அவரைக்கொடிகள் இலவமாய்

இறுக்கங்களுடன் பயணித்து வந்தேன். எப்படி இறுக்கம் தூர்ப்பதென அறியாமல். வினைகளை அற்று வீழ விரும்பினேன். வகிர்ந்து வகிர்ந்து வார்த்தைகளைத் தூவினாய். அதைப்பிடித்துக் கொடியாக வளர்ந்தேன். அவரை கொடிபிடித்து மேகம் துளைத்துப் பாதை அமைத்ததாய் இன்னொரு உலகம் இழுத்துச் சென்றாய் வானவில்லைப் பற்றி…

வாய்ப்பு:-

என்னுடைய வாய்ப்பு அவளுக்கு வழங்கப்பட்டது நானே காரணமாயிருந்தேன் அதன் ஒவ்வொரு அசைவுக்கும். அவளை சிலாகித்தேன் அவளின் ஏக்கங்களை விவரித்தபடி. காற்றில் கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் புரவிப்பெண்ணாக அவள் உணரும் தருணங்களை.. ரேகைகளும் பாகைகளும் தொடாத அவளது ஆழிப்பேரலையான அனுபவத்தை விவரித்தபடி.…

குற்றங்கள்

குற்றத்தினை கையாள்வது மிகவும் அசாதரமானது ஆனாலும் அனைவரும் எளிதாக கடந்து விட கூடிய இயல்பாகி விட்டது . குற்றங்கள் எப்பொழுதும் தனித்து விடப்பட்ட தன்மையை பெற்றிருப்பதால் அதனை நீங்களும் நானும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . எந்தன் குற்றத்தினை உங்களின் குற்றங்களுடன் இப்பொழுது…

ஆர்வமழை

மழையில் எந்த மழை சிறந்தது? சிறு தூறலா, இல்லை அடித்துப்பிளக்கும் மழையா? வெறுமனே போக்குக்காட்டி விட்டு போகும் மழையா? அல்லது சிறிதும் எதிர்பார்க்காத கணத்தில் கிளையிலிருந்து சட்டெனப்பறந்து போகும் பறவை போல, தூறிக்கொண்டிருந்து விட்டு சட்டெனக்கலையும் மழையா? அல்லது நேற்றுப்பெய்த மழையா…

இரவின் அமைதியை அறுத்துப் பிளந்த பலி

இந்த பிரபஞ்சத்தில் கண்விழித்துப் பார்க்க மிக ஆவலோடு கருவறையில் காத்திருந்த அந்த குழந்தையின் புன்னகையைக் கூட வெட்டிவீசினாய் தொட்டில் சீலையான உம்மாவின் கவுணியில் தெறித்த ரத்தவாடையின் உறைதலில் நகர்கிறது நடுச் சாமம். சாம்பல் மிஞ்சிய இருப்பிடமெங்கும் தொடரும் கருகிய வேதனையின் வரைபடம்…

விட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் வீட்டு பூனை

அரிதான காட்சிதான்! விட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் ஒரு வீட்டு பூனை! என்னவெல்லாம் சாகசம் செய்கிறது! பாயும் புலியாக!  ஆடாமல் அசையாமல்! பதுங்கி பாய்ந்து! தாவிக்குதித்து!  தடம் பார்த்து! தீவிரமாய் திட்டம் தீட்டி! அடி மேல் அடி வைத்து! கிளைக்கு கிளை…

பயணத்தின் மஞ்சள் நிறம்..

* மதிய வெயில் கோடுகளாய் குறுக்கே விழுந்திருந்த ஒரு நடைப்பாதைப் பொழுது பயணத்தின் மஞ்சளை கரு நிழல் துரத்துவதை எண்ணியிராத ஓர் எறும்பு மரணத்தின் வடிவத்தை வாசித்துக் கொண்டிருந்த அரைக் கணத்தில் பட்டென்று ஸ்தம்பித்தது கால் கட்டை விரலுக்குக் கீழ் *****…

மீளா நிழல்

* கைப்பிசைந்து நிம்மதியிழக்க நேர்கிறது இப்பெரு அமைதியில் காலடி ஓசைகளின் அதிர்வில் நடுங்குகிறது நிற்கும் நிழல் ஒளி கசியும் ஜன்னல் திரையில் மடிந்து மடிந்து தொங்குகிறது மீளா துக்கம் கையெழுத்து இடச் சொன்ன படிவத்தில் உறுதி செய்து கேட்கிறார்கள் அவன் மரணத்தை…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இதயத்தின் இரகசியங்கள் (Secrets of the Heart) (கவிதை -46)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் இதயம் ஒன்றால் இப்போ துரைப்ப தெல்லாம் ஆயிரம் இதயம் சொல்லும் நாளைக்கு ! பிறக்க வில்லை நாளை ! இறந்து விட்டது நேற்று ! ஏன்…

நினைவுகளின் மறுபக்கம்

நிலாவையே நினைத்துக் கொண்டிருந்தேன். நிமிடங்கள் பறந்து போயிற்று.   குளிர்ச்சியாய் மனது குதூகலாமாயிற்று.   என்னைப் போல் அங்கும் நிலாவிலிருந்து யாரோ பூமியை நினைத்துக் கொண்டிருக்கலாம்.   பூமியின் வெப்பம் அவர்களின் மனதை வியர்க்க வைக்கலாம். மறைந்த பசுமை அவர்களின் மனதை…