படிப்பது, எப்படிப் படிப்பது என்ற தெளிவின்மை.   5. தமிழ் மீடியத்திலிருந்து ஆங்கில மீடியம் மாறுவதால் புரிந்துகொள்ளுதலில் சிரமம். […]

திசையறிவிக்கும் மரம்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

மரம் முற்றிவிட்டது துளிர்விட்டுக்கொண்டும்.. ****************************** மொட்டை மரங்களும் அழகிய நிர்வாணத்தோடு திசையறிவித்தபடி. ****************************** வீழ்த்தப்பட்டபின்னும் மரக்கிளைகள் வேர்பிடித்து வேறொருவம்ச ஆணிவேராய்.. ********************************** மரக்குளத்தில் அலையெழுப்புகின்றன பறவைக் குரல்கள்.. ********************************* நீர் கிடைத்த கிளைகள் விரிகின்றன பசுந்தோகையாய்.. கிடைக்காதவை கிண்ணிக் கோழியாய்.

அடையாளம்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

ராதா முழித்துக் கொண்டது. ரூமுக்குள் இருட்டு. ராதா உருவமில்லாமல் வார்த்தை துப்பியது. கையையும் காலையும் படுக்கையில் தொமால், தொமாலெனத் தூக்கிப் போட்டது. ‘என்ன அம்மா இன்னும் ஓடிவரக் காணோம்.?’   ராதா கட்டிலின் முழு விஸ்தீரணத்திற்கும் புரண்டது. ‘படாரெ’ன மணை தரையிடிக்க இசகுபிசகாகக் கட்டிலிலிருந்து கீழே விழுந்தது. வலது முழங்கைப் பக்கம் ஒரு ‘மளுக்’. காய்ங், மூய்ங் என்று கத்திக் கொண்டே இடதுகையால் தரையை அடித்தது. படுக்கை அறையிலிருந்து தம் தம்மென்று அதிர நடந்து சமையற்கட்டு சென்று […]

காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

This entry is part 29 of 29 in the series 24 மார்ச் 2013

”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தண்டாயுதபாணிக்கு அரோகரா பழனி மலை முருகனுக்கு அரோகரா அன்னதானப் பிரபுவுக்கு அரோகரா.” இதுதான் கார்த்திகை மாத வேல் பூசையில் காரைக்குடி எங்கும் கேட்கும் கோஷம். கார்த்திகை மாதம் முருகனுக்கு உகந்த மாதம். அரனுடைய நெற்றியில் அறுபொறிகளாக ஆங்காரமாக உதித்த முருகப்பெருமானின் வேலையும் தண்டாயுதத்தையும் பூசையிட்டு அன்னம் படைத்து ஊரோடு உணவிடும் திருவிழா இது. வெளிநாடுகளுக்குக் கொண்டுவிக்கச் சென்ற நகரத்தார் தம் வருவாயில் ஒரு பகுதியை கோயில் கட்டவும், குளங்கள் வெட்டவும்,  வேத பாடசாலைகள் […]

அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?

This entry is part 11 of 33 in the series 3 மார்ச் 2013

நாம் சின்னப் பிள்ளையில் அம்புலிமாமா, கோகுலம், பாப்பா மலர், பாலமித்ரா,அணில், முயல்  போன்ற புத்தகங்கள் படித்திருக்கிறோம்.   அழ. வள்ளியப்பாவின் குழந்தைக் கவிதைகளும், வாண்டுமாமாவின் கதைகளும் என்றால் நேரம் காலம் தெரியாமல்  படித்து ரசித்திருக்கிறோம். இதுபோக தாத்தா பாட்டி போன்றோரும் அம்மா, அப்பாவும் கதை சொல்லி ஊட்டி வளர்த்திருப்பார்கள். இன்று நகரங்களில் வாழும் ஏன் கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்குக் கூட கல்வியைத் தாண்டி ஏதும் சிந்திக்க முடியவில்லை. கதை சொல்லும் தாத்தா பாட்டிகளும் அம்மா அப்பாக்களும் அருகி விட்டார்கள். […]

எம். ஏ. சுசீலாவின் தேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.

This entry is part 5 of 26 in the series 24 பிப்ரவரி 2013

அம்மாவை விமர்சிக்கலாமா.. உள்ளும் புறமும் அறிந்த அம்மாவாய் இருப்பின் விமர்சிக்கலாம் என்றே தோன்றுகிறது. பிடித்தது பிடிக்காதது எல்லாம் அவர்களுக்குத் தெரிந்தாலும் மகளாய் இங்கே ரசனைப் பார்வை மட்டுமே மிச்சமிருக்கிறது.. அம்மாக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தேவதைகள் என்பது இன்னொரு முறை நிரூபணமாகி இருக்கிறது. இலக்கிய உலகில் செங்கோல் ஏந்திய தேவதைகளில் என் தமிழன்னை சுசீலாம்மா ஒரு முக்கிய தேவதை. தன்னைத் தேடித் தேடிக் காணும் பெண்களில் எல்லாம் கண்டடைந்து எழுத்தாய் விவரிக்கும் நேயம் அவருக்கே வாய்த்தது. சமயத்தில் ருத்ர […]