நேற்று உன்னை சந்தித்துவிட்டு வந்த பிறகு வேலை ஓடவில்லை பார்க்கப்படவேண்டிய கோப்புகளெல்லாம் என்னைப் பார்த்துச் சிரித்தன சதா வண்டு ஒன்று மனதைக் குடைந்து கொண்டிருந்தது வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையே எப்படிப் பயணிக்கிறேன் எனக்கே தெரியவில்லை மைதானத்தில் உதைபடும் பந்தாய் ஏன் நானிருக்கிறேன் நேற்று வசந்தத்தைப் பரிசளித்த காதல் தான் இன்று வாழ்க்கையைப் பறித்துக் கொண்டது என்னை நானே வெறுக்கிறேன் எல்லாவற்றையும் மறக்கத்தான் போதையிலே மிதக்கிறேன் பணக்கட்டுகளை வீசி பெண்களை வாய் பிளக்க வைக்கிறேன் புனிதத்தின் மீது காறி […]
புத்தி செய்திகள் படிக்கிறது மனம் அங்கலாயிக்கிறது கேட்டபடி.. எனது வரவேற்பு அறையில். நான் இருவரையும் பார்த்தபடி, தேநீருக்கும் வழியில்லாத விருந்தாளி போல கண்கள் மூடினால் ஓய்கிறார்கள் திறந்தால் மறுபடியும் கூச்சல் ஏதொரு செய்தியுடன் ,விடாமல் !! தெரிந்தவர்களிடம் கேட்டேன்,சொன்னார்கள் – இருவரையும் கவனிக்கும் என்னையும் பார்த்து கொண்டிருப்பவரை கண்டு விட்டால், விருந்தே நடத்தி கொள்ளலாமென. வாயிற் கதவு திறந்துதானிருக்கிறது எப்போதெனும் வரகூடும் மூன்றாமவர். – சித்ரா (k_chithra@yahoo.com)
மேசைமீது ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களில் ஊர்ந்தேறிக் கொண்டிருந்தது வெயில் நுகருமொரு சொற்ப மரநிழல்.. நிழல் துப்பிய குளிருணர்வில் புத்தகங்கள் ஒன்றொன்றும் காந்தப்பிணைப்புடன் இறுக்கமடைய, கிழிசல்கள் வழி எழுத்துக்கள் சில வெப்பமொழியில் ஏதேதோ பிதற்றத் துவங்கின.. என் விரல் நீவிய புத்தகமொன்று தான் தானாகவும் தானே மீதமாகவும் இருக்க, அட்டைப்படத்தில் நிறைந்திருந்தனர் சிறுமிகள் சிலர்… அழுக்குச் சீருடையுடனும் நாணயச் சிரிப்புடனும்.. – தேனு [thenuthen@gmail.com]
நீந்திச் செல்லும் பறவையொன்று அகால வெளியின் எல்லைகளினூடே சிறிதும் களைப்பற்று காற்று எழுதிச் செல்லும் வரிகளைக் கேட்டு மிதந்து திரும்பவும் சிறகாகும் இதயம். விரல்கள் எழுதிய ஓவியம் திரைமீறும் எதிரில்வந்து பேசியது ஓவியப் பறவை நிஜம் எதுவென அறியாத கணங்களில் குழம்பித்தவித்த மனசு ஆதிக்குழந்தையானது. நிலாமூட்டில் தோன்றி வழிதவறிய ஒற்றை நட்சத்திரம் விவாதம் தொடர்ந்தது. வெகுநேரம் ஆகியும் இரவு விடியாதது பற்றி இருளுக்குள் நீந்திச் சென்றது பறவை இரவும் இருளும் நிரந்தரமாக விவாதம் தொடர்கிறது. நேற்றின் மடி […]
