பஞ்சதந்திரம் தொடர் 21 புத்திகூர்மையுள்ள கிழவாத்து

This entry is part 17 of 48 in the series 11 டிசம்பர் 2011

புத்திகூர்மையுள்ள கிழவாத்து   ஒரு காட்டுக்குப் பக்கத்தில் ஆலமரம் ஒன்று இருந்தது. அதில் பல பெரிய கிளைகள் உண்டு. அங்கு ஒரு வாத்துக் கூட்டம் இருந்து வந்தது. அந்த மரத்தடியில் கோசாம்பி என்றொரு கொடி படர்ந்தது. அதைக் கண்ட கிழவாத்து, ”இந்தக் கொடி ஆலமரத்தைப் பற்றிக்கொண்டு ஏறினால் நமக்குக் கெடுதிதான் உண்டாகும். கொடியைப் பிடித்துக் கொண்டு ஒருவேளை யாராவது மரத்தில் ஏறி நம்மைக் கொல்லலாம். சுலபமாகப் பிடுங்கி யெறிகிற மாதிரி சிறியதாக இருக்கும்போதே, நாம் இந்தக் கொடியைப் […]

மழையின் முகம்

This entry is part 16 of 48 in the series 11 டிசம்பர் 2011

துளி துளியெனத் தூளியில் ஆடிப் பாடுகிறது மழை. பக்கம் பக்கமாய் மணலில் எழுதி கடலில் சேர்க்கிறது காவியமாய். வரையும் சித்திரம் வளர்கிறது விரிகிறது இலையாய் மலராய் மரமாய்.வனமாய். காங்கிரீட் தளங்களில் விழுந்து எழுந்து காயமும் படுகிறது. கொட்டிக் கொட்டி கண்ணாடியில் முகம் பார்க்கிறது மழை. குமரி எஸ். நீலகண்டன்

ஒஸ்தி

This entry is part 15 of 48 in the series 11 டிசம்பர் 2011

குழந்தை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது அவர்கள் எல்லோருமே பிரபல நடிகர்களாகவோ நடிகைகளாகவோ வருவதில்லை. விதி விலக்காக சிலர் வருவதுண்டு. அதற்கும் சில திரையுலக ஞானத்தந்தைகள் அவசியம். சிரிதேவீ அழகான குழந்தையாக இருந்தார். வளர்ந்த பின் குடைமிளகாய் மூக்கு, ஒரு 3டி எ•பெக்டுடன் அவரை பின்னுக்குத் தள்ளியது. பாலச்சந்தர் தத்தெடுத்தபின் தான் ஏற்றமே. மீனாவுக்கு ஒரு ரஜினிகாந்த், ஷாலினிக்கு ஒரு மணிரத்னம். ஆண்களைப் பொறுத்த வரை கமலஹாசனுக்கும் ஒரு பாலச்சந்தர் தேவைப்பட்டார். சமகால நடிகர்களான தசரதன், […]

நிகழ்வுப்பதிவு : இலக்கியச் சிந்தனைக் கூட்டம்

This entry is part 14 of 48 in the series 11 டிசம்பர் 2011

இலக்கியச் சிந்தனை அமைப்பு பல வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது சென்னையில். ஆரம்ப கால கூட்டங்கள், அவர்கள் மார் தட்டிக் கொள்ளும்படியாக சிறந்த படைப்பாளிகள் பங்கு பெற்ற கூட்டங்களாக இருந்தன என்று அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். செட்டியார்களின் கொடையில் நடந்து வரும் அமைப்பு அது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு அன்று ஏ வி எம் ராஜேஸ்வரி திருமணக்கூடத்தில் ஆண்டு விழா நடைபெறும். அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைகள் பன்னிரெண்டு புத்தகமாகப் போடப்படும். பன்னிரெண்டில் சிறந்த கதைக்கு […]

மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 4

This entry is part 13 of 48 in the series 11 டிசம்பர் 2011

ஆண்டையிடத்தில் ஒருவித அச்சம் அவனுக்கு இருந்தது. அந்த அச்சம் தலைமுறை தலைமுறையாக அவனுடைய முன்னோர்களுக்கு மட்டுமல்ல அவனுடைய இனத்தோடும் பயணித்துவந்தது. அதை பராமரிக்கின்ற வகைமையை எல்லா எஜமானர்களையும்போலவே தீட்சதரும் தெரிந்துவைத்திருந்தார்.”. 6. வெயில் சற்று மட்டுபட்டதுபோலிருந்தது. தலையிற் கட்டியிருந்த சவுக்கத்தை அவிழ்த்து முகத்தைத் துடைத்தான். மார்பைத் துடைக்க எத்தனித்தபோது முந்திரிப்பழம்போல வயிற்றில் புடைத்திருந்த தொப்புளைப்பார்க்கக்கூச்சமாக இருந்தது வெட்கப்பட்டான். இனி வெட்கப்பட்டு ஆவதென்னவென்று சமாதானமும் செய்துகொண்டான். தீட்சிதருக்குகூட அப்படியொரு தொப்புளுண்டு ஆனால் அவருக்கு தொப்புளான் என்ற பெயரில்லை. இவனுடைய […]

