வாழ்க்கைப்பயணத்தில் கனவுகளை  நனவாக்கிய விலங்கு மருத்துவர் நடேசனுக்கு இம்மாதம் 70 வயது !!  

தன்னார்வத் தொண்டர் இலக்கியவாதியான கதை !!                                                                                                                                   முருகபூபதி இலங்கை வடபுலத்தில்   ஐந்து தீவுகள்   சங்கமமாகும்  இந்து சமுத்திரக்கரையோரத்தில்   ஒரு  காலத்தில்    விரல்விட்டு  எண்ணக்கூடியளவு   வாழ்ந்த   மக்களின்  பூர்வீகம் எழுவைதீவு     கிராமம். பனையும்  தென்னையும்   பயன்தரு   மரங்களும்   மட்டுமல்ல  ஆர்ப்பரிக்கும் கடலின்  உணவுகளும்தான் அந்தக்கிராம மக்களுக்கு  வாழ்வளித்தன. ஒருகாலத்தில்   தீப்பெட்டிக்கும்  எண்ணெய்க்கும்  உப்புக்கும்  மாத்திரம்  கடைகளை   நாடிச்சென்ற  அந்தச்சிற்றூர்  மக்களுக்கும் கனவுகள்  இருந்தன. மின்சார வசதியில்லாத அக்கிராமத்து   மக்களுக்கு தமது       பிள்ளைகளின் எதிர்காலம்   குறித்து   கனவுகளும் […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 331ஆம் இதழ்

This entry is part 11 of 11 in the series 1 டிசம்பர் 2024

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 331ஆம் இதழ், 24 நவ்., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் கலை ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி – கே.வி. கோவர்தனன் இலக்கியம்/கருத்து இரு முனைக் கத்தி  – அருண் கோலட்கர் – ஆர். சீனிவாசன் கனடா! கனடா! –  ஜெகதீஷ் குமார் அறிவியல் ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-3 – அருணாசலம் ரமணன் மூன்றாம் […]

இடிந்த சுவரும் மடிந்த உயிர்களும் 

This entry is part 10 of 11 in the series 1 டிசம்பர் 2024

யசோதா சரவணன் மேட்டுப்பாளையம் மேடுகளும் பள்ளங்களுமாகவே  வாழும் மக்களின் வாழ்நிலைகளும் உயர்சாதி பணக்காரனின் வீடோ மேட்டுப்பகுதியில் அதை இருபது அடி உயரமுள்ள கருங்கல் சுற்றுச்சுவர் காவல் காத்தது. அதையொட்டிய தலித்துகளின் வீடுகளோ கழிவுநீர் வாய்க்காலுக்கு அருகில் தாழ்வான பகுதிகளில். கருங்கல் சுவற்றின் துளைகளில் கசியும் கழிவுநீரும், வாய்க்காலில் வழிந்தோடும் மழைநீரும்  கழிவுநீர் வாய்க்காலில் கரைபுரண்டு ஓடும்போது அவர்களின் ஹாலோபிளாக் வீடுகளின் அஸ்திவாரங்களை கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. அவர்கள் அடுக்குமூட்டையில் அடி மூட்டைகளாய் இருக்கும் அருந்ததியர்கள். சுற்றுச்சுவருக்கு  ஒற்றைச் […]

சாகித்திய ரத்னா  விருது பெற்ற பெண் ஆளுமை –   ‘ யாழ்நங்கை’ அன்னலட்சுமி இராஜதுரை

This entry is part 6 of 11 in the series 1 டிசம்பர் 2024

                                                                             முருகபூபதி இலங்கையில் அண்மைக்காலத்தில் சில அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.  நீண்ட இடைவெளிக்குப்பின்னர் ஒரு பெண் பிரதமராகியிரு;க்கிறார். அவர்தான் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. அத்துடன் இருபதிற்கும் மேற்பட்ட  பெண்கள் இலங்கை நாடாளுமன்றத்திற்கு  புதிதாக தெரிவாகியிருக்கிறார்கள். இச்செய்திகளின் பின்னணியில் தற்போது மற்றும் ஒரு இலக்கியச் செய்தி வெளியாகியிருக்கிறது. நாம் அன்னக்கா என பாசமுடன் அழைக்கும் இலங்கையின் மூத்த படைப்பாளியும் பத்திரிகையாளருமான  திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்களுக்கு  இம்முறை சாகித்திய ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. செய்தி […]

 “ என்றும் காந்தியம் “

This entry is part 1 of 7 in the series 24 நவம்பர் 2024

 சுப்ரபாரதிமணியன்  இன்றைய கவிதை உலகம் சூரியனுக்கு கீழ் உள்ள சகலத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. இன்றைக்கு இருக்கிற சாதி அதிகாரம்,  தொழில்நுட்ப அதிகாரம் பற்றியும் கவிதை உலகம் விமர்சிக்கிறது..   வார்த்தைகளின் கூட்டமாக பல கவிதைகள் உற்பத்தியாகி வருகின்றன. ஆனால் கவிதை பற்றிய அரசியலும் அதன் தளங்களும் கொண்டு இயங்குகிற கவிதைகள் எனக்கு பிடித்திருக்கின்றன.. நையாண்டி தனம் என்பது இன்றைய கவிதையின் முக்கியமான விஷயமாக எனக்கு படுகிறது படைப்பாளன் வாசகன் இரண்டு பேர் இணையும்  விஷயங்கள் தான் வெற்றி பெற்ற கவிதைகள் ஆகின்றன. . கவிதைகளில் பலம் தினசரி வாழ்க்கையின்   அனுபவங்களை,  அதிர்வு கொண்ட விஷயத்தை இணைப்பதுதான்.. கிராமங்களும் அதன் சுற்றுச்சூழல் சார்ந்த […]