மண்ணில் மீண்டும் முளைக்க புதைத்த பற்கள் விண்ணில் மிளிரும் வின்மின்களாய் ஒளிருது உன்னிடம் கதையாய் சொன்ன என்மனம் மண்ணில் உன்னை புதைத்து விட்டு விண்ணில் தேட அறிவு மறுக்குது இன்பங்கள் கனமாகின்றன துன்பங்கள் எளிதாகின்றன ஏழு வயதில் மறைந்த பெண்ணை இருபது வயதில் வரைய வண்ணமில்லை தடைபட்ட கனவுகள் எப்படி தொடர்ந்திருக்கும் ஊகிக்க வழிதெரியாமல் திண்டாடும் மன ஆடுகள் திண்டாட்டம் கடை நாளில்தான் தீருமென தெரிந்தும் வயற்றில் உள்ள கனத்தை நினைவில் அசை போடும் ஆட்டு விக்கும் மனம் ve.pitchumani
திருந்த செய் பிழைகளெல்லாம் பழைய பித்தளை பாத்திர துளைகள் திருத்தங்கள் ளெனும் ஈயம் பார்த்து அடைத்தல் சிஷ்டம் முலாம் பூசி மறைத்தல் கஷ்டம் அம்மா மழை கொட்டி மலை சொட்டும் அருவியாய் நிலம் தொட்டு கடலெட்டும் நதிகளாய் கடன் பட்டும் தயை காட்டும் அம்மா
‘வேறு எந்தக் கடனும் இப்போது இல்லை.’ புதுக் கடனுக்கு விண்ணப்பிக்க வந்த இடத்தில் வங்கி மேலாளர் கேட்கும் முன்னரே சொன்னான். முந்தைய கடன்களை காலத்தே அடைத்ததற்கான நற்சான்றிதழ்களை பெருமையுடன் முன் வைத்தான். சிணுங்கியது அலைபேசி ‘அப்பா எனக்கு நீ பத்து ரூவா தரணும்’ அறிவித்தாள் அன்பு மகள்.. முன் தினம் கடற்கரையில் கடலை வாங்க சில்லறை இல்லாத போது தன் குட்டிப் பையைக் குலுக்கித்தேடி எடுத்துத்தந்த இரு ஐந்து ரூபாய் நாணயங்களை நினைவூட்டி. *** -ராமலக்ஷ்மி
நள்ளிரவில் கனவு வந்தது சிறு இடைவேளைக்குப்பிறகு மீண்டும் தொடருமென்றது. எப்படி நிகழந்தது என்று தெரியவில்லை. தெரிந்த பிறகும் நிகழந்தது அது. ஆடிய தாண்டவம் ஒய்ந்து பாதங்கள் சிவக்க,வலிக்க நடனத்திலிருந்து நடைக்கு மாறுகிறார் நட ராசர். ரவி உதயன்
நேர் பார்வைக்குக் குறுக்கீடென ஒரு வலிய திரை ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று பசப்பு வரிகளைக் கொண்ட பாடல்களை இசைத்தபோதும் வெறித்த பார்வையோடு தான் துயருறுவதாகச் சொன்ன போதும் பொய்யெனத் தோன்றவில்லை ஏமாறியவளுக்கு இருள் வனத்திலொரு ஒளியென அவனைக் கண்டாள் புகைப்படச் சட்டங்களுக்குள்ளிருந்து நீண்டன வாழ்வு கொடுப்பதாகச் சொன்ன அவனது கைகள் ஒலிக் கோப்புகளிலிருந்து வழிந்தன தூரத்திலிருந்து அவனளித்த உத்தரவாதங்கள் அவளது கைகளைப் பிணைத்திருந்தது அவனிட்ட மாயச் சங்கிலி விலங்கிடப்பட்ட பறவையென காலடியில் வீழ்ந்துகிடந்தாள் […]
இயற்றப்படும் இந்த பிரபஞ்ச நிகழ்வில் நீங்களும் ஒரு இயக்கம் . இப்பொழுதே இதுவரையிலும் இல்லாத தன் விடுதலை உணர்வை தேடுவதை போல இதில் இருந்து விலகி ஓட ஆயுத்தமாகுகிறிர்கள். இதுவும் கூட அந்த இயக்கத்தின் சார்பானது என அறியாமலே அறியாமையில் மிதங்குகிறிர்கள். தற்சமயம் உங்களின் அனுமதி இல்லாமல் இதில் எதுவுமே திணிக்கப்படவில்லை. இதன் பொருளும் உணர்வும் இன்னுமும் முக்கியமாக்கவில்லை உங்கள் எண்ணங்களின் மீது வீற்றிருக்கும் அமைவு உங்களை பரிசோதிக்க காத்திருக்கிறது . அதன் கேள்விகளும் பதில்களும் நிறைவு தன்மை அற்றவையாக […]