என்னும் சமண்மூகரும் நான்மறையோர் ஏறும், தமிழ்நாடனும், ரகுமரபில் பொன்னும் பெருநம்பி குலச்சிறையும் போய் வைகையின் வாதுகளம்புகவே. 211 [மூகர்=வறியர்; நான்மறை=நான்கு வேதங்கள்; ஏறு=காளை; ரகு=சூரியன்; மரபு=குலம்; வாது=போட்டி; களம்=இடம்] என்று சூளுரைத்த சமணர்களும், நான்கு வேதங்கள் கற்ற ஆண்சிங்கம் ஞானசம்பந்தரும், தமிழ்நாடனாகிய மதுரைப் பாண்டியனும், சூரியகுலத் திலகமான குலச்சிறையாரும் வைகை ஆற்றின் கரையில் வாதுபோர் நடக்கும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர். கனலில்புகும் ஏடுஇறை கண்ணில் மதன் […]
வறுமையில் இருக்கும் என்வயிற்றைக் காலியாக்குகிறேன். குதிரை கனைப்பு தளர்கிறது. வயிறு காலியானால் வாய் எல்லாம் வேள்வி செய்யும் ஒரு குவளை மதுகொண்டு நிரப்பிப்பார் தென்றலில் மயங்காமல் தேடித்தேடிக் கொண்டுவா. பல்லுயிர் ஓம்பப்பழகு. யானையின் துதிக்கையில் தானமாகும் தானியங்கள் களிறுகள் எப்போதும் அசைந்து அசைந்து வயிற்றை நிரப்பிக்கொண்டிருக்கும். அப்பொழுதும் அவற்றின் கவனம் அங்குசத்தின்மீதே இருக்கும். எல்லாமே தேடிப்பார்த்தால் வயிற்றை நிரப்புவதே வாய்ப்பான தொழில்
அந்தக் கவிஞன் கோடுகளை முக்கியமாக நினக்கிறான். அவன் இணைகோடுகள் என எண்ணிக் கரம் கோர்த்தவை குறுக்கு வெட்டுக் கோடுகளாய் மாறியது அவனுக்கு ஒரு சோகம். மணமக்களை இணைகோடுகளாய் என்று வாழ்த்துவது என்றுமே சேர முடியாதவர்கள் என்றுதான் பொருள்படும். அப்படி வாழ்த்தப்பட்டவர்கள் இன்று வழக்கு மன்றப்படியில் நிற்கிறார்கள். தண்டவாளங்களும் மேலே தொங்கும் மின்சாரக் கம்பிகளும்தான் ஆசிரியர் இணைகோடுகள் என்று சொல்லித் தந்தார் இரண்டுமே ஆபத்தானவை. குறுக்கு வெட்டுக்கோடுகளும் வாழ்வில் முக்கியமானவை. அனுபவம் கற்றுத் தருபவை கண்டிப்புகளும் சங்கடங்களும் அனுபவம்தானே […]
மருத்துவர் அவனைக் காலையில் நடக்கச் சொல்லி விட்டார் நோயில்லை தற்காப்புதான் நடக்கும்போதும் சிந்திக்க வேண்டும் என்பது அவன் எண்ணம் அப்போது புதிய கருத்துகளும் கவிதைகளும் தோன்றும் ஆனால் சரியாக நடக்க வேண்டும் நாம் சரியாக நடந்தாலும் வாகனங்கள் மீது கவனம் தேவை. காலைநடையில்தானே இப்போதெல்லாம் வெட்டுகிறார்கள் வலப்புறம் நடப்பதுதான் சிறந்தது என்பார் ஒரு சிலர் நடை என்றால் ஒழுக்கம் என்று பொருள் கூறுவர். இங்கும் பிறரின் நடைகளே நம் நடையை வழி நடத்துகின்றன பொற்கொல்லன் வருவதை ‘விலங்கு […]
வல்லம் தாஜ்பால் நாடறிந்த கவிஞர். கேட்டோர் பிணிக்கும் தகைமையாய் கேளாரும் வேட்ப மொழிவதாய்ப் பேசும் ஆற்றல் உள்ளவர். நகைச்சுவையோடு கருத்துகளை மனத்தில் பதியவைக்கும் கலை கைவரப் பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேலாகப் பழகுதற்கு இனிய மனிதநேயம் மிக்க பொதுவுடைமைச் சிந்தனை கொண்ட கவிஞர். அவருடைய ஆறு கவிதைத் தொகுப்புகளுக்குப் பின் ஏழாவது தொகுப்பாக, “கம்பன் கவியரங்கில்……” என்னும் இந்நூல் வெளிவந்துள்ளது. பல கவிஞர்களின் கவியரங்கக் கவிதைகள் நூலாக வெளிவந்துள்ளன. ஆனால் நானறிந்து இதுபோல நூல் வந்ததில்லை. […]
