ஏனென்று தெரிய வில்லை

This entry is part 40 of 39 in the series 18 டிசம்பர் 2011

மூலம் : நோரா உதய ஷங்கர் ஜோன்ஸ் தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா  சூரியனை நோக்கும் வரைக் நான் காத்தி ருந்தேன் ! நீயேனோ வரவில்லை ஏனென நான் அறியேன் ! விட்டுச் சென்றேன் உன்னை வேடிக்கை விடுதியில் ! நீயேனோ வரவில்லை ஏனென நான் அறியேன் ! நீயேனோ வரவில்லை ஏனென நான் அறியேன் ! காலை விடிவதைக் கண்ணால் கண்டேன் ! பறந்தோட விழைந்தேன் கண்ணீர்த் துளிகளைக் கையேந்தி உன் முன்னால் மண்டியிடத் […]

பொருள்

This entry is part 37 of 39 in the series 18 டிசம்பர் 2011

பொருள்  கொண்டு  மனிதம் மதிப்பீடு  செய்யப்படும்  வழிமுறையை  பழக்கப்படுத்தி கொள்வதில்  இனி சிக்கல்  இருக்கபோவதில்லை. மற்றவர்களை  உதாரணம் கொண்டு  உருவாக்கப்படவில்லை  இந்நிலை.  ஒரு நீடித்த பகலில்  கைவிடப்பட்ட நம்பிக்கையை  சுமந்து கொண்டு  சுய நீர்மம் நிறைவில்  மனதின் அழுத்தங்களை  தாங்கி கொள்ள இயலாத நிலையில்  என்னையும் ஆட்கொண்டது  நாளை உங்களையும் தான் . இனி  உயிரினம் வாழ  நிர்பந்தங்களை  பட்டியல் கொண்டு  மன குற்றங்களை  மறைத்து மறந்து வாழவே  உசித்தம் . அது மிக எளிதான இயல்பு தான் .     […]

சுனாமியில்…

This entry is part 36 of 39 in the series 18 டிசம்பர் 2011

      வாழும் மனிதர்க்கிடையில் வரப்புக்கள்தான் அதிகம்.. சுற்றிலும் சுவர்கள்- ஜாதியாய் மதமாய், இனமாய் மொழியாய்.. இன்னும் பலவாய்… இணைத்தது இயற்கை- சாவில் ஒன்றாய்.. சவக்குழி ஒன்றாய்.. சுருட்டியது ஒன்றாய்… சுனாமியில் தொலைந்துபோன சொந்தங்களுடன் டிசம்பர்26…!             -செண்பக ஜெகதீசன்…

அன்பின் அரவம்

This entry is part 35 of 39 in the series 18 டிசம்பர் 2011

குமரி எஸ். நீலகண்டன்   யாரோ ஒருவருடன் சதா பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சுற்றி யாருமில்லை. அலைபேசியில்தான் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.   அல்லது யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். உற்று நோக்கி ஒருமித்தப் பார்வையுடன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சுற்றி யாருமில்லை. அலைபேசியுமில்லை.   குமரி எஸ். நீலகண்டன்

காதல் கொடை

This entry is part 34 of 39 in the series 18 டிசம்பர் 2011

—————வே.பிச்சுமணி என் காதலை உன் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் ஏற்றுகொள்வதும் ஏற்றுக்கொளளாததும் உன் இதயத்தின் முடிவில் மிஞ்சினால் மிதியடியாக பயன்படுத்து பிஞ்சி போனால் உன்னை சீண்டுபவரை சாத்தும் உன்பாதத்துடன் பழகி பழகி பரதன் மதிக்கும் இராமனின் பாதஅணிகளாக மாறி உன் மனது ஆளும் நேரம் மழை வரும் சிரமேற்கொண்டால் என் காதல் (கொ) குடையாகும்

வம்பளிப்புகள்

This entry is part 30 of 39 in the series 18 டிசம்பர் 2011

-தினேசுவரி, மலேசியா ‘அழிப்பு’க்கும் ‘அளிப்பு’க்கும் இடைவெளி அதிகம் இருப்பினும்.. அளித்து அழிப்பதற்கு இங்கு அழைப்பவர்களே அதிகம்…..   அன்பளிப்புகளில் மூழ்கிப்போக எப்படியோ கண்டுப்பிடித்து விடுகின்றனர் சில ‘வம்பளிப்புகளை’… வம்பாகி போகும் போது தெளிகிறது அளிப்புகளின் இறுதி வாசல் அழிப்பே என்று………   இருந்தும் ‘அளிப்பு’க்கும் ‘அழிப்பு’க்கும் இடைவெளி என்பது அதிகம் தான்…

