இராணுவமும், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்!

This entry is part 11 of 39 in the series 18 டிசம்பர் 2011

– கெரபொத்தா தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் வரலாற்றில் அதிகமாகத் தண்டனைகள் வழங்கப்பட்ட பூமியை அணைத்தபடி ஏ9 வீதி சாய்ந்திருக்கிறது. பாரிய கலவரமொன்றில் யுத்த டாங்கிகளாலும் கனரக வாகனங்களாலும் துளைக்கப்பட்ட காயங்கள் எக்கணத்திலும் மீண்டும் கிளரப்பட இடமிருக்கிறதெனத் துப்பாக்கிகளும் பங்கர்களும் இராணுவ முகாம்களும் எதிர்வு கூறுகின்றன. முட்புதர்களிடையே ஒளிந்திருக்கும் நிலக்கண்ணி வெடிகள் குறைந்தபட்சம் ஒரு பனங்காயாவது தனது உடலின் மீது விழும்வரை காத்திருக்கின்றன. நாற்புறத்திலும் கேட்கும் சிங்களக் குரல்கள் ‘இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாகவல்ல, நிரந்தரமாகத் தங்குவதற்கே’ எனக் […]

“சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”

This entry is part 6 of 39 in the series 18 டிசம்பர் 2011

கருநாடக மாநிலம் டும்குர் மாவட்டம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் மதச்சடங்கொன்று சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதன் பெயர் “மடே ஸ்னானா”. இச்சடங்கில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளின்மேல் உருண்டு அவ்வெச்சில்கள் தம்மேல் படும்போது சுப்பிரமணிய சுவாமியின் அனுக்கிரகம் கிடைத்து தோல்வியாதிகளும் மற்ற பரிகாரபலன்களும் கிடைக்குமென்பதே அந்த நம்பிக்கை. இது காலம்காலமாக தொடரும் உற்சவம். இது போக, இன்னும் உடுப்பி மாவட்டத்தில் ஒரு ஊரில் பிராமணப் பெண்களின் ‘கழிவுத்துணிகளை’ தலித்துகள் மட்டுமே சேகரித்து துவைத்து கொடுக்கும் […]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 23

This entry is part 5 of 39 in the series 18 டிசம்பர் 2011

நமது வாசிப்பில் “ஹகூயின்” என்னும் பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜென் ஆசானின் பதிவில் ஒரு வெளிப்படையான நேரடியான கருத்துப் பரிமாற்றத்தைக் காண்கிறோம். ZAZEN பாடல் (ஜஜேன் என்பது பத்மாசனத்தில் பலரும் ஒன்றாய் அமர்ந்த்து தியானம் செய்யும் முறை ஆகும்) —————— எல்லா உயிர்களும் அடிப்படையில் புத்தர்களே தண்ணீரையும் பனிக்கட்டியையும் போல தண்ணீரில்லாமல் பனிக்கட்டி இல்லை ஏனைய உயிர்களிடமிருந்து பிரிந்த புத்தர்கள் இல்லை தமக்கு எவ்வளவு நெருங்கியது இவ்வுண்மை என்றறியாமல் தொலைவில் எங்கேயோ தேடுகிறார்கள்; பரிதாபம்! […]

குரான் – ஞானப் புகழ்ச்சி மொழிபெயர்ப்பின் அரசியல்

This entry is part 43 of 48 in the series 11 டிசம்பர் 2011

ஹெச்.ஜி.ரசூல்   ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா என்பது குறித்த கட்டுரையின் பின்னூட்டங்கள் தொடர்பாகவும் அவற்றில் முன்வைக்கப்பட்ட நண்பர்கள் குளச்சல் மு.யூசுப்,சுவனப்பிரியன்,ஓ.நூருல் அமீன்,காவ்யா,தங்கமணியின் இப்பொருள்தொடர்பான விவாதங்களுக்கு மட்டும் எனது சில நிலைபாடுகளை முன்வைக்கவிரும்புகிறேன்.   1)இணையத்தில் நிகழ்த்தப்பட்ட விவாத தலைப்பின் முதன்மை பீர்முகமது அப்பாவின் ஞானப்புகழ்ச்சி பாடல்கள் இறைவேதத்திற்கு ஒப்பாகுமா என்பதாக இருந்தது. எனவேதான் பீர்முகமது அப்பாவின் ஞானப்புகழ்ச்சி பாடல்கள் இஸ்லாத்தைப் பேசுகிறா,இறைவேதத்தின் சாரம் அதில் உள்ளதா இல்லையா என்பது பற்றி விவாதம் தொடர நேரிட்டது.   2) இறைவேதத்தின் […]

அணுமின்னுலைக் கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும் -1

This entry is part 44 of 48 in the series 11 டிசம்பர் 2011

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா நாம் எல்லோரும் புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சிக்கலான இந்தப் பூகோளத்தில் புகுத்தப்பட்டு இருக்கிறோம். மாபெரும் முழுவடிவக் கூண்டின் ஒரு சிறு பகுதியாக மனித இனத்தை எடுத்துக் கொண்டால், சூழ்வெளிக்கு என்ன என்ன தீங்கெல்லாம் நாம் விளைவிக்கிறோமோ, அவை யாவும் நம்மீதே மீண்டும் விழுகின்றன என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது ! ஏனென்றால் நாம் சூழ்மண்டலத்தின் இறுகிய பிடியிலிருந்து நம்மை என்றும் பிரித்துக் கொள்ளவே முடியாது ! […]

அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்

This entry is part 48 of 48 in the series 11 டிசம்பர் 2011

1999-ம் வருடம். டிஸம்பர் மாத முதல் வாரத்தில் ஒரு நாள் காலை. தில்லியில் கழித்த ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கை அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு, தில்லியை விட்டுப் பிரிய மனமில்லாது சில வருடங்கள் கழிந்தன. இருந்தாலும் சிறு வயதில் பதிந்திருந்த தமிழ் வாழ்க்கையின் காட்சிகள், மனிதர்கள், உறவுகள் மனதில் அவ்வப்போது திரையோடும். இழந்து விட்டவை அவை. நினைவுகளாகவே ஜீவிப்பவை. இருப்பினும் தமிழ் நாடு இழந்துவிட்ட தாயின் மடியைப் போல சோகத்தோடு தான் நினைவுகளைக் கிளறும். […]

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு -1 Che Guevara – A Revolutionary Life , by Jon Lee Anderson

This entry is part 45 of 48 in the series 11 டிசம்பர் 2011

Che Guevara – A Revolutionary Life , by Jon Lee Anderson வாழ்க்கைச் சரிதைகள் சலிப்பூட்டும் வகையில் ஒரே புகழ்ச்சி மயமாக இருக்கும். இலலையென்றால், சர்ச்சைக்குரிய நிகழ்வுகள்(?) அங்கங்கே வேண்டுமென்றே வீசப்பட்டு, கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளின் தொகுபபாக, சில புகழ் விரும்பிகளின் உழைப்பாக பதிக்கப்படும். இரண்டுக்கும் மத்தியிலே, எதைப்படிப்பது என்பது கத்தி மேல் நடப்பதைப் போல. பல சரித்திர நாயகர்களின் வாழ்வுச்சரிதைகள் இப்படித்தான் வருகின்றன. செ குவாரா இந்த விசயத்தில் சற்றே அதிர்ஷ்டமானவர். ஜோன் லி […]

புத்தகம் பேசுது

This entry is part 46 of 48 in the series 11 டிசம்பர் 2011

சமீபத்தில் சென்னையில் உள்ள இந்திய அளவில் பிரபலமான சங்கிலி தொடர் கொண்ட (Chain of Book Stores) ஒரு புத்தக கடைக்கு செல்ல நேர்ந்தது. குளிரூட்டப்பட்டு மிக நேர்த்தியாக புத்தகங்கள் தலைப்பு வாரியாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தது. கடையை சுற்றி சுற்றி வந்தேன். நான் தேடியதை காணோம். இரசீது போட்டுக்கொண்டிருந்த யுவதியை பார்த்து “ஏங்க, இந்த தமிழ் புத்தகங்கள் எல்லாம் எங்க இருக்கு?” என்று கேட்டேன். வேற்று கிரக வாசியை பார்ப்பது போல் பார்த்தார். என்னை அந்த சூழலில் […]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 22

This entry is part 3 of 48 in the series 11 டிசம்பர் 2011

‘அ’ , ‘ ஆ’ ஒரே நாட்டைச் சேர்ந்த இரு படை வீரர்கள். இருவரும் காட்டு வழியே போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மரத்தைக் கடந்து போகும் போது ‘அ’ சற்று முன்னே சென்று விட்டான். அப்போது ‘ஆ’ அந்த மரத்தின் ஒரு கிளையில் ஒரு கேடயம் தொங்குவதைப் பார்த்தான். அது பச்சை நிற வண்ணம் பூசப் பட்டிருந்தது. முன் சென்று விட்ட ‘அ’ வை ‘ஆ’ அழைத்து ” பாரப்பா ஆச்சரியத்தை! கேடயத்துக்கு வண்ணம் பூசப் […]

புதிய சிற்றிதழ் ‘ குறி ‘ – ஓர் அலசல்

This entry is part 1 of 48 in the series 11 டிசம்பர் 2011

புதிதாக சிற்றிதழ்கள் உலகத்தில் ஜனித்திருக்கிறது இரண்டாவது இதழ் என் கைகளில்.. தெரிந்தவர் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன். அட நம்ம கவியோவியத்தமிழன். திண்டுக்கல் காரர். வித்தியாசமான சித்திரங்கள் வரைவதும், அழகான கையெழுத்தில் சிற்றிதழ்கள் ( அவைகளுக்கு சொற்ப ஆயுள்தான் என்றாலும்) வெளியிடுவதும் அவர் வழக்கம். இதழில் சா. கந்தசாமியின் ‘ எதிர்ச்சொல் ‘ சிறுகதை. வர்ணனைகளுக்கு முக்கியத் துவம் கொடுத்து ஏறக்குறைய கதை ஏதும் இல்லாத கதை. முதல் இதழில் சுஜாதாவின் ‘ நகரம் ‘ போட்டிருந்தார்களாம். […]