நெருப்பில் இடப்பட்ட மெழுகு கொஞ்சம் கொஞ்சமாய் உருகிக் கரைந்து இல்லாமல் போகும். மெழுகு முழுதும் கரைந்து போனபின்னும் அந்த இடத்தில் அந்த மெழுகு இருந்ததற்கான அடையாளம் மிஞ்சி நிற்கும். இந்த மெழுகை உவமையாகக் காட்டி ஐங்குறு நூறு ஒரு காட்சியை விளக்குகிறது. தலைவன் ஒருவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையர் வழி செல்கிறான், அங்கே அவர்களுடன் தங்கி இருக்கிறான். பின் ஒரு நாள் அவன் தன் தலைவியை நாடி வருகிறான். அவன் தங்கலை விட்டுவிட்டுப் […]
எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு அண்மையில் வெளியாகி உள்ளது. சொற்கூடல் என்னும் பெயரில் வெளியாகி உள்ள இத்தொகுப்பில் மொத்தம் 25 கட்டுரைகள் உள்ளன. “அம்பேத்கரைப் பயிலுவோம்” முதல் கட்டுரை விருப்பு வெறுப்பின்றி எழுதப்பட்டுள்ளது. எஸ்ஸார்சி இக்கட்டுரையில் கூறுபவை சில புதிய கருத்துகள்தாம். அம்பேத்கர் அரிசனங்கள் கோயிலில் நுழைவதை விட அரசியல் உரிமை பெறுவதுதான் முக்கியம் என்று கருதினார். “there is nothing in the entry of tempies” என்பது அம்பேத்கரின் கூற்று. மேலும் காந்தியடிகளை […]
பண்டைய இலக்கியங்களில் நண்டானது கள்வன், அலவன், ஞெண்டு எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. ஐங்குறுநூறு நண்டைக் கள்வன் எனும் பெயராலே சுட்டிக் காட்டுகிறது. சில நண்டுகளின் மீது புள்ளிகள் இருக்கும். ஆதலால் நண்டைப் புள்ளிக்கள்வன் என்னும் அடைமொழியால் ஐங்குறுநூறு சுட்டிக் காட்டுகிறது. மருதத்திணையின் மூன்றாம் பத்திற்குக் கள்வன் பத்து என்றே பெயராகும். இப்பகுதியில் உள்ள அனைத்துப் பாடல்களிலும் கள்வன் பெயர் காணப்படுவதால் இப்பகுதி கள்வன் பத்து என்னும் பெயரைப் பெறுகிறது. ”முள்ளி நீடிய […]
தண்ணார் மதியக் கவிகைச்செழியன் தனிமந்திரிகாள்! முனிபுங்கவர் ஓர் எண்ணாயிர வர்க்கும் விடாத வெதுப்பு இவனால்விடும் என்பது இழிதகவே. [191] [தண்ணார்மதியம்=குளிர்ச்சியான முழுநிலவு; கவிகை=குடை; விடாத=விலகாத; வெதுப்பு=சூடு; விடும்=நீங்கிவிடும்; இழிதகவு=அறியாமை] ”முழுநிலவின் குளிர்ச்சி போல வெண்கொற்றக் குடை கொண்ட, பாண்டிய மன்னனின் பெருமை உடைய அமைச்சர்களே! சமண முனிவர்கள் எட்டாயிரம் பேர்க்கும் விலகாத இந்த வெப்பநோய் இந்தச் சிறுவனாகிய சம்பந்தனால் நீங்கிவிடும் என்பது அறியாமையே ஆகும்.” ===================================================================================== என்றார்;அவர் என்றலுமே […]
உவரிப்பரு முத்தம் நிரைத்த திருப் பள்ளிச்சிவி கைப்புடை உம்பர்வர கவரிச் சிறுதென்றல் அசைப்ப மிசைக் கொற்றக் குடைவந்து கவிப்பவுமே. [181] [உவரி=கடல்; பரு=பெரிய; பள்ளி=இடம்; சிவிகை=பல்லக்கு; உம்பர்=வானின்தேவர்; கவரி=விசிறி; மிசை=மேல்;கவிப்ப=மூட] கடலிலிருந்து சிந்திய பெரிய நல்ல முத்துகள்கொண்டு இழைக்கப்பட்ட பல்லக்கில் அமர்ந்து வானத்துத் தேவர்கள் எல்லாரும் உடன்சூழ்ந்து வரத்தென்றல் காற்றானது சாமரம் வீச, மேலே வெண்கொற்றக் குடை விரித்து நிழல்தர திருஞானசம்பந்தர் புறப்பட்டார். ===================================================================================== மேகத்தொரு பந்தர் எடுத்து உடுவாம் […]