தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ஆனால் வேலைக்காரர்கள் சாப்பிட்டு ஆயிற்று என்று தெரிந்ததும் நான் சமையல் கூடத்துக்குள் போனேன். எவர்சில்வர் வாஷ்பேசினை எமிலி சுத்தம்செய்து கொண்டிருந்தாள். மேரி ஆன் கழுவிக் கொண்டிருந்தாள். ”சொல்லுங்க, திரிஃபீல்ட் தம்பதிக்கு என்ன குறை?” என்று நான் கேட்டேன். மேரி ஆன் பதினெட்டு வயதில் இந்த விகாரேஜுக்கு வந்தவள். நான் சின்னப் பையனாக இருக்கையில் என்னைக் குளிப்பாட்டி விட்டிருக்கிறாள். எனக்குத் தேவைப்பட்டபோது பிளம் ஜாமில் மருந்துப்பொடி குழைத்து சாப்பிடத் தந்து சொஸ்தப்படுத்தி யிருக்கிறாள். (நம்மூர்ப் […]
நீல நரி ஒரு நகரத்தின் அருகில் இருந்த குகையில் ஒரு நரி இருந்தது. அதன் பெயர் சண்டரவன். ஒருநாள் பசியால் வாடிப்போன அந்த நரி இரவானவுடனே இரைதேடப் புறப்பட்டுத் திரிந்தபடியே நகரத்திற்குள் நுழைந்தது. அதைக்கண்டவுடன் ஊர் நாய்கள் பயங்கரமாய்க் குரைத்தன; ஓடிவந்து அதன்மேல் விழுந்து கூரிய பற்களால் கடித்துவிட்டன. குலைக்கும் சத்தம் கேட்டுப் பயந்துபோய், உடம்பெல்லாம் காயங்கள் உண்டாகி, திக்குத் திசை பாராமல் நரி தாவியோடியது. ஓடுகிற ஓட்டத்தில், யாரோ ஒரு சாயப் பூச்சு வேலை […]
“அதோ இருக்கே கூடை! அதிலிருந்து ஆளுக்கு ஒரு பழம் கிடைச்சாத் தேவலை!” “கிடைச்சாத் தேவலைதான்! ஆனா கிடைக்கிறாப்பலேத் தெரியலையே! கூடையைத்தான் ஐயா பக்கத்திலையே வச்சிருக்காரே!” “பக்கத்திலே இல்லாமே தூரத்திலே வச்சிருந்தா மட்டும் நமக்குக் கிடைச்சிடுமா என்ன? ஐயாவாப் பார்த்துக் கொடுத்தாத்தானே சாப்பிட முடியும்?” மேற்கண்ட கசமுசாப் பேச்சு நடந்து கொண்டிருந்த போது கணீரென்று ஒரு குரல் குறுக்கிட்டது. “என்ன? என்ன பேச்சு?” “ஒண்ணுமில்லேய்யா! பசிக்கிற மாதிரி இருந்தது!” கசமுசாக்காரர்களில் ஒருவர் தைரியமாகவே சொல்லிவிட்டார். “பழக் கூடை பக்கத்திலே […]
”ஏம்மா லஞ்ச் பாக்ஸ் ரெடியா..” ”சாக்ஸை எடுத்துக் கொடு.” ”லெமன் ஜூஸ் போட்டுடு.. காஃபி வேணாம்..” டிவி நியூசைப் பார்த்தபடி ஒர் கையில் பேப்பரோடு சொன்னான் ஆனந்த். அரக்க பரக்க ரெடியான மனைவியுடன் பைக்கில் ஆஃபீஸ் கிளம்பினான். முன் பைக்கின் பில்லியனில் இருந்த பெண் அம்சமாக ட்ரெஸ் பண்ணி இருந்தாள் அட… நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா.. ஓவர்டேக் பண்ணியபோது தெரிந்தது அவள் கல்லூரித்தோழி..பானு. சிக்னலில் பக்கம் பக்கமாக நின்ற போது கண்டு பேசி ஒரு காஃபி […]
சியாவ் செங் என்ற சிறுவன், சீனாவின் ஒரு நகரில் தன் தாயுடன் வாழ்ந்து வந்தான். தாய்க்கு உதவியாக, தினமும் வீட்டிற்கு அக்கம்பக்கம் இருக்கும் காட்டுப் புற்களை வெட்டித் தருவான். அதைத் தாய், சந்தையில் விற்று, கிடைக்கும் பணத்தில் உண்ணத் தேவையான அரிசி, டம்பிளிங் என்னும் கொழுக்கட்டை செய்யும் மாவையும், குடிக்கத் தேவையான தேநீர் இலைகளையும் வாங்கி வருவார். ஒரு கோடை காலத்தில், எங்கும் வறட்சி ஏற்பட்டது. எல்லா பக்கங்களிலும் புற்கள் வாடிச் சாய்ந்திருந்தன. ஒரு நாள், தாய், […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அதுண்மையே. எனக்கு சைகிள்விட கற்றுத் தந்தது