மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நான் அவனுக்குக் கிண்ணம் நிறைய ஆனந்தத்தை அளித்தேன். ஆனால் அவனோ அதைத் தரையில் கொட்டி விட்டான், அவனது அறியாமையால் ! பிறகு இருள் தேவதைகள் அந்தக் கிண்ணத்தில் சோக மதுவை நிரப்பினர். அதை அவன் அருந்தி ஓர் குடிகாரனாய் மாறினான்.” கலில் கிப்ரான். (The Goddess of Fantasy) ++++++++++++++++ ஞானமுள்ள மனிதன் […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இசை அரங்குக் குழுவில் எல்லோ ரையும் விட அதிட்ட வாதி யார் ? நாணல் தட்டை தான் ! அதன் வாய் உன்னிதழ் களைத் தொடும் இன்னிசை கற்றுக் கொள்ள ! கன்னல் இலைகள் போல் எல்லா இலைகளும் இந்த வாய்ப்பு தனையே எண்ணிக் கொள்ளும் ! பல்வேறு வழிகளில் எல்லாப் புறத்திலும் கரும்புத் தண்டுகள் அசைந்தாடும் காற்றினிலே […]
என்னை சுற்றி அடுக்கு அடுக்காய் வரிசை கிரமத்தில் புள்ளிகள். கோலம் துவங்கும் நேரத்தில் புள்ளிகள் நகர்கின்றன.. மத்திய புள்ளியாகிய நானும் அடுத்த அடுக்குக்கு,பக்க அடுக்குக்கு கீழ் அடுக்கின் கடைபுள்ளியாகி கோல பலகையிலிருந்து விழுவோமோ என்ற அச்சத்திலிருந்து மீண்டும் நேர்வாட்டில் குறுக்கு வாட்டில்,மேல் அடுக்கு என நகர்ந்து கொண்டே இருக்கிறேன் .. நகர்கிற புள்ளிகளில் கோலமாவது ,ஒண்ணாவது? அசந்து விட்ட நேரத்தில் புரிந்தது – புள்ளிகள் நகர்கையில் மாறி மாறி […]
நகர போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி நகர அனுமதிக்கும் விளக்கின் பச்சைக்காகக் காத்திருக்கயில்… பல வேலை நிமித்தம் சிலர் சாலை கடந்தனர்! கடந்தவர்களில் ஆண்களோ அலைபேசி அடிமைகளாய் தலை சாய்த்து முடங்கி நடக்க பெண்களில் பத்துக்கு எட்டுபேர் எதையாவது சுமந்துகொண்டே நடந்து கடந்தனர்… தோல்பை கைப்பை பணப்பை வழவழ காகிதத்தில் தடிநூல் பிடிகொண்டபை மினுக்கும் அலைபேசிப்பை ஒருமுறை பிரயோகத்திற்கான பாலித்தீன் பை என எதையாவது சுமந்துகொண்டு… எஞ்சிய இருவரும்கூட கர்ப்பினிப் பெண்டிர்! […]
01 பள்ளிப் பேருந்துக்கு வழியனுப்ப யாரும் வராத இன்னொருவனைக் காட்டி எப்போதிருந்து நானும் அப்படிப் போவேனென்று கேட்ட மகனுக்கு எப்படி சொல்ல எனக்கு மட்டும் தெரியும் அவன் கண்களின் ஏக்கத்தை. O 02 தவறுதலாய் நான் அழுத்திய தளத்தின் எண் தனக்கானது என்று புன்சிரிப்போடு ஒருவருடன் போக நேர்ந்த லிப்ட் பயணம் போல தானாய் இப்படி எல்லாமே தவறுகளின்றி நேருமானால்… o
