எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ சில் வண்டுகள் ரீங்காரமிடும் ஓர் இரவும் பகலுமற்ற இடைத்தருணத்தில் அவன் வருகையை தவிர்க்கவியல்வதில்லை மெல்லிய புகை தன் சூழ மிதக் குளிரினூடே ஏதோ ஒன்றைப் பகர நினைப்பதாய் அமர்வான் என்னருகாய்! மிக வலியதாய் பாதித்தலுக்குட்பட்ட அந்நாளுக்கான சில அவசியச் செய்திகளை அசைபோட்டுக் கிடப்பான் ஒன்றுமற்றுப் போன விஷயமொன்றிற்காய் யோசனையிட மெனக்கெடுவதாய் நடிப்பான் எப்படி இருந்திருக்கக் கூடாதென்றும் எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டுமென்றும் அறிவொழுகும் தன் தலை வழியாய் புத்தி சொல்லிக் கிடப்பான் சில கணங்கள் வரை […]
மீன் குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும், மீன் குழம்பை புளிப்பா காரசாரமா சுள்ளுன்னு வைக்கணும் என்பார்கள். கர்ப்பிணி பெண்கள், ஜுரம் வந்து வாய் கசந்தவர்கள், பியர் குடித்தவர்கள், என எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும், மீன் உணவு ஒன்று தான் வெயிட் போடாதது, எவ்வளவு வேண்டுமானாலும், எந்த ஊர் போனாலும் சாப்பிடலாம். அதில் இது ஒரு ஈசியான முறை. மீனை கடைசியில் தான் போடணும் இல்லை என்றால் குழைந்து விடும். தேங்காய் பவுடர் இல்லாதவர்கள், தேங்காய் பத்தை நான்கு […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆணாக வாழ்வதி லிருந்து ஆண்மை உட்கரு தானாகத் தோன்றுவ தில்லை ! ஆணுக்கு ஆதரவு அளிக்கும் தோழ மையி லிருந்தும் சேருவ தில்லை ! “வெளுத்துப் போய்த் தெரிகிறாய் ! பள்ளிக்குச் செல்லாதே” என்று பாட்டி போதிப்பாள் ! ஒட்டம் பிடி நீ அதைக் கேட்ட வுடனே ! உன் தந்தை கொடுக்கும் உதை அதை விட உன்னத மானது ! உடம்பில் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “என் ஆத்மா வாழும் வாழ்க்கைக்கு “இரவு வழிகாட்டி” போன்றது. எத்தனை விரைவாக அது பயணம் செய்கிறதோ அத்தனை அருகாமைல் உள்ளது காலைப் புலர்ச்சி !” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ அறிவும். பகுத்தாய்வு நெறியும் உனது தகுதியை நீயே மதிப்பிடு உனக்கு மரணம் இல்லை ! பகுத்தாய்வு செய்வாய் உனது ஒளிக் கதிரை ! சத்தியத்தின் சமிக்கை அது ! தகுந்த […]
ஆடு மேய்க்கிற ஆத்தா போயி அர நாழி ஆயிருச்சு சில்லுவண்டும் கூட்டுசேந்து சத்தம் போடக் கெளம்பிருச்சி கோழிகளும் பத்திரமா தன் கொடப்புக்குள்ள பதுங்கிருச்சி செனை மாட்டத் தேடி வந்த சின்னய்யாவும் போய்த்தாரு மோட்டிலேறிப் பாக்கையில கண்ணுக் கெட்டுன தொலைவுவர மனுச நடமாட்டம்னு எதுவுமில்ல கூத்துப் பாக்க கூட்டம் ஒன்னு பந்தம் கொளுத்தி நவந்து போவுது சுள்ளி பொறக்கி சுடவச்ச கஞ்சிப் பான காஞ்சுக் கெடக்கு கறிக்கி கொண்டாரப் போன அத்தான் பொழுதாயும் குடுசை திரும்பல-காளியாத்தா! எங்கத்தானுக் கொன்னும் […]