எட்வர்ட் திரிஃபீல்ட் தான். அப்படித்தான் நான் அவரோடு பழக ஆரம்பித்தேன். பின்சக்கரத்தோடு குட்டிசக்கரம் இணைத்த ‘ஆபத்தற்ற’ சைகிள் கண்டுபிடித்து எத்தனை காலமாச்சோ அறியேன். ஆனால் இந்த கென்ட் மண்ணில் அது ரொம்ப புது ஜாமான். இதை வெச்சிக்கிட்டு ஓட்டிப்போகையில், என்னைக் கடந்து கனமான டயருடன் யாராவது சைகிளில் விர்ரென்று போகையில் ஆவென்று அது கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டிருப்பேன். நடுவயசுக்காரர்கள் இப்பவும் கிண்டலாகப் பேசுகிறார்கள். […]
சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும் ஒரு அரசனின் அரண்மனையில் தனக்கு நிகரில்லை என்னும்படி மிக அழகான பஞ்சணை ஒன்று இருந்தது. அதன் மேல்விரிப்பு மடிப்பின் ஒரு ஓரத்தில் மந்த விசர்ப்பிணி என்னும் ஒரு சீலைப்பேன் இருந்துவந்தது. அரசன் தூங்கும்போது அவனுடைய ரத்தத்தைக் குடித்து அது வளர்ந்தது. பிள்ளையும் பேரனுமாகப் பெற்றெடுத்துப் பெரிய குடும்பமாக வாழ்ந்தது. அரசனின் ரத்தம் குடித்துக் குடித்து அதன் உடம்பு அழகாகவும் புஷ்டியாகவும் காணப்பட்டது. இப்படி இருக்கும்போது ஒரு நாள் காற்றில் அடித்துக்கொண்டு வந்த ஒரு […]
மலர்த் தோட்டத்தினுள் அந்த மலர்ப் பதுமை மெதுவாக நடந்தாள்! குவளையும் முல்லையும்! கனகாம்பரமும் செண்பகமும்! செவ்வந்தியும் செங்காந்தளும்! நீலோத்பலமும் நாகலிங்கமும்! சம்பங்கியும் ரோஜாவும்! எத்தனை மலர்கள்! தோட்டத்திலுள்ள மலர்களைச் சொல்லவில்லை! இவ்வளவும் வனப்புமிக்க அவள் பொன்னுடலில் பூத்திருக்கின்றன! தன் மேனியில் இத்தனை மலர்கள் பூத்திருக்க அவளுக்கு இன்னும் ஆசையைப் பாருங்கள்! மங்களகரமான மஞ்சள் நிறங்காட்டும் சூரிய காந்தியைப் பறித்துக் கொண்டு, “நீ என் முகத்திற்கு இணைதானோ?” என்று கிண்கிணிக் குரலில் கேள்வி எழுப்ப, “இணையெப்படி யாகும் இனியவளே!” […]
(ரெ.கார்த்திகேசு) இருபது மாணவர்கள் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். பேராசிரியர் வேன்டன்பர்க் வழக்கமாக தாமதமாக வருபவர்தான். ஆனால் பத்து நிமிடத்துக்கு மேல் தாமதமாகாது. பதினைந்து நிமிடம் வரை பேராசிரியர் வரவில்லையென்றால் மாணவர்கள் கலைந்து செல்லலாம் என்ற விதி உண்டு. இருந்தும் மாணவர்கள் காத்திருந்ததன் காரணம் வேன்டன்பர்கின் வகுப்பு சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும். அதை எதிர்பார்த்துத்தான்…! அமெரிக்காவின் மிசௌரி பல்கலைக் கழகத்தில் பரவெளி ஆய்வு மையத்தின் ஆய்வுக் கூடத்தில் காத்திருந்த மாணவர்கள் இருபது பேரும் பரவெளிக் கோள்களில் கனிம வளங்கள் பற்றி […]
”எப்பப் பார்த்தாலும் வாங்கின சம்பளம் பூரா ஏதாவது செலவு பண்ணிடுறே. போன மாசம் 4 செட் ட்ரெஸ், மூணாம் மாசம் காஸ்ட்லி கெடிகாரம்., இந்த மாசம் ஷூ., எப்பத்தான் சேமிப்பே.. பாங்க் அக்கவுண்ட்ல ஒரு சேவிங்ஸும் இல்லை. ” ”சம்பளம் இன்னும் அதிகம் வரட்டும்மா.. எப்பப்பாரு டெபாசிட் போடு அப்பிடிங்கிறீங்க. அப்புறம் எப்பத்தான் லைஃபை என்ஜாய் செய்றது”. மகன் வேலைக்கு சேர்ந்து முணு மாதமாக வீட்டில் நடக்கும் வாக்குவாதம்தான் இதெல்லாம். சொல்லிப் பிரயோஜனமில்லை என பால்கனிக்கு காற்று […]