புத்தகம் பேசுது

This entry is part 46 of 48 in the series 11 டிசம்பர் 2011

சமீபத்தில் சென்னையில் உள்ள இந்திய அளவில் பிரபலமான சங்கிலி தொடர் கொண்ட (Chain of Book Stores) ஒரு புத்தக கடைக்கு செல்ல நேர்ந்தது. குளிரூட்டப்பட்டு மிக நேர்த்தியாக புத்தகங்கள் தலைப்பு வாரியாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தது. கடையை சுற்றி சுற்றி வந்தேன். நான் தேடியதை காணோம். இரசீது போட்டுக்கொண்டிருந்த யுவதியை பார்த்து “ஏங்க, இந்த தமிழ் புத்தகங்கள் எல்லாம் எங்க இருக்கு?” என்று கேட்டேன். வேற்று கிரக வாசியை பார்ப்பது போல் பார்த்தார். என்னை அந்த சூழலில் […]

வெளிச்சம்

This entry is part 12 of 48 in the series 11 டிசம்பர் 2011

அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி வெளியே தென்படாதது எங்கு, எப்பகுதியலது தேடினாலும் தென்படாதது அலங்காரங்களற்ற விழிகளில் இருளை விடவும் அனேகமானவை வெளிச்சத்தில் மறைந்துபோகும் தென்படாமலேயே – இஸுரு சாமர சோமவீர தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

மணிமேகலை குறித்தான பயிலரங்கை14-12-2011 முதல் 23.12.2011 வரை

This entry is part 11 of 48 in the series 11 டிசம்பர் 2011

அன்புடையீர் செம்மொழித் தமிழாய்வுநிறுவனமும் திருச்சிராப்பள்ளி செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து பத்துநாள் -மணிமேகலை குறித்தான பயிலரங்கை14-12-2011 முதல் 23.12.2011 வரை நடத்த உள்ளன. ஆய்வறிஞர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் அனைவரும் பங்கு கொள்ள வரவேற்கிறோம்

வெண்மேகம்

This entry is part 10 of 48 in the series 11 டிசம்பர் 2011

பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது.பால்காரனின் மணிச்சத்தம் அருகாமையில் கேட்டது.நாளிதழ் போடும் பேப்பர் பையன் வீசிய தினசரி கதவில் மோதி கீழே விழுந்து டொப் என்ற சத்தத்தை எழுப்பியது;எழுந்து போய் எடுத்து படிக்க ஆரம்பித்துவிட வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டது சங்கரனுக்கு.எழுந்து தினசரிக்குள் மூளையை திணிக்காவிட்டால்,மனம் கவலை கொள்ள ஏதவதொரு பிரச்சனையை கொண்டு வந்து அதைச் சுற்றியே சுழல ஆரம்பித்துவிடும்.பேப்பரில் அச்சியப்படும் செய்திகளை உருவாக்குகிறவர்களாக சில நபர்கள் நாட்டில் இருக்கிறார்கள்;பல பேர் அதனைப் படிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்,அதில் சங்கரனும் ஒருவன். திரும்பவும் […]

வெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்

This entry is part 9 of 48 in the series 11 டிசம்பர் 2011

இந்தப் பதிவை வாசிக்கும் முன், இதே திண்ணையில் பழைய இதழ்களிலிருந்து எனது‘வெந்நீர் ஒத்தடம் – 1”ஐ வாசித்தீர்களேயானால் ‘முதல் பக்கங்கள் கிழிந்துபோன பழைய நாவல் படிக்கும்’ அயர்ச்சி நேராமல் தவிர்க்கலாம். என் வலது கை சுட்டு விரலைப்பற்றிப் புகழ்ந்து நானே சொன்னால் நல்லாயிருக்காது. அவ்வளவு அழகாக இருக்கும். வெண்டைக்காயைப் போல நீண்டு, ஆர்டர் கொடுத்து செதுக்கி வாங்கியதுபோல கவர்ச்சியாய் மிருதுவாய் இருக்கும். கொஞ்சம் மருதாணி இட்டு நகத்தின் நுனியை பிறைபோல நருக்கி ரோஸ் நிறத்தில் நகச்சாயம் பூசிவைத்தால், […]