அப்பால்

அப்பால்

ஆர் வத்ஸலா உன் மௌன விலகல் கணக்கில்லா காலம் என்னை வதைத்தது துன்பத்தை துரத்த கோபத்திற்காக பிரார்த்தித்தேன் ஒவ்வொரு நொடியும் கோபம் செவி சாய்க்க மறுத்தது கோபத்தின் மேல் கோபமா கொள்ள முடியும்? வதைத்து வதைத்து  அலுத்தது துன்பம் பழக்கப்பட்ட துன்பம்…
வெளிச்சம்

வெளிச்சம்

வளவ. துரையன் இருளைக்கண்டுதான்  இங்கே எல்லாரும்  அச்சப்படுவார்கள். ஆனால் எனக்கோ அதிக வெளிச்சம்  தயக்கம் ஊட்டுகிறது. இருளுக்கு வெளிச்சத்தைக்  கொடுப்பதைவிட  வெளிச்சத்துக்கு இருள்  தருவது அரிதான ஒன்று. வெளிச்சத்தின் நிறம்  வெண்மை என்கிறார்கள். உற்றுப் பார்த்தால் அதன்  உள்ளே ஒளிந்திருக்கும்  எல்லாமும்…
இருத்தல் 

இருத்தல் 

ஆர் வத்ஸலா திருமணத்திற்கு முன்  அவசர அவசரமாக படித்த  சமையல் புத்தகங்கள்  மானத்தை வாங்கவே  மாமியாரிடம்  திட்டு வாங்கி  கற்றுக் கொண்ட முதல்  பாடம்  லட்டு செய்முறை கண் திட்டத்தில்  அரிசி மாவு  கடலை மாவு  சோடா உப்பு  சர்க்கரை கேசரி…
சமையலறை கவிதைகள் 

சமையலறை கவிதைகள் 

ஆர். வத்ஸலா 1. வடை மறைந்தும் மறையாத  மிளகுடன் வடை புரிந்தும் புரியாத  கவிதை போல 2  குக்கர் இரண்டு குக்கரும்  போட்டியிட்டன சன்னல் வெளியே  சதா கூவும் குயிலுடன் வென்று விடுமோ என அச்சத்தில் நான் 3. வடை -…

அச்சம் 

ஆர் வத்ஸலா நெருங்கி வருகிறது இன்னொரு நட்பு உனதளவு இல்லாவிட்டாலும் நிறைய அன்புடனும் அதேயளவு மதிப்புடனும் புரிந்துணர்வுடனும் கொசுருக்கு கதை கவிதை பற்றின  கருத்து பரிமாற்ற சாத்தியத்துடன் ஆனால் அச்சம் மனமூலையிலமர்ந்து பின்னுக்கு இழுக்கிறது என்னை உன் விலகலை நினைவூட்டி எனக்கும்தான்…

முரண்

ஆர் வத்ஸலா நான்கு வயதில்  முதல் சுதந்திர நாள் அன்று நடுநிசியில்  அப்பாவின் தோள் மேல் அமர்ந்து  தெரு நிறைந்த கூட்டத்தோடு  குட்டிக் குரலில்  ‘ஜெய்ஹிந்த்’ சொன்னது  நினைவிருக்கிறது ஆறு வயதில் பள்ளியிலிருந்து திரும்புகையில் வாத்தியார்  எழுதிய 'குட்'  மழையில் அழியாமலிருக்க …

வாடல்

வளவ. துரையன் ஒரு முழம் கூடவிற்கவில்லையெனபூப்போல வாடும்பூக்காரியின் முகம்கூடு கட்டஎந்தக் குச்ச்சியும்சரியில்லை எனத்தேடி அலையும் காக்கைஎலிகள் கிடைக்காததால்காக்கைக்கு வைத்தசோற்றைப் பார்க்கும்நகரத்துப் பூனைதிடீரென வந்த தூறலில்ஒதுங்க இடம்தேடும் தெரு நாய்ஆட்டோவில் அடைத்துஅழைத்துச் செல்லப்படும்நர்சரியின் மாணவர்கள்

அதே பாதை

_________________ எத்தனை நாள்தான்  ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறைதான்- தலை முடியை மாற்றி, மாற்றி, தாடிமீசையை மாற்றி, மாற்றி  ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறை பார்த்தாலும்  அதே மூஞ்சி, அதே கண்ணாடிதான். எத்தனை முறை நடந்தாலும்…

பஞ்சணை என்னசெய்யும்

      மனோந்திரா             (நொண்டிச் சிந்து) யாரெனக் கேட்டதற்கு - அவன் யாதொரு பதிலையும் சொல்லவில்லை பாரெனை என்பதுபோல் - அவன் பாவனை செய்வதாய் நானுணர்ந்தேன் கூரெனப் பார்வையினைத் - தீட்டி குறுகுறு என்றுநான் பார்த்திருக்க நீரென பூமியிலே - சரிந்து நிற்காமல் மண்ணிலே…

நிழற் கூத்து 

கு. அழகர்சாமி நீர் மலி தடாகத்தில் ஆம்பல்  இதழவிழ்ந்து மலர்ந்ததாய் அந்தியில்  இசை அலர்ந்து அறைக்குள்- அறை நடுவில் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியின் ஒளி மேனி சுடர்கிறது மெல்ல ஒளி இருளை வாய் மெல்ல- மின்விசிறியின் மென்காற்றின் உதடுகள் முத்தமிட ஆடும்…