குரூரமான சொர்க்கம்

This entry is part 8 of 54 in the series 4 செப்டம்பர் 2011

ஆங்கிலத்தில்:ஜெய் நிம்கர் [மராத்தி மொழி எழுத்தாளர்] தமிழில்: முனைவர் தி.இரா.மீனா வேர்வை கூந்தலின் ஊடே கோடாய் வழிய ,சேலையை இடுப்பில் செருகியபடி நீலம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது அழைப்பு மணி ஒலித்தது. வசந்த் கதவைத் திறந்து கொண்டு வந்தான். “நீலம் எங்கே இருக்கிறாய்” “ஏன் சஞ்சுவைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறேன்.என்னவாம் ” “முடித்து விட்டாயா? கேட்டவனின் குரலில் அத்தனை பதட்டம் தெரியாவிட்டாலும் ஏதோ சிக்கல் என்று புரிந்தது. “குழந்தைக்கு டிரஸ் போட்டு விடு ” வேலைக்காரப் பெண்ணிடம் […]

காயகல்பம்

This entry is part 6 of 54 in the series 4 செப்டம்பர் 2011

  அவன் ஒரு இளம் விஞ்ஞானி. இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு வாழ்க்கையில் ஒரே ஓர் இலட்சியம். குறிப்பிட்ட ஒரு மருந்தைக் கண்டுபிடித்து விட வேண்டும்! அப்படிப்பட்ட அந்த மருந்துதான் என்ன? பழங்காலத்தில் நம் முன்னோர்களிடம் காயகல்பம் என்ற மருந்து இருந்ததாம்! அதைச் சாப்பிட்டால் வயோதிகர்கள் இளைஞர்களாக மாறிவிடுவார்கள்! இத்தகைய அரிய மருந்தைச் செய்யும் முறை இரகசியமாகவே வைக்கப்பட்டு, முன்னோர்கள் மறைந்த போது அதுவும் மறைந்துவிட்டதாம்! அவர்கள் மட்டும் கொஞ்சம் பரந்த மனப்பான்மை […]

அப்பா…! அப்பப்பா…!!

This entry is part 2 of 54 in the series 4 செப்டம்பர் 2011

எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் அப்பாவின் அடையாளம் வந்து தொற்றிக் கொள்கிறது. அவரை நினைவுபடுத்துவது தன்னின் ஒவ்வொரு செயல்களும்தான். அப்பாவைத் தவிர்க்கவே முடிவதில்லை. வாழ்க்கை முழுவதும் அவருடைய நினைவுகளை விட்டுத் தாண்டவே முடியாது என்றுதான் தோன்றியது. கூடவே இருந்து வழி நடத்துகிறார். அதுதான் உண்மை. அத்தனை எளிமையான வாழ்க்கையில் ஒரு மனிதன் தனக்கான அடையாளங்களாய் இவ்வளவையும் விட்டுச் சென்றிருக்க முடியுமா என்பதுதான் ஆச்சரியம். எந்த எதிர்பார்ப்புமற்ற மிக எளிமையான ஒருவனின் வாழ்க்கை தன்னைத்தானே நிலை நிறுத்திக் கொள்கிறது. […]

முனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930

This entry is part 43 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 2011 >>> அப்படியாய் இருக்கிறது லோகம். நாம் வீட்டில் இல்லாத சமயம். யாரோ தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள். ”சார் இருக்காரா?” – ”இல்லையே, வெள்ல போயிருக்கார்…” – ”அடடா, திரும்பி வந்தால் உடன்னே எனக்குப் பேசச்சொல்றீங்களா?” என்னத்த முக்கியமான விஷயம், அநேகமாய் அவருக்குத்தான் அது அதிமுக்கியமானது, நமக்கல்ல, என்று பிற்பாடு தெரியவரும். நம்மைப் பாராட்டி எவனாவது பரிசளித்தாலோ, எவனாவது நமக்கு உபகாரம் செய்தாலோ, அவன் மனசாரச் செய்கிறான் என்பதில்லை… பல்கடித்து பொருமலை மறைத்து பொறுமை […]

பஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி

This entry is part 42 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தந்திலன் என்ற வியாபாரி   மண்ணுலகில் இருக்கும் வர்த்தமானம் என்ற நகரத்தில் தந்திலன் என்ற வியாபாரி ஒருவன் வசித்து வந்தான் அவனே எல்லா ஊர்களுக்கும் அதிகாரி. நகர அலுவல்களையும், ராஜ்ய காரியங்களையும் அவன் பார்த்து வந்த காலத்தில் எல்லா மக்களும் திருப்தியோடிருந்தனர். அதிகமாகச் சொல்வானேன்? அவனைப் போல் கெட்டிக்காரனை யாரும் கேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. விவேகம் நிறைந்த ஒரு பழமொழி கூறுவதுபோல்:   அரசனுக்கு நன்மை செய்பவன் மக்களின் வெறுப்பைப் பெறுகிறான்; மக்களுக்கு நன்மை செய்பவனை அரசன் கைவிடுகிறான். […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 5

