author

ஆலமரத்துக்கிளிகள்

This entry is part 3 of 36 in the series 30 செப்டம்பர் 2012

பச்சை வயல்வெளி .. பக்கத்தில் காவலுக்குப் பனை மரங்கள்…!! —————————————- என்றும் நீ கூண்டில்.. நான் நீதிபதி.. மனசாட்சி.! ————————————– பூமியை அளக்கிறதோ..? நெடுஞ்சாலைகள்..! —————————————– இரவும் பகலும் ஒன்றுதான் உறங்குபவனுக்கு..! ——————————————- மீண்டும் தாய்வீடு… நிம்மதியாய்…. விதைநெல்..! _________________________ வான்மேகங்கள் வேடிக்கை பார்க்கும் பூமியில் சாகசங்கள்..! _________________________ வில்லு போல் உடல் புறப்படும் அம்பு.. குறிகோள்கள்..! _________________________ கரும்புக் காடுகள் இரும்புகளால் முள்வேலி..! _________________________ சிறு புல்லும் நெடு மரமும் எண்ணுமாம் தாங்களே பூமிக்குத தூண்..! […]

ஜென்ம சாபல்யம்….!!!

This entry is part 36 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஏழேழு ஜென்மத்தின் இனிய இல்லறம்…!. இளையவளாய்….பொலிவுடன் புக்ககம் நுழைந்தவள்…! பிழையேதும் அறியாதவள்.. வேரோடு அறுத்து வேறிடத்தில் நட்டாலும்…ஆணிவேர் இல்லாமல் ஆழம்வரை வேர் விடுபவள்..! உறவுகள்…ஊர்வாய்…என.. வகைக்கொரு விமர்சனம்…. புதைகுழியாம் மனக்குழிக்குள்.. மாயமில்லை…தந்திரமில்லை..! மௌனத்தை…மௌனமாய்.. முழுங்கும் வித்தை கற்றவள் கற்ற வித்தை ஏதும்.. துளியும் துணை கொள்ளாதவள்…! குள்ள நரிக் கூட்டத்தின் கூடவே வாழ்ந்தவள்… நச்சுப்பாம்புக் கூடைக்குள் .. மண்ணுள்ளிப் பாம்பு இவள்….! வரமாய் வரவேண்டியதெல்லாம் வினையாய் வந்த வலி ஓங்க…! தாழ் போட்டவள்..இதயத்தை இரும்புச் சிறைக்குள்..! பாலானவள்…மாலையால்.. […]

“ஆத்மாவின் கோலங்கள் ”

This entry is part 17 of 31 in the series 16 செப்டம்பர் 2012

நெடுங்கதை::ஜெயஸ்ரீ ஷங்கர்,தில்லை  அதிகாலை நேரம்…சூரியன் சோம்பல் முறித்து எழுந்து நிமிர்ந்து மூடிய கண்களைத் திறக்கிறான். மெல்ல மெல்ல ஒளிக்கீற்றுகள் கதவைத் தட்ட பூமியும் கண் விழிக்கிறது. நித்யா…நித்யா…. நித்யா !  எத்தனை தடவை கேட்கிறேன்…..சரின்னு ஒரு வார்த்தை  சொல்லேன்….ப்ளீஸ்… படுக்கையை விட்டு எழுந்திருக்காமலே…நேற்று ராத்திரி தான் விட்ட இடத்திலிருந்து மறுபடியும் ஆரம்பித்து தேன்மொழி கெஞ்சிக் கொண்டிருந்தாள். இப்பவே ஆரம்பிச்சுட்டியா…..சும்மா நை…நை…ன்னு என்னை தொல்லை பண்ணாதே…!  கொஞ்ச நேரம் அமைதியா இரேன்..நான் முக்கிய வேலையா இருக்கேன்…இப்போ.. புரிஞ்சுக்கோ. தங்கையை […]

காலம்….!

