புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் – 2

This entry is part 30 of 40 in the series 12 பிப்ரவரி 2012

(கட்டுரை -2) (பிப்ரவரி 10, 2012) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா இன்று அமெரிக்க அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (US Nuclear Regulatory Commission) ஜியார்ஜியாவில்  வெஸ்டிங்கவுஸ் மாடல் AP-1000 என்னும் இரண்டு புதுயுக 1150 MWe அணுமின் நிலையத்தை நிறுவ அனுமதி அளித்துள்ளது.    அவை 2016-2017 ஆண்டுகலில் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.   இந்த  மகத்தான வெற்றி  ஜியார்ஜியா பவர் கம்பேனிக் கும், தென்பகுதி பவர் கம்பேனிக்கும் மற்ற அணுவியல் தொழிற்சாலைக் […]

”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” எழுதியவர் ஸ்ரீநிவாஸ். ஓவியர் ஜெ. பிரபாகர்.

This entry is part 29 of 40 in the series 12 பிப்ரவரி 2012

”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” என்ற நூல் படித்தேன். நாம் சாதாரணமாக சென்று அவசரம் அவசரமாக ஒரு சரித்திரச் சின்னத்தைப் பார்த்து வருகிறோம். அதற்கு எல்லாம் இப்படி ஒரு வழிகாட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே எனத் தோன்றச் செய்த நூல் இது. இது தங்கத்தாமரை பதிப்பகம் வெளியீடு ( சுபா — எழுத்தாளர்கள் சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணனுடைய பதிப்பகம்). இந்நூலை வடிவமைத்தவர் பா. கணேஷ். மிக அருமையான வடிவமைப்பு. இந்த மாதிரி ஓவியங்களோடு கூடிய […]

மாதா+ பிதா +குரு < கொலைவெறி

This entry is part 25 of 40 in the series 12 பிப்ரவரி 2012

ஒரு 15 வயது நிரம்பாத மாணவன் தனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் ஊடகங்களுக்கு வேண்டுமானால் திடுக்கிடும் செய்தியாக இருக்கலாம். ஆனால் சமூக ஆர்வலர்களுக்கு இந்தச் செய்தி சமூக அவலங்களின் எதிரொலி. ஓர் அபாயச்சங்கு. இந்தச் செய்தியின் இரண்டு பக்கங்களையும் பார்த்தாக வேண்டும். ஆசிரியரைக் கொலை செய்ய நினைத்ததே தவறுதான். மன்னிக்க முடியாதக் குற்றம் தான். ஆனால் இந்த விபரீத முடிவெடுக்க அவன் மட்டும் தான் காரணமா? உண்மையான குற்றவாளிகள் யார்? *பள்ளி நிர்வாகம்* […]

மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி – பகுதி 3

This entry is part 15 of 40 in the series 12 பிப்ரவரி 2012

மாயன் இனிவரும் புது எண்ணங்களை சேகரிக்காமல் இருப்பது என்பதில் ஒரு கேலிக்கூத்து இருக்கிறது. எண்ணங்களில் புதுசு என்பதே இல்லை. அது தொடர்ச்சியாகவே இயங்கும் தன்மை கொண்டது. அதனால் அவை பழசின் பாதையிலேயே வருகிற எண்ணங்களாக இருக்கும். ஆக வருவது எல்லாமே பழையவைகளின் ஒரு புது தோற்றமே. வெகு அபூர்வமாகவே, வெகு வெகு அபூர்வமாகவே மனம் தன் தடத்தை விட்டு நிச்சலனமாக இருந்து பின்னர் வேறு தடத்தில் இருக்கும்போது இந்த வாழ்வில் புது சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. மற்றபடி […]

நினைவுகளின் சுவட்டில் – (85)

This entry is part 8 of 40 in the series 12 பிப்ரவரி 2012

புர்லாவுக்கு வந்த பிறகு (1951) தான் தினசரி பத்திரிகை படிப்பது என்ற பழக்கம் ஏற்பட்டது. அதாவது ஆங்கில தினசரிப் பத்திரிக்கை. தினசரிப் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் கும்பகோணத்திலேயே, மகாமகக் குளத்தெருவில் குடியிருந்து படித்த காலத்தில் ஆரம்பித்தது என்றாலும் அது பக்கத்துத் தெருவில் இருந்த திராவிட கழக ரீடிங் ரூமுக்கு பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டதிலிருந்து தொடங்கியது. அது திராவிட கழகப் பத்திரிகைகளுக்கிடையே கிடந்த விடுதலையையும் படிக்கத் தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட பழக்கம். திராவிட கழக படிப்பகத்தில் அப்போது வந்து […]

‘ஜான் மார்டெலி’ன் (Yann Martel) ‘பை’யின் வாழ்வு (Life Of Pi)!

