இஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்

This entry is part 22 of 31 in the series 19 பிப்ரவரி 2012

முனைவர் ந.முத்துமோகனின் மார்க்சிய உரையாடல்கள் 1254 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு நூல். பெருங்கதையாடல்போல் உடனடிப் பார்வைக்கு குறுக்கும் நெடுக்குமாக விவாதங்கள் அலைபாயும் ஒரு கலைக்களஞ்சியமாக உருவாகி உள்ளது. முத்துமோகனின் ஆய்வியல் பயணத்தில் இந்தியத்தத்துவமரபு, ஐரோப்பியத்துவ மரபு, தமிழ்தத்துவமரபு ஊடாட்டம் கொள்கின்றன. எமிலிதர்கைமும், மாக்ஸ்வேபரும் மதம்பற்றி பேசியதை உரையாடல் செய்கின்றன. தத்துவங்கள், மதங்கள், அமைப்பியல், பின்நவீனத்துவம், பின்காலனியம் சார்ந்த விவாதங்களை மார்க்ஸிய பின்புலத்தோடு வாசகனிடத்தில் உரையாட முன்வருகின்றன. எதிர்க்கதையாடல்களின் ஒலிகளை தன்னுள் நிரப்பி வைத்த எழுத்து உண்மை, […]

தற்கொலையிலிருந்து கொலைக்கு …

This entry is part 21 of 31 in the series 19 பிப்ரவரி 2012

மாணவத் தற்கொலைகள் தினப்படி செய்தியாகி விட்ட நிலையில் கேள்விப்படும் ஒவ்வொருவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன் ஆசிரியையை கத்தியால் பலமுறைக் குத்து கொன்ற சம்பவம். யார் காரணம் ? யாரின் பங்கு அதிகம்? பள்ளி நிர்வாகமா, பெற்றோரா, ஆசிரியரா ? என்று திரும்பத் திரும்ப பலராலும் பேசப்பட்டு வரும் விஷயம். மூன்று பெண்களுக்குப் பிறகு பிறந்த செல்ல ஆண் பிள்ளையாக தினம் நூறு ரூபாய் கையில் எடுத்து வரும் ஒரு […]

இன்றைய பள்ளிக் கல்வி முறையும் ஒரு வகுப்பறைக் கொலையும்

This entry is part 18 of 31 in the series 19 பிப்ரவரி 2012

கு.அழகர்சாமி சென்னைப் பள்ளியொன்றில் பதினைந்து வயது கூட முழுமையடையாத ஒரு மாணவன் தன் பள்ளி ஆசிரியையைக் குத்தி கொலை செய்தது அதிர்ச்சியாகவும் துயரமாகவும் இருக்கிறது. நம் கலாச்சாரச் சூழலில் எப்படி இது நடந்தது என்ற தொனியும் அதில் இருக்கிறது. தன் பாடத்தில் சரியாகத் தேர்ச்சி பெறாத மாணவனின் டயரியில் தன் ஆசிரியை எழுதிய குறிப்புகளின் மேல் ஆத்திரப்பட்டு மாணவன் இந்தக் கொலைச் செயலை நடத்தியிருக்கிறான். ஏன் நடந்தது  இது? என்ற கேள்வி எல்லோருடைய மனத்திலும் உருத்துகிறது. அது […]

அகில நாடுகளில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?

This entry is part 17 of 31 in the series 19 பிப்ரவரி 2012

    முன்னுரை:  இருபதாம் நூற்றாண்டு தொழிற் புரட்சியிலே உலக நாடுகளில் எழுந்த ஆயிரக் கணக்கான இரசாயன தொழிற்சாலைகள் & நூற்றுக் கணக்கான அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றில் வெளியாகும் திரவ, கடின, வாயுக் கழிவுகளின்றி அவை தொடர்ந்து இயங்க முடிவதில்லை.  அந்த யந்திர இயக்க உற்பத்திக் கூடங்கள் டிசைன் ஆகும் போதே அவற்றின் கழிவுகளைச் சூழ்வெளிப் பாதக விளைவு களின்றி எப்படிப் பாதுகாப்பாய்க் கையாளுவது, கண்காணிப்பது, புதைப்பது என்ற விளக்கமான வினை முறைகளும் தயாரிக்கப் பட வேண்டும்.  […]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 31

This entry is part 14 of 31 in the series 19 பிப்ரவரி 2012

“காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். “பீட்ஸ்” என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் “பிரான்ஸிஸ்கோ மறுமலர்ச்சி ” என்னும் புதுக்கவிதை எழுச்சிக்காலத்தில் ஒரு முக்கியமான முன்னோடி. புலிட்ஸர் பரிசைப் பெற்ற இவர் இருபதாம் நூற்றாண்டின் மிகப் பிரசித்தி பெற்ற “ஸுஸுகி” என்னும் ஜென் சிந்தனையாளரால் ஈர்க்கப் பட்டவர். இவரது கவிதைகளில் சில ஒரு மேற்கத்தியரின் ஜென் பற்றிய புரிதலாகக் காணக் கிடைக்கின்றன. ஸ்னைடர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த […]