கட்டங்கள் வரைந்து சொற்களை உள்ளே இட்டேன் அவற்றுக்குள் தொடர்பு ஏற்படுத்த கோடுகள் இழுத்தேன் கட்டங்கள் ஒன்றோடொன்று இணைந்தன சொற்கள் அடைபட்டுப்போய் பேச மறுத்தன கட்டங்களை நீக்கி விட்டு சொற்களையும் கோடுகளையும் இணைத்து விடலாம் என எண்ணினேன் கட்டி வைத்த சொற்களும், இணைக்க இழுத்த கோடுகளும், ஒட்ட மறுத்தன மீண்டும் கட்டங்களை வரைந்தபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. கட்டங்களும், இணைப்புக்கோடுகளும் ஒரு சேரக்காணாமல் போயின எஞ்சிய சொற்கள் என்னைக்கேலி செய்து கொண்டிருந்தன. – சின்னப்பயல் ( chinnappayal@gmail.com […]
நல்லா செழித்து வளர்ந்துடுச்சு இந்தத் தலவாசல் வேப்ப மரம் .. போன வருஷம் மழை இல்லாமக் காஞ்சு கிடந்துச்சு இது தான் போக்கிடம் எனக்கும் மேக்காலவளவு குப்புசாமிக்கும் … மோட்டுவளைய பாத்துகிட்டு எவ்ளோ நேரம்தான் கட்டயக் கிடத்துறது ? ஆடுகன்னுகளப் பட்டில அடைச்சதுக்கப்பறம் வூடு தாவாரம் இறங்கிப் போச்சு .. இனி ஓடு மேஞ்சென்ன ஆகப் போகுது ? அந்த தாழ்வாரத்துல கொறஞ்சது எழுவது பேர் உக்காந்து சாப்பிட்டது கண்ணுக்குள்ள நெனப்பா வருது இருவத்தஞ்சு படி அரிசி போட்டு […]
(இது வெறும் கற்பனை மட்டுமே. இருந்தோர், இறந்தோர் அல்லது இறக்கவிருப்போர் எவரையும் குறிப்பிடுவது அல்ல) எல்லோரையும் போலவே ஒருநாள் சின்னாண்டியும் செத்துப் போனார். அல்லோகலப்பட்டது புழுதிக்காடு. செத்த சின்னாண்டி, சிலபேருக்குத் தலைவர் பலபேருக்குப் பகைவர். பெயருக்கு நேரெதிராக பெரும் பணக்காரர். புழுதிக்காட்டின் பாதி அவருடையது. மீதியும் அவருடையதே என்பது பொதுஜன அறிவு. புண்ணாக்கு விற்றே புழுதிக்காட்டை வளைத்ததாக அன்னார் சின்னாண்டி அடிக்கடி சிலாகிப்பார். இதில், எள்ளுப் புண்ணாக்கு விற்றவரெல்லாம் ஏழைகளாய் […]
பிரக்ஞையற்று திரிந்தலைந்த கிரெளஞ்சப் பட்சியொன்று மனவெளியில் தரையிறங்கியது மிச்சமிருக்கும் வதைகளின் பொருட்டு தீரா வேட்கையுடன் உயிர்த்தலின் ஆதாரத்தை அலைகிழிக்கின்றது கூர்ந்த நகங்களால்…. காலாதி காலங்களாய் தொடர்ந்த மெளனம் களைந்தெறிந்து ஊழியின் உருவமாய் மெய் சிவந்து நின்றேன் எதிர்கொள்ளவியலாது சிறகின் தூவிகள் பொசுங்க ரத்தமும் மாம்சமும் கருக வெந்தொழிந்தது….. — சக்தி
ஒளியூட்டப் போகிறோமா எரியூட்டப் போகிறோமா என அறிவதில்லை பற்றவைக்கப்படும் தீக்குச்சிகள்.. ************************************************** புழுவைப் போல உள்நுழைந்து பத்து மாத உறக்கம்.. கொடி வழி உணவு கூட்டுக்குள்… இறக்கைகளைப் போல கை கால்கள் முளைத்ததும் உந்திப் பறந்தது கூடை விட்டு .. குழந்தையாய்.. ***************************************************** உடல் எனும் உடைக்குள் கைதிகள் விடுதலையை எதிர்நோக்கி.. ***************************************************** பொம்மைப் பாசம்.:- *************************** அவள் மடியமர்ந்து போகேமான் பார்த்ததும் அங்கிள் சிப்ஸ்., நூடுல்ஸ் உதட்டில் ருசித்ததும் ., தூங்கும் போதும் கால் மேல் […]