This entry is part 6 of 40 in the series 12 பிப்ரவரி 2012

கனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் ‘பை’யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய ‘புக்கர்’ விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் விருதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல் ஐந்து தடவைகள் பிரித்தானிய பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நான் வாசித்த நாவல்களில் மட்டுமல்ல, இதுவரையில் […]

பேஸ்புக் பயன்பாடுகள் – 2

This entry is part 5 of 40 in the series 12 பிப்ரவரி 2012

“கீதா.. இன்னிக்கு ராதாவுக்குப் பிறந்த நாள். ஞாபகம் இருக்கிறதா?” “எனக்கு ஞாபகம் இருக்கவில்லை.. ஆனால் தெரியும்..” “என்ன சொல்லறே.. புரியலையே!” “எனக்கு அவள் பிறந்த நாள் இன்று என்பது ஞாபகம் இல்லை. ஆனால் இன்று என்பதை பேஸ்புக் மூலமாக தெரிந்து கொண்டேன். இப்போ புரியதா?” “அப்படியா? அவளுக்கு என்ன பரிசு தரலாம்?” “நான் பரிசும் கொடுத்துட்டேன்..” “கொடுத்துட்டியா? என்னை விட்டுட்டியே?” “பைசா செலவில்லாமே.. பரிசை அனுப்பிட்டேன். நீயும் பரிசு கொடுக்கலாம்..” “என்னது செலவில்லாமையா? அப்படி என்ன பரிசு?” […]

இந்த வார நூலகம்

This entry is part 4 of 40 in the series 12 பிப்ரவரி 2012

உயிர்மையின் பிப்ரவரி இதழைக் கண்ணுறும் வேளை கிட்டியது. எஸ். ராமகிருஷ்ணனின் தொடர் கட்டுரை சுவாரஸ்யமாக இருந்தது. இந்திப் படங்களைப் பற்றி எழுதிவிட்டு, ‘ஏழை படுத்தும் பாடு, தமிழ் திரைப்படத்தைப் பற்றி விரிவாக எழுதி உள்ளார். பயனுள்ள விசயங்கள். இந்தி திலீப் குமாரின் கண்கள், காதல் காட்சிகளில் பேசும் என்று கமலஹாசன் சொன்னதாகத் தகவல். திலீப்குமாரின் கண்கள் பேசினால், நம்மூர் சிவாஜியின் ஒவ்வொரு அங்கங்களுமே பேசுமே! ஊட்டி வரை உறவு பாடல் (ஹேப்பி இன்று முதல் ஹேப்பி ) […]

அள்ளிக்கொண்டுபோன மரணம் – தி.சு.சதாசிவம் – அஞ்சலிக்குறிப்புகள்

This entry is part 3 of 40 in the series 12 பிப்ரவரி 2012

எண்பதுகளின் பிற்பகுதியில் கொப்பள என்ற ஊரிலிருந்து கதக் என்னும் ஊர்வரைக்கும் கேபிள் புதைக்கும் வேலைக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன். இரண்டு ஊர்களுக்கும் இடையில் லக்குண்டி என்னும் சிற்றூர் இருக்கிறது. பருத்தியும் சோளமும் விளையும் கரிசல் மண்ணைக் கொண்ட சிற்றூர். ஊருக்கு நடுவில் அழகான ஏரியொன்றும் சமணக்கோவில் ஒன்றும் உண்டு. அதையொட்டித்தான் நாங்கள் எங்களுடைய கூடாரத்தை அமைத்திருந்தோம். பொழுது சாய்ந்தபிறகுதான் வேலையிலிருந்து திரும்புவோம். பிறகு ஒரு குளியல். அதற்கப்புறம் நண்பர்களோடு பேசியபடியே ஒரு நடை. எளிய இரவு உணவு. […]

கல்விச்சாலை

This entry is part 1 of 40 in the series 12 பிப்ரவரி 2012

செந்தூர்புரத்திலுள்ள உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர் ‘எடக்கு’ முருகேசனைக் கைது செய்து விட்டார்கள். அவர் என்ன வெடிகுண்டா வைத்திருந்தார்? இல்லை, தீவிரவாதி களுக்கு துணை போனாரா? எதுவும் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாததால், எட்டாப்பு பிள்ளைகளை வைத்து, தார்சாலையில், மர நிழலில், இயற்கைச் சூழலில், வகுப்பு எடுத்து விட்டார். அரசின் கவனம் தம் பள்ளியின் மேல் திரும்பும் என்றெல்லாம் அவர் எண்ணி அப்படி செயல்படவில்லை. பின் என்னதான் காரணம்? காலைப் செய்தித்தாளைப் பிரித்தவுடன், படித்த செய்திதான், அவரை அப்படி செய்யத் […]