This entry is part 22 of 28 in the series 9 செப்டம்பர் 2012

ஜெயஸ்ரீ ஷங்கர். வாழ்க்கையை உழும்… காலம்..! ———————— தன்னை யாரெனக் உணர்த்திடும் காலம்..! ————————- பூமியை சிக்க வைத்த சக்கரம்..! காலம்..! ————————— இன்று…! என்பதை நேற்றாக மாற்றும் காலம்..! —————————– பூமி கடந்து சென்ற பாதை காலம். ——————————— கலி முத்தியதால்… அலங்கோலமாய் சிரித்தது… காலம்..! —————————- விதைத்ததை அள்ளிக் கொடுத்தது காலம்..! ——————————– காலன் பார்ப்பதில்லை காலம்..! ——————————— மன ரணத்தை ஆற்றிடும் அருமருந்து காலம்..! —————————– கருவை வளர்த்து கிழமாக்கும் காலம்..! ——————————— […]

ஓடும் பஸ்ஸில் ஒரு நாடகம்..!

This entry is part 24 of 37 in the series 2 செப்டம்பர் 2012

  :ஜெயஸ்ரீ ஷங்கர்,தில்லை. காலங்கார்த்தால ஃபோன் மணி அடித்து எழுப்பியது.  எடுத்ததும்,  அம்மா தான்….விஷயம் பெரிசா ஒன்றும் இல்லை. ஆனால் அழைப்பில் அவசரம். இன்னைக்கு இங்கு ஸ்ரீவாரி கல்யாண உற்சவம் நடக்கப் போறது.. நீயும் எங்களோட கண்டிப்பா வந்து கலந்துககோ. இப்பவே சிதம்பரத்தில் இருந்து கிளம்பினால், சரியாயிருக்கும்…. வா….வந்து கல்யாணத்தைப் பார்த்துட்டுக் கூட நீ கிளம்பிக்கோ பரவாயில்லை. அம்மா ரொம்ப வற்புறுத்தி அழைத்த இடம் புதுச்சேரி. எப்போ கல்யாணம்…?  ன்னு கேட்டேன். அது சாயந்தரமாத்தான்…..ஆனாலும் நீ கார்த்தாலயே வந்துடு….. சரியா… வெச்சுடறேன் […]

காலம்….!

This entry is part 16 of 37 in the series 2 செப்டம்பர் 2012

வாழ்க்கையை உழும்… காலம்..! தன்னை யாரெனக் உணர்த்திடும் காலம்..! பூமியை சிக்க வைத்த சக்கரம்..! காலம்..! இல்லாத ஒன்றை இருப்பதாய்க் சிரிக்கும் காலம்.. இன்று…! என்பதை நேற்றாக மாற்றும் காலம்..! பூமி கடந்து சென்ற பாதை காலம்..! கலி முத்தியதால்… அலங்கோலமாய் சிரித்தது… காலம்..! விதைத்ததை அள்ளிக் கொடுத்தது காலம்..! காலன் பார்ப்பதில்லை காலம்..! மன ரணத்தை ஆற்றிடும் அருமருந்து காலம்..! கருவை வளர்த்து கிழமாக்கும் காலம்..! கேள்வியும் கேட்கும் பதிலும் சொல்லும் காலம்..! ஒளியை இருளாக்கும்.. இருளை… நிலவாக்கும்… […]

நல்லதோர் வீணை..!