This entry is part 21 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “காரணங்களுக்குச் (Reason) செவி சாய்ப்பவன் மெய்யறிவுக்குச் சரணடைகிறான்.  காரண மெய்யறிவோ தன்னை ஆளுமை செய்ய வலிமை இல்லாத பலவீன மனத்தை எல்லாம் அடிமை ஆக்குகிறது.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Man & Superman) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, […]

நன்றிக்கடன்

This entry is part 16 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தெலுங்கு மூலம்: D.காமேஸ்வரி தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “என்னங்க! உங்க அம்மா பெட்டி படுக்கையை பேக் செய்துகிட்டு இருக்காங்க. எங்கேயாவது போகப்போவதாக உங்களிடம் சொன்னாங்களா?” சாவகாசமாக பேப்பர் பார்த்துக்கொண்டிருந்த செஷாத்ரியிடம் வந்த பத்மா பதற்றத்துடன் கேட்டாள். பேப்பரிலிருந்து தலையை உயர்த்திய சேஷாத்ரி “என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே? எங்கே போகப்போகிறாளாம்? நீயே கேட்டுப் பாரேன்?” என்றான். ”எனகென்ன தெரியும்? அத்தை என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லை. நீங்களே கேளுங்கள்.” நெற்றியைச் சுளித்தாள் பத்மா. “என்ன நடந்தது? மறு […]

உங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்!

This entry is part 14 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

“இது ஒரு புது யுகத்தின் தொடக்கம். வேலியே பயிரை மேய்ந்த காலம் கரைந்து விட்டது. உங்கள் பயிரை நீங்களே அறுவடை செய்யும் யுகம் தொடங்கிவிட்டது! திருமணம், குலம், குடும்பம், என்று பல்வேறு பிணைப்புகளால் கட்டுண்டு கிடந்த உங்கள் வாழ்க்கை, இன்று முதல் அன்பிற்கும் கட்டுப் படட்டும். சமுதாயம், ஒழுக்கம் இவற்றிற்கு பயந்து சிறை பட்டிருந்த அன்பு, இன்று முதல் உங்களுக்கு நெருக்கமானவரிடம் அடிமையாகட்டும். அடக்குமுறைக்கும், சுதந்திரத்திற்குமான போரில் வெற்றி பெற்று, உங்களுக்கெல்லாம் புதிய வாழ்க்கை அளித்த என்னை […]

திருத்தகம்

This entry is part 3 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

பிரசன்னா சண்முகம் முடி திருத்த ஏன் அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்தார்? அவரே இதை பின்னாட்களில் பலமுறை நினைத்து நொந்து கொண்டதுண்டு. இத்தனைக்கும் அது ஒரு ஞாயிறு. மயிறு திருத்த அனைவரும் படையெடுத்து தள்ளுமுள்ளு ஏற்படுத்தும் நாள். இருந்தாலும் அடிக்கும் வெயிலினாலும், நகக்கண் எல்லாம் கருப்பானதாலும் இதற்க்கு மேல் தள்ளி போட முடியாமல் அந்த ஞாயிறுதான் என முடிவெட்ட முடிவெடுத்தார் திரு சண்முகம். அன்று எனப்பார்த்து சில்லரையாக ஐம்பது ருபாய் இல்லாமல் போனது அவர் அப்பா செய்த பாவம் […]

பஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்

This entry is part 45 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

நரியும் பேரிகையும்   ஒரு வட்டாரத்தில் ஒரு நரி இருந்தது. அது பசியால் வாடி தொண்டை வறண்டு போய் இரை தேடியபடி காட்டில் சுற்றித்திரிந்தது. காட்டின் மத்தியில் அரசனின் போர்க்களத்தைப் பார்த்தது. அங்கே நரி ஒரு நிமிஷம் நிற்பதற்குள் பலத்த சத்தம் ஒன்று கேட்டது. அதைக் கேட்டதும் நரிக்கு மனக்கலக்கமும் கவலையும் உண்டாயிற்று. ”ஐயோ, ஆபத்து வந்து விட்டதே! இனி நான் செத்த மாதிரிதான். யார் இப்படிச் சத்தமிடுகிறார்கள்? என்ன மிருகமாயிருக்கக் கூடும்?” என்றது யோசித்தது. இங்குமங்கும் […]