கலங்கரை விளக்கு

This entry is part 11 of 31 in the series 19 பிப்ரவரி 2012

இந்தியாவின் கல்விக்கொள்கை பல மாறுதல்களுக்கு உட்பட்டது. நாம், இன்றும் மெக்கலெ ராஜாபாட்டையில் செல்கின்றோம். இந்த பாடத்திட்டத்தில்,நல்ல கண்க்கு பிள்ளைகளை, தெளிவற்ற வாத்யார்களை,கேள்விக்கேட்காத அலுவலர்களை உருவாக்கமுடியும். இதையெல்லாம் மீறி, சில நேரங்களில், சிந்தானாவாதிகள், விஞ்ஞானிகள்,எழுத்தாளர்கள் தோன்றிவிடுகின்றனர். இவர்கள்தான், நமது கலாச்சார – இலக்கைய சுவடுகளை காப்பாற்றி வருபவர்கள். இதையும் காசாக்க பலர் முற்ப்பட்டு, அதுவும் பாழாகிபோனகதை பல இன்று ச்மூகத்தில் உலவிவருகின்றது. இந்த நூற்றாண்டில் தோன்றிய ஒரு கணித மேதையை ( ராமானுஜம்), கும்பகோணத்து வாத்தியார்கள் கண்டுக்கொள்ளவில்லை. அவர் […]

நினைவுகளின் சுவட்டில் – 86

This entry is part 3 of 31 in the series 19 பிப்ரவரி 2012

நான் Illustrated Weekly of India வுடன் பரிச்சயம் கொண்டிருந்த காலத்தில் அதற்கு C.R.Mandy என்பவர் ஆசிரியராக இருந்தார். அதன் பெயருக்கு ஏற்பவே எந்தக் கட்டுரையானாலும் நிறைய படங்கள் உடன் பிரசுரமாகி இருக்கும். படங்கள் இல்லாத பக்கமோ கட்டுரையோ அதில் பார்க்கமுடியாது. நான் வாங்கத் தொடங்கிய போது அது 12 அணாவுக்கு விற்று வந்தது. 12 அணா என்பது முக்கால் ரூபாய். படம் என்றதும் ஓவியங்களின் கலர் பதிவுகளையும் முக்கிய மாகச் சொல்ல வேண்டும். நான் 1950 […]

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 9

This entry is part 40 of 40 in the series 12 பிப்ரவரி 2012

இஸ்லாமிய வழியில் வந்த மத ஸ்தாபகர்களில் ஒருவராக பஹாவுல்லா அவர்களை முன்பு பார்த்தோம். இந்த வாரம் இந்தியாவில் பிறந்து இஸ்லாமில் ஒரு பிரிவாகவே தொடர விரும்பும் அஹ்மதியா பிரிவை தோற்றுவித்த மிர்ஸா குலாம் அஹ்மது அவர்களை பார்க்கலாம். இஸ்லாமில் நிறைய பிரிவுகள் இருந்தாலும் இரண்டு மிக முக்கியமான பிரிவுகளாக ஷியா பிரிவையும் சுன்னி பிரிவையும் குறிப்பிடலாம். இதற்கு முக்கிய காரணம் இந்த பிரிவுகளே சரியான பிரிவுகள் என்று கருதும் அரசாங்கங்கள் ஆட்சியில் இருப்பதே. அரேபியாவை ஆளும் சவுதி […]

புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் – 2

This entry is part 30 of 40 in the series 12 பிப்ரவரி 2012

(கட்டுரை -2) (பிப்ரவரி 10, 2012) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா இன்று அமெரிக்க அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (US Nuclear Regulatory Commission) ஜியார்ஜியாவில்  வெஸ்டிங்கவுஸ் மாடல் AP-1000 என்னும் இரண்டு புதுயுக 1150 MWe அணுமின் நிலையத்தை நிறுவ அனுமதி அளித்துள்ளது.    அவை 2016-2017 ஆண்டுகலில் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.   இந்த  மகத்தான வெற்றி  ஜியார்ஜியா பவர் கம்பேனிக் கும், தென்பகுதி பவர் கம்பேனிக்கும் மற்ற அணுவியல் தொழிற்சாலைக் […]

”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” எழுதியவர் ஸ்ரீநிவாஸ். ஓவியர் ஜெ. பிரபாகர்.

This entry is part 29 of 40 in the series 12 பிப்ரவரி 2012

”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” என்ற நூல் படித்தேன். நாம் சாதாரணமாக சென்று அவசரம் அவசரமாக ஒரு சரித்திரச் சின்னத்தைப் பார்த்து வருகிறோம். அதற்கு எல்லாம் இப்படி ஒரு வழிகாட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே எனத் தோன்றச் செய்த நூல் இது. இது தங்கத்தாமரை பதிப்பகம் வெளியீடு ( சுபா — எழுத்தாளர்கள் சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணனுடைய பதிப்பகம்). இந்நூலை வடிவமைத்தவர் பா. கணேஷ். மிக அருமையான வடிவமைப்பு. இந்த மாதிரி ஓவியங்களோடு கூடிய […]