This entry is part 5 of 37 in the series 2 செப்டம்பர் 2012

 சிறுகதை:ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம்   மயில்கழுத்து நீலப்பட்டுப் புடவையில் அன்னப்பட்சி ஜரிகை ஜொலிக்க மெல்லிய கொலுசொலி பார்கவியின்  நடைக்கு ஜதிபோட, தலையில் சூட்டிய  பிச்சிப்பூவின் மணம் அவள் கடந்து சென்ற பாதை முழுதும்  மலரின் புகழைப்  பரப்பியது.  “பார்கவி இன்னும் கொஞ்சம் மெல்ல நடவேன்” என்று காதில் அசைந்தாடிய ஜிமிக்கிகள் ரகசியமாய் எச்சரிக்க, மனதைப் பிடுங்கித் தின்ற வெட்கத்தையும் பயத்தையும் ஒதுக்கிவிட்டு பிரார்த்தனையோடு மேடையில் அமர்கிறாள். விரித்திருந்த ஜமுக்காளத்தில் காத்திருந்து, அமர்ந்தவளின் மடியில் தலை வைத்தது  அவளது அருமை […]

வீணையடி நான் எனக்கு…!

This entry is part 5 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம்  மயில்கழுத்து நீலப்பட்டுப் புடவையில் அன்னப்பட்சி ஜரிகை ஜொலிக்க மெல்லிய கொலுசொலி பார்கவியின்  நடைக்கு ஜதிபோட,தலையில் சூட்டிய  பிச்சிப்பூவின் மணம் அவள் கடந்து சென்ற பாதை முழுதும்  மலரின் புகழைப்  பரப்பியது.  “பார்கவி இன்னும் கொஞ்சம் மெல்ல நடவேன்” என்று காதில் அசைந்தாடிய ஜிமிக்கிகள் ரகசியமாய் எச்சரிக்க மனதைப் பிடுங்கித் தின்ற வெட்கத்தையும் பயத்தையும் ஒதுக்கிவிட்டு பிரார்த்தனையோடு மேடையில் விரித்திருந்த ஜமுக்காளத்தில் அமர்ந்தவளின் மடியில் தலை வைத்தது  அவளது அருமை வீணை. அவளின்  வரவிற்காகவே காத்திருந்த […]

வா…எடு…எழுது..படி…பேசும்..கவிதை.!

This entry is part 16 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

என் ஆன்மாவின் கதவிடுக்கில் ஒளிந்து நின்று எட்டிப் பார்க்காதே வெளியே வா….! உன் எண்ணம் இனிமை மழை நீர் போல் தூய்மை உனை மறுக்கும் அதிகாரம் எனக்கில்லை..இதோ பேனாவை எடு…! இயற்கை மேல் வைத்த கண் அளந்து விட்டதோ படித்ததை நினைவூட்டு உன்னுள் உயிர்த்ததை என்னுள் எழுது..! காற்றோடு நாசி நுழையும் தூசியை சிலிகான் செல்களாக மாற்றிப் படி..! நீ இன்று இருந்து எழுதி வைத்தவை… நாளை நான் இல்லாது போனாலும் பேசும்..! மூச்சசைவில்  வாழ்வு… போனதும் சாம்பல்… இருந்தும் மணக்கும் என்னை நினைவூட்டும் இறவாத கவிதை..! ஜெயஸ்ரீ ஷங்கர்.

வானவில்லின்……வர்ணக் கோலங்கள்..!

This entry is part 28 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

(இது ஒரு உண்மை சம்பவத்தை நேரில் கண்டு புனைந்த கதை) மணி நாலாகப் போறது…ஸ்கூல் விட்டு இந்திரா வரும் நேரம். அவளுக்கு ரெடியா ஹார்லிக்ஸ் கலந்து கூடவே கிரீம் பிஸ்கட்டும், சுண்டலும் வைத்து விட்டு, இன்னைக்கு இந்து, என்ன பிரச்சனையைக் கொண்டு வரப் போறாளோ…? எட்டு வயசு தான் ஆறது….மூணாங்கிளாஸ் படிக்கறதுக்குள்ளேயே தினம் ஒரு புகாரோடத்தான் உள்ளே நுழைவாள், இப்பவே இப்படி…என்ற கலக்கத்தோடு எதிர்பார்த்துக் காத்திருந்தாள் ரேகா. வாசலில் ஆட்டோ சத்தம்..கேட்கவும் உற்சாகத்தோடு …இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டாளே..என்று […]