சங்கமம்

நதியாய்ப் பெருகி கரைகளைப் புணர்ந்து புற்களையும் விருட்சங்களையும் பிரசவித்திருந்தாள். வரத்து வற்றிய கோடையிலும் நீர்க்காம்பைச் சப்பியபடி பருத்துக் கிடந்தன வெள்ளரிகள் கம்மாய்க்குள். காட்டுக் கொடிகளும் தூக்கணாங்குருவிகளும் குடக்கூலி கொடுக்காமல் வேடிக்கை பார்த்தபடி விலகிச் சென்றன அவளை விட்டு. வறண்ட கணவாயாக தூர்ந்திருந்த…

கனவுகள்

இரவு கருத்ததும் கலங்கரை விளக்காய் ஒளிவிடத் தொடங்குகின்றன இன்றைக்கான கனவுகள். ஒளிர்ந்த விளக்குகள் பிடறி சிலிர்க்கும் சவாரிக் குதிரைகளாய் காற்றில் பறக்கின்றன. ஆசைக்காற்றில் உப்பி வண்ண பலூன்களாகி பருக்கத் தொடங்குகின்றன கடல் மண்ணிலிருந்து. பலூன்களைப் பிடித்துச் செல்லும்போது பறக்கும் வெப்பக்காற்று பலூன்களாகி…

காரணமில்லா கடிவாளங்கள்

பெரு வட்டம் அதனுள் சிறுவட்டம் மீண்டும் உள்வட்டம் கருவட்டம் மையபுள்ளியாய் குறிபலகை ஒன்று.. மைதானத்தில் எவனோ நட்டுவிட்டான் வருவோர் போவோர் எல்லாம் மையத்தை நோக்கி எய்த ஆரம்பித்து விட்டனர் அம்பை.. பலகை வரை கூட செல்லாத , பெருவட்ட வளைவில் செருகிய…

அதுவும் அவையும்!

யாரங்கே என ஏய்த்துக்கொண்டிருந்தது அது பசுத்தோல் நம்பி மேய்ந்துகொண்டிருந்தன அவை பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டிக்கொண்டிருந்தது அது பாம்பென்று பயந்தும் மீனென்று வியந்தும் மாட்டிக்கொண்டிருந்தன யாதும் வாங்கமாட்டேன் வரதட்சனை யென விழித்துக்கொண்டது வாலிபம் வெள்ளையுஞ் சொள்ளையு மென வேட்டியுஞ் சட்டையுமோ…

நகரத்து மாங்காய்..

மாமரத்தில் ஏறி மெலிந்த கிளையைப் பிடித்து மயிரிழையில் தப்பித்து.. செவுனி எறும்புகளிடம் செமத்தியாய்க் கடிவாங்கி.. தோட்டக்காரன் தலையைப் பார்த்து தொடைநடுங்கி ஓடி.. கிடைத்த காயையெல்லாம் மடியில் கட்டி மாறாத கறையாக்கி வந்து.. மற்றவர்களுடன் மணக்க மணக்க பால் வடிய பக்குவமாய்ப் பல்லால்…

பேசித்தீர்த்தல்

சவ்வூடு பரவலின் விதிப்படி பரவுகிறது கோபமும் வெறுப்பும், அடர்ந்திருக்கும் இடத்திலிருந்து குறைந்திருக்கும் இடத்திற்கு, விழிக்குப் புலப்படா ஒரு படலத்தில் ஊடுருவி.. விதிமீறி கிழிகிறது அப்படலம் சில பரிமாற்றங்களில்.. பேசித்தீர்த்துக்கொள்ள எண்ணி முன்னேறுகிறேன்.. மனம்மாறி தீர்த்துப்பேசிடத் தோன்றுகிறது! ஒன்றுமில்லை இன்னும், தீர்ப்பதற்கு, தீர்ந்துபோய்விட்டது…
தெய்வத்திருமகள்

தெய்வத்திருமகள்

நான் வாழும் உலகத்துக்குள் மழையாய் நீ.... நீ வாழும் உலகத்துக்குள் மழலையாய் நான்.... வளர்ச்சி அற்று போனாலும் மகிழ்ச்சி உற்று போவேன் உன்னால்.. கள்ளம் இல்லை கபடம் இல்லை என் பாச முல்லை என் செல்ல பிள்ளை உன்னை தவிர எனக்கு…

வாசிக்கஇயலாதவர்களுக்கு

இன்றைய நாளிதழ் செய்தியில் நேற்று இறந்து இருந்தான் இன்று அதிகாலை வரை உயிரோடு இருந்தவன் வாசிக்க தொடங்கிய கணத்திலிருந்து சிறிது சிறிதாக இறக்க தொடங்கியிருந்தான் அன்றைய நாளிதழ் செய்திகளை அன்றைக்கே வாசிக்க இயலாதவர்களுக்காக இறந்தவன் மீண்டும் உயிர்த்தெழுகிறான். பின்னொரு நாளில் அவர்கள்அச்செய்தியை…

இதுவும் ஒரு சாபம்

செல்வாக்கால் வெளுக்கப்பட்ட மடிப்புக் கலையாத வெண்மை ஆடைக்குள் புகுந்த தலைவர்களால் நிரம்பியது குளிரூட்டப்பட்ட அரங்கு ரத்தக் கறை படிந்த பற்களும் அரிவாளாய் முறுக்கிய மீசைகளும் தங்களது அதிகாரத்தின் எல்லைகளை அளந்து கொண்டிருந்தன தங்களை குபேரன்கலாக்கிய குடிமகன்கள் இருக்கும்வரை பதவிக்குப் பங்கம் இல்லை…

பிரபஞ்ச ரகசியம்

மனம் தோன்றா காலத்தில் என்னிடம் பறிக்கப்பட்டுவிட்டது பிரபஞ்ச ரகசியம் . அதன் பிறகே பரிணாமம் அடைய விட்டிருக்கிறது காலம் . காண்கின்ற யாவற்றிலும் ரகசியங்களாக மாறுகிறது சுய தேடல்கள் . இந்த உயிரின் இறுதியும் இவ்வாறே இருக்க உலவ விட்டிருக்கிறது அந்த…