பாவனைகளும் தோரணைகளும் எங்கோ கண்டதின் சாயலில் வழிகாட்டியோ பின் தொடர்ந்தோ அருகுணர்த்தும் நம் நிழல் போல் சுவர்களை மீறி வரும் ஒலி அறையின் வெக்கையாய் அனல் பரத்தும் நெஞ்சக்கூட்டினுள் உஷ்ணப்பந்தை விழுங்குதல் போல் ஒளிரும் நினைவுகளில் உள்ளக்கிடக்கை விழித்திருக்கும் தன் கண்களை உருட்டியபடி கனல் நீரில் தத்தளிக்கும் துடுப்பற்ற பொத்தல் படகாய் என் அன்னியோன்யத்தில் உலவும் எனக்கே அல்லாத உறவின் முகம் எப்போதுமே கதைத்திருக்கும் தான் கரைந்ததும் கனத்ததுமாய் கண்கள் காணாத முகமற்றவனின் பேச்சொலி செவிகளில் பதியும் […]
நள்ளிரவில் நனைந்திருந்த நிலையத்தில் நின்றது பேரூந்து முன்னிரவின் மழை மிச்சமிருந்தது மசாலாப் பால் கடையின் மக்கிப்போன கூரையில் மஞ்சள் தூக்கலாக யிருந்த மசாலாப் பாலில் மடிந்த ஈசல் பாலை மேலும் அசைவமாக்கியிருந்தது எடை குறைந்த பயணப் பொதியோடு ஈரத்தில் நடந்து என் வீடிருந்த சந்தின் முச்சந்தியை அடையவும் காணும் தூரத்தில் என் வீட்டுக்கு எதிர் வீட்டில் மேடையிட்டத் திண்ணையில் கண்ணம்மா பாட்டி உட்கார்ந்திருந்தது கண்ணம்மா பாட்டி கதை சொல்லாது காதைக் கிள்ளாது பாதையில் செல்வோரை வதைக்கவும் செய்யாது […]
ஸ்ருதி ரமணி ஏ, பாரதி…! பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட முயன்றவனே நீ விட்டுச் சென்ற அக்கினிக் குஞ்சை நாங்கள் இன்று தேடிக் கொண்டிருக்கின்றோம் வீரத்தைப் பறைசாற்றிய அது இன்று எங்களின் அவசியத் தேவை கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து நாங்கள் குமைந்து கொண்டிக்கிறோம் இன்று புதிதாய்ப் பிறந்தோமென உன் மக்கள் எண்ண வேண்டுமெனின் திரும்பி ராமல் இங்கே தீமைகள் அழிய வேண்டும் நீ உரைத்தது போல் மடமை, சிறுமை, துன்பம், பொய் வருத்தம் நோவு இவை […]
சக்கர ஓட்டத்தின் எதிர் திசையில் தனக்கான அழுத்தங்களைப் பதித்து கோடுகளில் கலயங்களின் தலைவிதி எழுதினான் குயவன். பின்பு நிலவின் இரவொன்றில் காந்தர்வக் கண்ணன்களை ராதைகளோடு உலவ விட்டான் உலக வீதிகளின் ஆடை விலக்கி. குயவனுள் எழுந்த செறித்த வண்ணங்களை அப்பிக் கொண்டு கண்ணன்கள் தங்கள் கோகுலங்களில் ராதைகளைச் சிறை வைத்தனர். அவனின் வியர்வையை உள்ளிளுத்து வட்டம் தறித்த கலயக்கோடுகள் கண்ணன்களின் வயிறுகளுக்குப் பொங்கிப் போட அனுப்பப்பட்டன. கோகுலக்களிப்பின் மிகுதியில் மஞ்சள் சிவப்பு பச்சையென ராட்சசக் கண்ணன்கள் ஒன்று […]
மழை பெய்து கொண்டிருக்கிறது ரசித்துக் கொண்டிருக்கிறேன் நொறுக்குத் தீனியுடன்.. பாழாய்ப்போன மழை வெளியே செல்ல இயலவில்லை என்கின்றேன்.. தொலைபேசியில் அழைப்பவனிடம்.. நல்லது செய்யும் மனிதன் மட்டுமல்ல மழையும் சபிக்கப்படும் போல..