வேறு ஒரு தளத்தில்…

This entry is part 29 of 39 in the series 18 டிசம்பர் 2011

– பா.சத்தியமோகன் வானில் பறக்கும் பறவையிடம் இரும்புப் பூட்டு ஒன்றைக் காட்டினேன் அது சிரித்துக் கொண்டே பறந்து விட்டது. தவழும் மழலையிடம் கூர் கத்தி ஒன்றை நீட்டினேன் மேலும் கலகலப்பானது. அப்போதுதான் பனியில் துளிர்த்த மலர்க்கொத்து ஒன்றிடம் என் துக்கக் கம்பியை விவரித்தேன் அதுவோ மலர்ச்சியை நிறுத்தவேயில்லை. எனது குளியலால் சிதறப்போகும் எறும்புகளிடம் அச்சத்தை விளக்கினேன் அவையோ சுறுசுறுப்புடன் உள்ளன நாளைய உலகம் நீருக்குத் தவிக்கும் எனும் மிரட்டலை ஓடிச்சென்று தாமரை ததும்பும் குளத்திடம் சொன்னால் அதன் […]

சந்தனப் பூ…..

This entry is part 28 of 39 in the series 18 டிசம்பர் 2011

பஞ்சு மனம் கொண்டவர்… வானத்தைச் சுருக்கி இதயத்துள் அடக்கி . ரணமனங்கள் கண்டெடுத்து மருந்திடும் மகத்துவம்..! புனிதம்  குணத்திலும் புண்ணியம்  மனதுள்ளும் ஒற்றைத் திரியாய் …நின்று.. ஏற்றும்  ஒளிச்சங்கிலிகள்..! புவியெங்கும் ஒளி  சேர்த்து.. இருளை துரத்திய தாயே..! கோடிக்கண்கள் தேடிடும்… யாவர் கால்களும் நாடிடும்.. வெள்ளை ரோஜா உம்மைப் போற்றித் துதிகள் பேசிடும்… என்றோ அரும்பிய இயக்கம் இன்றும் வாழும் அதிசயம்..! அன்புக் கரங்கள் ஏந்தி… கருணையால் துயர்துடைத்து… கனிவாய்  தெம்பளித்து.. தொட.. விலக்கியவரைத். தொட்டணைத்தீர்..! தேசியக் […]

மார்கழிப் பணி(பனி)

This entry is part 26 of 39 in the series 18 டிசம்பர் 2011

அஜய் குமார் கோஷ் அறந்தாங்கி பெண்பூக்கள் மாக்கோலமிட வருகிறது மார்கழி சிரிப்புக்களுடன் தெரு நிறைகிறது வருகிறது மார்கழி மெல்லிய பனியில் மனது நனைகிறது வருகிறது மார்கழி மரபின் ஈரம் காய்ந்து போய்விடவில்லை வருகிறது மார்கழி

என்னின் இரண்டாமவன்

This entry is part 24 of 39 in the series 18 டிசம்பர் 2011

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ சில் வண்டுகள் ரீங்காரமிடும் ஓர் இரவும் பகலுமற்ற இடைத்தருணத்தில் அவன் வருகையை தவிர்க்கவியல்வதில்லை மெல்லிய புகை தன் சூழ மிதக் குளிரினூடே ஏதோ ஒன்றைப் பகர நினைப்பதாய் அமர்வான் என்னருகாய்! மிக வலியதாய் பாதித்தலுக்குட்பட்ட அந்நாளுக்கான சில அவசியச் செய்திகளை அசைபோட்டுக் கிடப்பான் ஒன்றுமற்றுப் போன விஷயமொன்றிற்காய் யோசனையிட மெனக்கெடுவதாய் நடிப்பான் எப்படி இருந்திருக்கக் கூடாதென்றும் எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டுமென்றும் அறிவொழுகும் தன் தலை வழியாய் புத்தி சொல்லிக் கிடப்பான் சில கணங்கள் வரை […]