கனடாவில் கார்த்திகைக் காந்தளும் பாப்பி மலரும்

This entry is part 2 of 3 in the series 10 நவம்பர் 2024

குரு அரவிந்தன் கனடாவில் நினைவுதினம் என்பது போர்க்காலத்தில் நாட்டுக்காக உயிர் தந்தவர்களையும், அக்காலத்தில் போர்முனையில் தம் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியவர்களையும் கௌரவிக்கும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி அனுசரிக்கப்படுகின்றது. இதில் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த மரணித்த போர் வீரர்களும் அடங்குவர். இந்த வாரம் முழுவதும் கனடியர்கள் சிகப்பு நிறத்திலான பாப்பி மலர்களை அணிவதன் மூலம் மரணித்தவர்களை நினைவேந்தல் மூலம் கௌரவிக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த மொய்னா மைக்கேல் என்பவர்தான் சிவப்பு பாப்பி […]

ஞாலத்தைவிடப் பெரியது எது?

This entry is part 1 of 6 in the series 3 நவம்பர் 2024

கோ. மன்றவாணன் பின்இரவு நேரம். சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது. கோழிக் கோட்டில் இருந்து மஞ்ஞேரி நோக்கி அந்தப் புதிய மகிழுந்து பறக்கிறது. பின்னிருந்து துரத்தும் நிலாவால் அந்தக் காரை முந்த முடியவில்லை. இன்னும் வேகத்தை அதிகப் படுத்துவதற்காக உடலை அசைத்து நேராக அமர்கிறார் அதன் ஓட்டுநர். அதே நேரத்தில் திடீரெனச் சாலையின் குறுக்கே கை அசைத்தபடி ஒரு முதியவர் ஓடி வருகிறார். மின்னல் எனத் திசைமாற்றியை இடது பக்கம் ஒடித்து, வலது பக்கம் திருப்பி நிறுத்துக் கட்டையை […]

பெருந்திணை மெய்யழகா?

This entry is part 3 of 5 in the series 6 அக்டோபர் 2024

சோம. அழகு நான் வெகுவாக ரசித்து ரசித்துக் கழுவி ஊற்றிய ‘96’ திரைப்படத்தின் இயக்குநரது அடுத்த படம் ஒரு நல்ல மலையாளப் படம் போல இருப்பதாகச் சிலர் சொன்னதைக் கேட்டு காணச் சென்றேன். திரு. கமல் அவர்கள் பாடிய பாடலோ வேறொரு பிம்பத்தைத் தந்தது. சொந்தங்கள், பந்தங்கள், பாசங்கள், நேசங்கள், துக்கங்கள், துயரங்கள் என முகம் பதினெட்டு கோணலாகும் வரை கிட்னி, கணையம், கல்லீரல், மண்ணீரல் எல்லாவற்றையும் பிழி பிழியென்று பிழிந்தெடுக்கப்போகிறார்கள் என்ற என் எண்ணம் தவிடு […]

வக்கிர   வணிகம்

This entry is part 1 of 3 in the series 28 ஜூலை 2024

         சோம. அழகு             நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலம். “என்ன இது? இவங்களுக்கெல்லாம் வேற கதையே தெரியாதா? பெண் பிள்ளையைக் கடத்திக் கொண்டு போற மாதிரியே எடுத்துத் தொலையுறாங்க?” – அப்போது தொடர்ச்சியாக வந்த அவ்வகைத் திரைப்படங்கள் குறித்து சற்று காட்டமாகவே அடிக்கடி சலித்துக் கொள்வார்கள் அப்பா. சலிப்பு என்றெல்லாம் சாதாரணமாக வரையறுத்து விட முடியாது அப்பாவின் அவ்வுணர்வை. “திரைப்படம்தானே? நல்லாருக்கு; நல்லா இல்ல. அவ்வளவுதானே? இதற்கு ஏன் இவ்வளவு எரிச்சல்?” எனத் தோன்றும் […]

தலாத்து  ஓயா  கே. கணேஷ் (1920 – 2004 )

This entry is part 2 of 5 in the series 21 ஜூலை 2024

காலமும் கணங்களும் :  இலக்கிய  உறவில்  ஒரு ஞானத்தந்தை    தலாத்து  ஓயா  கே. கணேஷ் (1920 – 2004 ) நூற்றாண்டு கடந்தும் பேசப்படும் இலக்கிய ஆளுமை பற்றிய நினைவுகள் !                                                                        முருகபூபதி  பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து “ அப்பா…நாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப் பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதே…பரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது ” என்றாள். தேநீரின் […]